search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிகா"

    • இந்தப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது
    • சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    'பேட்ட' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

    சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது.சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17 ஆம் தேதி துவங்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். 24, பேட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் திருநாவுக்கரசு என்பது குறிப்பிடத்தக்கது.

    சூர்யா தற்பொழுது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து இப்படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்தடுத்து பெரிய படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இந்நிலையில் படத்தில் நடிக்க காஸ்டிங் கால் போஸ்டரை கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 8 வயது முதல் 80 வயது வரை விண்ணப்பிக்கலாம் எனவும் ஆண் மற்றும் பெண் வரம்பில்லை எனவும் மொழி தடையில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

    விண்ணப்பிப்பவர்கள் அவர்கள் நடிப்பை பிரதிபலிக்கும் விதமாக 1 முதல் 3 நிமிட வீடியோவை பெயர் மற்றும் பிற விவரங்களை மென்ஷன் செய்து 7550011050 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும் என அந்த போஸ்டரில் குறிப்பிட்டள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17 ஆம் தேதி துவங்கவுள்ளது.
    • சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

    பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். வித்தியாசமான கதைக்களத்தில் படம் இயக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் திறம் பெற்றவர்.

    இவர் படம் இயக்கும் பாணி ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான குவெண்டின் டேரண்டின்னோவை பிரதிபலிக்கும். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார்.

    மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்தப்படம். இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

    சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது.சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க்வுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17 ஆம் தேதி துவங்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். 24, பேட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் திருநாவுக்கரசு என்பது குறிப்பிடத்தக்கது.

    சூர்யா தற்பொழுது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து இப்படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்தடுத்து பெரிய படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்
    • திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார்

    சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.

    இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள், நாச்சியார், மகளிர் மட்டும் போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்தார். அண்மையில் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக 'காதல் தி கோர்' மற்றும் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் 'ஷைத்தான்' படத்திலும் நடித்திருந்தார்.

    நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டில் வெளியாக உள்ளது.

    அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

    இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா - ஜோதிகா ஜோடி மீண்டும் இனியானது நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அந்த படத்தை சில்லு கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் அல்லது பெங்களூர் டேஸ் என்ற மலையாள படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

    விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.
    • இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.

    இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி காட்சி படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன.

    கங்குவா படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. டீசரில் சூர்யா மிக அற்புதமாக நடித்து இருப்பார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    அதில் இரு வேடங்களில் காணப்படுகிறார். ஒரு கதாப்பாத்திரம் கையில் கத்தியுடன் ஒரு பழங்கால வீரரைப் போல் காட்சியளிக்கிறார். அவருக்கு எதிரி மற்றொரு கதாப்பாத்திரம் இக்கால மனிதனைப் போல் கோட் சூட் அணிந்து கையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.

    எப்படிப்பட்ட கதைக்களத்துடன் இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே உருவாகியுள்ளது. படம் இந்தாண்டு வெளியிடப்போவதாக கூறியுள்ளனர். தற்பொழுது கங்குவா படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜோதிகா - சூர்யா இருவரும் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.
    • சினிமாவில் இருவரும் நடித்து வருவதால் உடலை கட்டுக்கோப்பாக வைக்க ஜிம் ஒர்க்கவுட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

    பிரபல நடிகை ஜோதிகா- நடிகர் சூர்யா இணைந்து 1999 -ம் ஆண்டு இயக்குனர் வசந்தின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் நடித்தனர்.

    சூர்யா- ஜோதிகா மொத்தம் 7 படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் 2006 -ல் திருமணம் செய்தனர், இவர்களுக்கு தியா என்ற மகள், தேவ் என்ற மகன் உள்ளனர்.

    இந்நிலையில் தற்போது ஜோதிகா ஷைத்தான் படத்தில் நடித்தார்.தற்போது மேலும் சில இந்தி படங்களில் ஜோதிகா நடிக்க உள்ளார். நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார்.




     

    இந்நிலையில் ஜோதிகா - சூர்யா இருவரும் ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்கும் வகையில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

    ஜோதிகா, சூர்யா இருவரும்  சிறந்த நடிகர்கள் மட்டும் அல்ல. உடற்தகுதி மீது வெறி கொண்டவர்கள். தற்போது சினிமாவில் இருவரும் நடித்து வருவதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம் ஒர்க்கவுட்டில் ஈடுபட்டு உள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் வியந்து வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ்
    • வித்தியாசமான கதைக் களங்களில் படம் எடுப்பதில் கார்த்திக் சுப்பராஜ் திறம் பெற்றவர்

    பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். வித்தியாசமான கதைக் களங்களில் படம் எடுப்பதில் கார்த்திக் சுப்புராஜ் திறம் பெற்றவர்.

