search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Cinema"

    • ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கவுள்ளார்.
    • பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த "ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்" நிறுவனம் தயாரிக்கவுள்ளது

    2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்து ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கவுள்ளார். இச்சமூதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த "ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்" நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் , அறிமுக இயக்குனர் "பிளாக் ஷீப்" கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.

    பிளாக் ஷீப் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில், "ஜோ" திரைப்படத்தின் வெற்றி ஜோடியான ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைகிறார்கள். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு, சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு, என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணியில் இப்படம் உருவாக உள்ளது. இந்த வருட பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைப்பெற்றது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார்.
    • படத்திற்கு ”Bloody Beggar” என தலைப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளிவில் 600 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு ஃபிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார்.

    அந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் தகவலை இன்று வெளியிட்டார். நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    படத்திற்கு "Bloody Beggar" என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் ரிவீலிங்க் வீடியோவை நகைச்சுவை பாணியில் நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, கவின், சிவபாலன் ஆகியோர் நடித்து வெளியிட்டுள்ளனர். வீடியோ காட்சிகள் தற்பொழுடு வைரலாகி வருகிறது.

     

    கவின் தற்பொழுது நடித்து இருக்கும் ஸ்டார் படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருகிறார் கவின்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடைசியாக அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற தலைப்பில் ஒரு படமெடுத்திருந்தார்.
    • இந்த சீரிஸ் வருகிற 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட சில ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் வசந்த பாலன். ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், வெயில் படத்திற்காக தேசிய விருது வென்றார். கடைசியாக அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற தலைப்பில் ஒரு படமெடுத்திருந்தார். கடந்த வருடம் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

    இந்த நிலையில் தற்போது வெப் சீரிஸில் இறங்கியுள்ளார். இந்த சீரிஸீன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கிஷோர் மட்டும் தமிழ் குரல் என்ற செய்தித்தாள் வாசிக்கும் படியான புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.

    இந்த சீரிஸிற்கு 'தலைமைச் செயலகம்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராதிகா மற்றும் சரத்குமார் அவர்களது ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த சீரிஸை தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

    சீரிஸின் டீசரைப் பார்க்கையில் ஒரு அரசியல் கட்சி தலைவன், ஒரு சம்பவத்தின் நீதிக்காக குற்றங்கள் செய்து, அதனால் மரண தண்டனை வரை செல்கிறது. அது என்ன சம்பவம், என்ன குற்றம் அந்தத் தலைவன் செய்தான் என்பது விரிவாக இந்த சீரிஸ் சொல்வது போல் தெரிகிறது.

    இந்த சீரிஸ் வருகிற 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2015-ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி.
    • இந்த நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது

    கடந்த 2015-ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம், உலக அளவில் ரூ.600 கோடியைக் கடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017-ம் ஆண்டு வெளியாகி முதல் பாகத்தை விட அதிக வசூல் ஈட்டியது. உலகமுழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    இந்த நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது. 'பாகுபலி: கிரவுன் ஆப் பிளட்' என்ற தலைப்பில் வருகிற 17-ம் தேதி டிஸ்னி- ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இந்த சீரிஸின் கதை பாகுபலி படத்தின் முன் நடிந்த கதையைப் பற்றி என தெரிவித்துள்ளனர்.

    இந்த வெப் சீரிஸை ராஜ மௌளி மற்றும் ஷரத் தேவராஜன் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஷரத் தேவராஜன் இதற்கு முன் தி லெஜண்ட் ஆஃப் அனுமன் அனிமேடட் சிரீஸை இயக்கியவர். அது மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    'பாகுபலி கிரவுன் ஆப் பிளட்' அனிமேடட் சீரிஸில் பாகு மற்றும் பல்வால்தேவாவின் வாழ்க்கையின் ரகசியத்தை பிரதிபலிக்கும் வகையில் மற்றும் நீண்ட நாட்களுக்கு முன் மறைக்கப்பட்ட உண்மைகளும் , மகிஷ்மதி சாம்ராஜியத்தின் பற்றிய ரகசியங்களை பல டிவிஸ்டுகளுடன் இந்த சீரிஸ் இருக்கும் என ராஜ மௌளி தெரிவித்துள்ளார். இந்த சீரிஸின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது .

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தில் அர்ஜூன் தாஸ் சித்த மருத்துவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

    மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கியவர் சாந்தகுமார். அடுத்ததாக 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    படத்தின் கதாநாயகனாக அர்ஜூன்தாஸ், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூபில் இதுவரை 20 லட்ச பார்வையை ரசவாதி டிரைலர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தில் அர்ஜூன் தாஸ் சித்த மருத்துவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக் கொண்டிருக்கிறது. போன்ற கதைப்பின்னணியில் அமைந்துள்ளது.

    படத்தின் முதல் பாடலான சாரல் சாரல் பாடலின் வீடியோ தற்பொழுது யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்பாடலில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் அர்ஜூன் தாஸ் இருவருக்கும் உள்ள காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாடல் காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் படங்களில் குறைவாக நடிப்பது ஏன்?
    • தேர்தலில் வாக்களிக்க வராதது ஏன்?

    பிரபல பார்வையற்ற மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு படமான 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜோதிகாவும் நடித்துள்ளார். படத்தை துஷார் இயக்கி உள்ளார்.

     இப்படம் அடுத்த மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், ஜோதிகாவிடம் தமிழ் படங்களில் குறைவாக நடிப்பது ஏன்? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஜோதிகா, `தமிழில் நிறைய படங்கள் நடித்துள்ளேன். என்னுடைய நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு கதைக்களம் அமையவில்லை.

    உதாரணத்திற்கு `காதல் தி கோர்' மாதிரி பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் கதை அம்சம் கொண்ட படம் மற்ற மொழி திரைப்படங்களில் உள்ளது. இதுபோன்று தமிழ் திரைப்படங்களிலும் இருந்தால் நன்றாக இருக்கும். இதுபோல் இல்லாமல் ஒரே மாதிரியான கேரக்டரில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை என்றார்.

    அதைத்தொடர்ந்து நிறைய இடங்களில் சமூக பொறுப்புகள் குறித்து எல்லாம் பேசுகிறீர்கள் ஆனால் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கவில்லை என்று பலரும் கருதுகிறார்கள் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, `நான் எப்போதுமே வாக்களித்துள்ளேன்.

    ஆனால் சிலநேரங்களில் வேலை நிமித்தமாக வெளிநாடுகளிலோ அல்லது வேறு வேலைகளிலோ ஈடுபட்டிருந்தால் மட்டும் வாக்களிக்க இயலாமல் போயிருக்கலாம். இருப்பினும் வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் தானே என்று கூறினார்.

    • தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களிலும் மால்களில் உள்ள திரையரங்குகளில் இன்று ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது

    சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பு சார்பில் அவ்னி சினிமாக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். மே 3 { இன்று} திரையரங்குகளில் வெளியானது. நேற்று திரைப்பிரபலங்களுக்கு திரைமுன்னோட்டம் காட்சியிடப்பட்டது. அதைப் பார்த்த அனைவரும் படம் நன்றாகவுள்ளது என கருத்துக்களை பகிர்ந்தனர்.

    சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களிலும் மால்களில் உள்ள திரையரங்குகளில் இன்று ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் பார்த்த பெரும்பாலானோர் பாசிடிவ் ரிவியுகளை சமூகவலை தளங்களில் பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்களிலும் வேகமாக அரண்மனை 4 படத்திற்கு புக்கிங் பதிவாகி வருகிறது.

    சுந்தர்.சி அவரது மற்ற பாகங்களை போலவே இப்படத்தை எடுத்து இருந்தாலும். இந்த பாகத்தில் விஸ்வல் எஃபக்ட்ஸ்களும், நகைச்சுவை காட்சிகள் மற்றும் திகில் காட்சிகள் நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.

    சமீபத்தில் தமிழ் படங்களில் ரீரிலீஸ் படங்களே அதிகம் திரையரங்குகளில் ஓடுகிறது கில்லி படத்தின் ரீ ரிலீஸ் மக்களிடம் பெரும் ஆதரவு பெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் முன்பு அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான தீனா, பில்லா போன்ற படங்கள் கில்லியைப் போல் வரவேற்பு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மலையாள திரைப்படங்களுக்கு கிடைத்த ஆதரவு கூட சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களுக்கு கிடைக்கவில்லை.இச்சூழ்நிலையில்  தற்பொழுது அரண்மனை 4 வெளியாகியுள்ளது.