    இவர் படம் இயக்கும் பாணி ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான குவெண்டின் டேரண்டின்னோவை பிரதிபலிக்கும். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார்.

    மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்தப்படம்.ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா போட்டி போட்டு நடித்துருப்பர்

    சினிமாவையே கதைக்களமாக வைத்து திரைப்படம் இயக்குவதில் கார்த்திக் சுப்புராஜ் வல்லமை வாய்ந்தவர். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அடுத்தபடம் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

    சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதீகாரப்பூர்வ அறிவிப்பை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப்படம் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியில் கதைக்களமாக உருவாகவுள்ளது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திலிருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தின் மேல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூர்யா புதிய தொடக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர் படம் இயக்கும் பாணி ஹாலிவுட் பிரபல இயக்குனரான குவெண்டின் டேரண்டின்னோ பிரதிபலிக்கும்.
    • இந்நிலையில் கார்த்தி சுப்பராஜ் அடுத்தபடம் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார்.

    பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். வித்தியாசமான கதைக் களங்களில் படம் எடுப்பதில் கார்த்திக் சுப்பராஜ் திறம் பெற்றவர்.

    இவர் படம் இயக்கும் பாணி ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான குவெண்டின் டேரண்டின்னோவை பிரதிபலிக்கும். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கினார்.

    மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்தப்படம்.ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா போட்டி போட்டு நடித்துருப்பர்

    சினிமாவையே கதைக்களமாக வைத்து திரைப்படம் இயக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் வல்லமை வாய்ந்தவர். இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் அடுத்தபடம் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார்.

    சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதீகாரப்பூர்வ அறிவிப்பை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இந்தப்படம் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியில் கதைக்களமாக உருவாகவுள்ளது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திலிருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தின் மேல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உங்கள் கணவரை ஒரு நாள் மட்டும் கடன் கொடுங்கள் நான் சூர்யா சார் உடைய மிக பெரிய ஃபேன்
    • தன் குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அவர் உடற் பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிடுவார்.

    நடிகை ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவர் நடித்து கொண்டு இருக்கும் படத்தின் செய்திகளை பற்றியும், தன் குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அவர் உடற் பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிடுவார்.

    இந்நிலையில் ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் "ஜோதிகா மேம் சூர்யா சாரை ஒரு நாள் மட்டும் எனக்கு கடன் கொடுப்பீங்களா? என்று ஒரு ரசிகை வினவினார் .

    சில்லுனு ஒரு காதல் படத்தில் எப்படி நீங்கள் ஐஷுவுக்காக செய்தீர்களோ அதே போல் எனக்கும் உங்கள் கணவரை ஒரு நாள் மட்டும் கடன் கொடுங்கள் நான் சூர்யா சார் உடைய மிக பெரிய ஃபேன்" என்ற கமண்ட்டை அப்புகைப்படத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோதிகா அந்த கம்மண்டிற்கு "ஊப்ஸ், நாட் அலோவ்டு" என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

    என். கிருஷ்ணா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படம் சில்லுனு ஒரு காதல். {ஐஷூ} என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை பூமிகா நடித்து இருப்பார். சூர்யா அவரின் கல்லூரி பருவத்தில் பூமிகாவை காதலித்து இருப்பார், ஆனால் அக்காதல் கைக்கூடாமல் போய்விடும். அடுத்து வேண்டா வெறுப்பாக ஜோதிகாவை மணம் முடிப்பார். அடுத்து அவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

    இப்படத்தில் தன் பழைய காதலியான பூமிகாவை ஒரு நாள் சந்திப்பதற்கான சூழ்நிலை அமையும் சூர்யாவுக்கு. இதை மையப்படுத்தியே அந்த ரசிகை கமண்ட் செய்து இருக்கிறார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நேற்று சென்னை ராஜ ரத்தினம் கலையரங்கத்தில் 2015 தமிழக திரைப்பட விருது வழங்கும் விழா நடைப்பெற்றது
    • கவுதம் கார்த்திக் அவருடைய எக்ஸ் பக்கத்தில் விருது அளித்து கவுரவித்த தமிழ்நாடு மாநில அரசுக்கும், தனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

    நேற்று சென்னை ராஜ ரத்தினம் கலையரங்கத்தில் 2015 தமிழக திரைப்பட விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.

    இதில் ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த கதையாசிரியருக்கான விருது மோகன் ராஜா தனி ஒருவன் படத்திற்காக பெற்றார். இறுதிச்சுற்று படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை சுதா கொங்கரா பெற்றார்.

    சிறந்த நடிகருக்கான விருதை கவுதம் கார்த்திக் 'வை ராஜா வை' படத்திற்கு பெற்றார்.

    தனி ஒருவன் படம் அதிக விருதை அள்ளியது. அரவிந்த சாமி சிறந்த வில்லனுக்கான விருதும்.ராம்ஜி சிறந்த ஒளிபதிவாளர் விருதும்,கோபி க்ருஷ்ணா சிறந்த எடிடர்கான விருதும், பிருந்தா மாஸ்டர் சிறந்த நடன இயக்குநர்கான விருதும் பெற்றனர்.

    மாதவன் இறுதிச்சுற்றுக்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.ஜோதிகா 36 வயதினிலே படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை சிங்கம் புலி வென்றார். சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதை தேவதர்ஷினி வென்றார்.கிப்ரான் உத்தம வில்லன் மற்றும் பாபநாசம் படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர்கான விருதை வென்றார்.

    ஜோதிகா விருதை வாங்கி தான் மிகவும் சந்தோஷமாக உணர்வதாக செய்தியாளர்களிடம் பேட்டிக் கொடுத்தார்.கவுதம் கார்த்திக் அவருடைய எக்ஸ் பக்கத்தில் விருது அளித்து கவுரவித்த தமிழ்நாடு மாநில அரசுக்கும், தனது ரசிகர்களுக்கும், தனது குடும்பத்துக்கும், இயக்குனர் ஐஷ்வர்யா ரஜினிகாத்துக்கும். தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனதுக்கு அவரின் நன்றியை தெரிவித்துள்ளார்.

    நேற்று விருது வழங்கப்பட்ட பட்டியல்.

    சிறந்த படம் முதல் பரிசு - தனி ஒருவன்

    சிறந்த படம் இரண்டாம் பரிசு - பசங்க 2

    சிறந்த படம் மூன்றாம் பரிசு - ப்ரபா

    சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசு - இறுதிச்சுற்று

    பெண்கள் முன்னேற்றதிற்கான சிறந்த படம் - 36 வயதினிலே

    சிறந்த நடிகர் - மாதவன் [இறுதிச்சுற்று]

    சிறந்த நடிகை - ஜோதிகா[36 வயதினிலே]

    சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு - கவுதம் ராஜா [ வை ராஜா வை]

    சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு - ரித்திக்கா சிங் [இறுதிச்சுற்று]

    சிறந்த வில்லன் - அரவிந்த் சாமி [தனி ஒருவன்]

    சிறந்த நகைச்சுவை நடிகர் - சிங்கம்புலி [ அஞ்சுக்கு ஒன்னு]

    சிறந்த நகைச்சுவை நடிகை - தேவ தர்ஷினி [ திருட்டு கல்யாணம், 36 வயதினிலே]

    சிறந்த குணச்சித்திர நடிகர் - தலைவாசல் விஜய் [அபூர்வ மகான்]

    சிறந்த குணச்சித்திர நடிகை - கவுதமி [ பாபநாசம்]

    சிறந்த இயக்குநர் - சுதா கொங்கரா {இறுதிச்சுற்று]

    சிறந்த கதையாசிரியர் - மோகன் ராஜா [ தனி ஒருவன்]

    சிறந்த வசன எழுத்தாளர் - சரவணன் [கத்துக்குட்டி]

    சிறந்த இசையமைபாளர் - ஜிப்ரான் [ உத்தம வில்லன், பாபநாசம்]

    சிறந்த பாடலாசிரியர் - விவேக் [36 வயதினிலே]

    சிறந்த பின்னணி பாடகர் [ஆண்] - கானா பாலா {வை ராஜா வை}

    சிறந்த பின்னணி பாடகர் [ பெண்] - கல்பனா ராகவேந்தர் [36 வயதினிலே]

    சிறந்த ஒளிப்பதிவாளர் - ராம்ஜி [தனி ஒருவன்]