    கோடை விடுமுறைக்கு தக்க சமையத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் திரைப்படமாக இது அமைந்துள்ளது அரண்மனை 4. இப்படத்திற்கு மக்களிடையே பெருமாதரவு பெற்று வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வேட்டையன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஐதராபாத், ஆந்திரா ஆகிய இடங்களில் நடந்தன
    • இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' புதிய படத்தை டைரக்டர் ஞானவேல்ராஜா இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    வேட்டையன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஐதராபாத், ஆந்திரா ஆகிய இடங்களில் நடந்தன. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

    இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். விமான நிலையத்திற்கு காரில் வந்து இறங்கிய ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வயதானாலும் அவரின் நடை மற்றும் பேச்சு என்றும் இளமையாகவுள்ளது என அந்த வீடியோவை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் ரஜினி ரசிகர்களுடனும் , மஞ்சு வாரியரின் தம்பியான மது வாரியருடன் எடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் சில நாட்கள் இந்த வீட்டில் தங்கி இருந்தார்.
    • இந்த ஆடம்பர பங்களா பொதுமக்கள் தங்குவதற்கு வாடகைக்கு விடப்படுகிறது.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான ஆடம்பர பங்களா கடற்கரை சாலையில் உள்ளது. பல்வேறு ஆடம்பர வசதிகளுடன் கூடிய இந்த வீடு அவரது மறைவுக்கு பின்பு போதிய பராமரிப்பின்றி இருந்து வந்தது.

    சென்னை வரும்போது ஸ்ரீதேவி அடிக்கடி இந்த வீட்டில் தங்கி செல்வார். அவர் வாங்கிய முதல் ஆடம்பர மாளிகையான இந்த வீட்டை உலகம் முழுவதும் உள்ள கலைப் பொருள்கள் மற்றும் ஓவியங்களால் அலங்கரித்து வைத்திருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் சில நாட்கள் இந்த வீட்டில் தங்கி இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் இந்த ஆடம்பர பங்களா பொதுமக்கள் தங்குவதற்கு வாடகைக்கு விடப்படுகிறது.

    மே 12-ந் தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்க இருக்கிறது. இந்த ஆடம்பர வீட்டில் தென்னிந்திய உணவுகள் மற்றும் நெய் பொடி சாதம், பால்கோவா மற்றும் விருப்பமான சுவையான உணவு வசதிகள் தங்கும் விருந்தினர்களுக்கு கிடைக்கும்.

    இதுபற்றி ஜான்வி கபூர் கூறியதாவது:-

    எனது மிகவும் நேசத்துக்குரிய குழந்தை பருவ நினைவுகள் சென்னையில் உள்ள கடற்கரை சாலையில் எனது குடும்பத்துடன் கோடை காலத்தை கழித்தது என இந்த வீட்டை ஒரு சரணாலயம் போல் உணர்கிறேன். அந்த உணர்வை எனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    அதனால்தான் முதன் முறையாக சில விருந்தினர்களுக்கு எங்கள் வீட்டை திறக்கிறேன். 4 ஏக்கரில் உள்ள இந்த வீட்டில் நீச்சல் குளம் வசதியும் உள்ளது. எங்கள் கடலோர வீட்டுக்கு தனிப்பட்ட சுற்றுலாவுக்கு உங்களை அழைத்து செல்கிறேன்.

    காலையில் யோகா மற்றும் அற்புதமான உணவை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று கூறினார். ஜான்வி கப்பூர் நடித்த Mr & Mrs மஹி வரும் மே 31 வெளியாகவுள்ளது. தெலுங்கு மொழியில் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் சைஃப் அலி கான் இணைந்து நடித்துள்ள தேவாரா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெங்களூரில் போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து இயக்குனர் பாலசந்தரால் 1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் சினிமாவில் அறிமுகமானார்.
    • இந்நிலையில் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாக உள்ளது.

    சமீப காலமாக திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமா படமாகி வருகிறது.

    இசையமைப்பாளர் இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ், இளையராஜா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    அந்த வகையில் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பெங்களூரில் போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து இயக்குனர் பாலசந்தரால் 1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் சினிமாவில் அறிமுகமானார். 1978-ம் ஆண்டு வெளியான பைரவி படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார் ரஜினிகாந்த்.

    தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து 'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்' என்ற பாடலுக்கேற்ப திரை உலகில் உச்சத்தை தொட்டவர் ரஜினிகாந்த். 48 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரா திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் தற்போது தனது 170-வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171-வது படமான 'கூலி' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

    இந்நிலையில் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாக உள்ளது. பிரபல இந்தி தயாரிப்பாளர் சஜித்நாடியாவாலா ரஜினி வாழ்க்கை வரலாறு படத்தை தயாரிக்க இருக்கிறார். இதையொட்டி ரஜினிகாந்தை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேசி உள்ளார்.

    படத்திற்கான கதை எழுதும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க போவது யார்? மற்றும் படப்பிடிப்பு விபரங்கள் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கியவர் சாந்தகுமார். அடுத்ததாக ’ரசவாதி தி அல்கெமிஸ்ட்’ என்ற படத்தை இயக்க உள்ளார்.
    • இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

    மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கியவர் சாந்தகுமார். அடுத்ததாக 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' என்ற படத்தை இயக்க உள்ளார்.

    படத்தின் கதாநாயகனாக அர்ஜூன்தாஸ், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூபில் இதுவரை 20 லட்ச பார்வையை ரசவாதி டிரைலர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் படம் பற்றி இயக்குனர் சாந்தகுமார் கூறியதாவது:-

    கொடைக்கானலில் 30 வயதில் ஒரு சித்த மருத்துவர்{அர்ஜூன் தாஸ்} அமைதியான வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால், அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கைக்காக இந்த மலைப் பகுதியில் வந்திறங்கும் புதிய பெண்ணை சந்திக்கிறார்.

    கடந்த கால கஷ்டங்கள் அவருக்கு தீரும்போது, அங்கிருக்கும் உள்ளூர் இன்ஸ்பெக்டரால் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து நடப்பதுதான் கதை. இந்தப் படத்தை மே 10-ந் தேதி சக்தி பிலிம் பேக்டரி பி.சக்திவேலன் வெளியிட உள்ளார்.

    கொடைக்கானல், மதுரை, கடலுார், பழனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. ரசவாதி என்பது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கண்முன் கொண்டு வரக்கூடிய விஷயம். உறவுகளை மையமாக வைத்து காதல், கோபம், பழிவாங்கல், இழப்பு என பல்வேறு உணர்வுகளை படம் கடந்து செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார். படத்தின் முதல் பாடலான 'சாரல் சாரல்' வீடியோ பாடல் யூடியூபில் இன்று மாலை 5 மணிக்கு டிவோ மியுசிக் சேனலில் வெளியாகவுள்ளது. ரசவாதி படத்தின் மீது மக்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டு இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • அதைத் தொடர்ந்து பிரபுதேவா இன்னும் தலைப்பிடப்படாத ARRPD6 என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்தியன் மைக்கில் ஜேக்சன் என்று அழைக்கப்படும் பிரபு தேவா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிணாமத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

    காதலன், லவ் பர்ட்ஸ், மின்சார கனவு , காதலா காதலா போன்ற பல ஹிட்டான படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு தெலுங்கு திரைத்துறையில் பல திரைப்படங்களை இயக்கினார். அதைத்தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களை இயக்கி பாலிவுட்டில் முக்கிய இயக்குனரானார்.

    தற்பொழுது மீண்டும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டு இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    அதைத் தொடர்ந்து பிரபுதேவா இன்னும் தலைப்பிடப்படாத ARRPD6 என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான மனோஜ் என்.எஸ் இயக்குவுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை பிஹைண்ட்வுட்ஸ் தயாரிக்கவுள்ளது. பிரபுதேவா நடிக்கும் படத்திற்கு 6 வது முறை ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரபுதேவாவுடன், யோகி பாபு, அஜு வர்கீஸ், மொட்டை ராஜேந்திரன், ரெண்டின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. அதனை ஏ.ஆர் ரகுமான் அவரது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். அப்போஸ்டரில் ஏ.ஆர் ரகுமானும் பிரபு தேவாவும் கருப்பி நிற கோட் சூட்டில் காட்சி அளிக்கின்றனர். லாஃப், சிங் & டான்ஸ் அலாங் என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×