    சிறந்த ஒளிப்பதிவாளர் - ராம்ஜி (தனி ஒருவன்)

    சிறந்த ஒலி வடிவமைப்பாளர் - ஏ.எல்.துக்காராம், ஜே.மகேஸ்வரன் (தாக்க தாக்க)

    சிறந்த எடிட்டர் - கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)

    சிறந்த கலை இயக்குனர் - பிரபாஹரன் (பசங்க 2)

    சிறந்த ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர் - டி ரமேஷ் (உத்தம வில்லன்)

    சிறந்த நடன இயக்குனர் - பிருந்தா (தனி ஒருவன்)

    சிறந்த ஒப்பனை - சபரி கிரிஷன் (36 வயதினிலே, இறுதிச்சுற்று)

    சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - வாசுகி பாஸ்கர் (மாயா)

    சிறந்த குழந்தை கலைஞர் - மாஸ்டர் நிஷேஷ், பேபி வைஷ்ணவி (பசங்க 2)

    சிறந்த டப்பிங் கலைஞர் (ஆண்) - கௌதம் குமார் (36 வயதினிலே)

    சிறந்த டப்பிங் கலைஞர் (பெண்) - ஆர் உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)

    • ”உடற்தகுதி என்பது நீங்கள் இழக்கும் எடையைப் பற்றியது அல்ல, ஆனால் நீங்கள் பெறும் வாழ்க்கையைப் பற்றியது”
    • அவர் செய்யும் வெயிட் லிஃப்டிங், புஷ் அப்ஸ், லவுன்ஞ் ஜம்ப்ஸ், சுவற்றில் தலை கீழாக செய்யும் உடற்பயிற்சி வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கதாநாயகிகள் பட்டியலில் ஜோதிகாவுக்கு தனி இடம் உண்டு. நயன்தாராவுக்கு அடுத்து பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தவர் ஜோதிகா. 1999-ல் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கியவர் ஜோதிகா. விஜய் உடன் நடித்த குஷி படத்திற்கு சிறந்த கதாநாயகிக்கான விருது அவருக்கு கிடைத்தது. பல தமிழ் படங்களில் நடித்த ஜோதிகா அவ்வப்போது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்து வந்தார். கடந்த 25 ஆண்டு கால தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஜோதிகாவும் ஒருவர். அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது அவர் மிகவும் கொலுக்-மொலுக் என்று பப்லியாக இருந்தார்.

    அவரின் அடுத்தடுத்த படங்களில் உடல் இடையை குறைத்து நடித்து வந்தார். சமீபத்தில் மம்மூட்டியுடன் சேர்ந்து 'காதல் தி கோர்' எனும் மலையாள படத்தில் ஜோதிகா நடித்தார். இத்திரைப்படம் அவர்களுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. நீண்ட நாட்கள் கழித்து ஜோதிகாவுக்கு ஒரு நல்ல படம் என்று கூட சொல்லலாம். வரும் மார்ச் 8 ஆம் தேதி அஜய் தேவ்கன், மாதவன், மனோஜ் ஆனந்த், ரிச்சா ப்ரகாஷ் மற்றும் பலர் நடித்து வெளிவர உள்ள சைத்தான் படத்திலும் ஜோதிகா நடித்துள்ளார். இந்நிலையில், ஜோதிகா இன்ஸ்டாகிராமில் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள், ஜெய் பீம் திரைபடத்திற்காக வாங்கிய தேசிய விருதுகளின் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.

    சில நாட்களுக்கு முன்பு ஜோதிகா உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்டார். வெளியிட்ட சிறிது நேரத்தில் அது வைரலானது. 44 வயதிலும் எப்படி ஒருவரால் இப்படி உடற்பயிற்சி செய்ய முடியும் என்று மக்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அவர் செய்யும் வெயிட் லிஃப்டிங், புஷ் அப்ஸ், லவுன்ஞ் ஜம்ப்ஸ், சுவற்றில் தலை கீழாக செய்யும் உடற்பயிற்சி வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    "உடற்தகுதி என்பது நீங்கள் இழக்கும் எடையைப் பற்றியது அல்ல, ஆனால் நீங்கள் பெறும் வாழ்க்கையைப் பற்றியது" என்றும் அந்த வீடியோவில் ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.

    • சிறந்த படம் முதல் பரிசு- தனி ஒருவன், 2-வது பரிசு- பசங்க-2, 3-வது பரிசு- பிரபா.
    • சிறந்த நடிகர்- ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த நடிகை- ஜோதிகா (36 வயதினிலே).

    தமிழ்நாடு அரசின் 2015-ம் ஆண்டு திரைப்பட விருது பெறும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் வருமாறு:-

    சிறந்த படம் முதல் பரிசு- தனி ஒருவன், 2-வது பரிசு- பசங்க-2, 3-வது பரிசு- பிரபா, சிறப்பு பரிசு- இறுதிச்சுற்று, பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் (சிறப்பு பரிசு) - 36 வயதினிலே.

    சிறந்த நடிகர்- ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த நடிகை- ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்பு பரிசு- கவுதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்பு பரிசு- ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), வில்லன் நடிகர்- அரவிந்த்சாமி (தனி ஒருவன்), நகைச்சுவை நடிகர்- சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு), நகைச்சுவை நடிகை- தேவதர்ஷினி (திருட்டு கல்யாணம், 36 வயதினிலே),

    சிறந்த குணச்சித்திர நடிகர்- தலைவாசல் விஜய் (ஆபூர்வ மகான்), குணச்சித்திர நடிகை- கவுதமி (பாபநாசம்), சிறந்த இயக்குனர்- சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதையாசிரியர்- மோகன் ராஜா (தனி ஒருவன்), சிறந்த இசையமைப்பாளர்- ஜிப்ரான் (உத்தம வில்லன், பாபநாசம்), சிறந்த பாடலாசிரியர்- விவேக் (36 வயதினிலே), சிறந்த பின்னணி பாடகர்- கானா பாலா (வை ராஜா வை), பின்னணி பாடகி- கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே), சிறந்த ஒளிப்பதிவாளர்- ராம்ஜி (தனி ஒருவன்).

    சிறந்த ஒலிப்பதிவாளர்- ஏ.எல்.துக்காராம், ஜெ.மகேஸ்வரன் (தாக்க, தாக்க), சிறந்த எடிட்டர்- கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்), சண்டை பயிற்சியாளர்- ரமேஷ் (உத்தம வில்லன்), நடன ஆசிரியர்- பிருந்தா (தனி ஒருவன்), ஒப்பனை கலைஞர்- சபரி கிரீஷன் (36 வயதினிலே, இறுதிச்சுற்று), தையல் கலைஞர்- வாசுகி பாஸ்கர் (மாயா),

    சிறந்த குழந்தை நட்சத்திரம்- நிஷேஸ், வைஷ்ணவி (பசங்க-2), சிறந்த பின்னணி குரல் (ஆண்) - கவுதம் குமார் (36 வயதினிலே), (பெண்)- ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று). இதே போன்று தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான 2014-15-ம் ஆண்டுக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நாளை (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் விருதுகளை வழங்க உள்ளனர். விழாவில் 39 விருதாளர்களுக்கு காசோலை, அவர்கள் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • படத்தின் டிரெய்லர் காட்சிகள் 2 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் ஓடியது.
    • சைத்தான் வரும் மார்ச் 8-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

    அஜய்தேவ்கன், ஆர்.மாதவன், ஜோதிகா நடித்த இந்தி படம் 'சைத்தான்'. இது ஒரு திரில்லர் படம் ஆகும். இந்த படத்தில் ஆர்.மாதவன் 'சைத்தான்' வேடத்தில் நடிக்கிறார்.

    இப்படத்தின் டிரெய்லர் காட்சி வெளியீட்டு விழா மும்பையில் இன்று நடந்தது. இதில் நடிகர்கள் அஜய்தேவ்கன், மாதவன், நடிகை ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். 

    விழாவுக்கு வந்த அஜய்தேவ்கன் கருப்பு நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தார். மாதவன் பழுப்பு நிற ஓவர்கோட் அணிந்திருந்தார். ஜோதிகா வழக்கம் போல் பேன்ட்சூட் அணிந்து இருந்தார். 

    படத்தின் டிரெய்லர் காட்சிகள் 2 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் ஓடியது. பிரமிக்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்து இருந்தது.

    'ரோலர்கோஸ்டர்' சவாரிக்கு அழைத்துச்செல்வது போலவும் இருந்தது. முன்னெப்போதும் இல்லாத ஒரு த்ரில்லான அனுபவத்தை டிரெய்லர் அளித்தது. இப்படம் வருகிற மார்ச் 8-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

    ×