search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress"

    • வாக்குப்பதிவு முறைகள் குறித்து கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன.
    • ஊழல் செய்வதற்கான வழிகளும் அதிகரிக்கும் என்றார்.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழித்துக்கட்ட வேண்டும். மனிதர்கள் அல்லது ஏ.ஐ. போன்ற தொழில்நுட்பங்களை கொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்துவிட முடியும் என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் குற்றம்சாட்டி இருந்தார்.

    இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, "இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருப்பு பெட்டி போன்றதாகும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஆய்வு செய்ய முடியாது. எங்களது வாக்குப்பதிவு முறைகள் குறித்து கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன."

    "பொறுப்பேற்க வேண்டிய அமைப்புகள் வெளிப்படையாக இல்லாத போது, ஜனநாயகம் போலியாவதோடு, ஊழல் செய்வதற்கான வழிகளும் அதிகரிக்கும்," என்று தெரிவித்துள்ளார். இத்துடன் வாக்குப்பதிவு இயந்திரத்தை மொபைல் போன் மூலம் திறக்க முடியும் என்ற செய்தி அடங்கிய செய்தித்தாளின் புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார். 


    • வெற்றியின் முக்கியத்துவம் கருதி எம்.பி சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டுள்ளது.
    • கேரள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் குறித்தும் தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

    இந்தியாவில் நடந்து முடித்த பாராளுன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமயிலான என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று 3 வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 72 அமைச்சர்களும் பதவியேற்றனர். கூட்டணியை தவிர்த்து இந்த தேர்தலில் மொத்தம் 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது.

    தென் மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக வரவேற்பு இல்லாத நிலையில் கம்ம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக விளங்கும் கேரளாவில் முதல்முறையாக பாஜக 1 இடத்தில் வெற்றிபெற்றுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய பிரபல கேரள நடிகர் சுரேஷ் கோபி எதிர்த்து நின்ற கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வேட்ப்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று பாஜகவின் முதல் வெற்றியை கேரளாவில் பதிவு செய்தார்.

    இந்த வெற்றியின் முக்கியத்துவம் கருதி எம்.பி சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கேரளாவில் செய்தியளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, மறைந்த காங்கிரஸ் தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி குறித்தும், கேரள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் குறித்தும் தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

    செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னையாக விளங்குகிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரளாவின் முன்னாள் முதல்வருமான கருணாகரன் மிகவும் தைரியமான ஒரு தலைவரும் நிர்வாகியுமாவார். மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் E.K. நாயனாரும் கருணாகரனும் தனது அரசியல் குருக்கள் என்று சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். ஆலப்புழாவில் கருணாகாரனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு சுரேஷ் கோபி செய்தியாளர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

     

     

    இதற்கிடையில் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்து சர்சையைக் கிளப்பி வரும் நிலையில் பாஜக சார்பில் அமைச்சராகியுள்ள சுரேஷ் கோபி இந்திரா காந்தியை இந்தியாவின் அன்னை என்று புகழ்ந்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

     

    • பா.ஜ.கவின் என்.டி.ஏ அரசு வெகு நாட்கள் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
    • நாட்டு மக்களுக்கு நன்மையானதாக இருந்தால் சரிதான். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்

    பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி மோடி தொடர்ந்து 3 வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 72 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

    இந்த தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையை இழந்து நிதிஷ் குமாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் [ 12 சீட்] சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் [16 சீட்] ஆகிய கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

     

    காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களை கைப்பற்றி பாராளுமன்றத்தில் தங்களின் பிரதிநிதித்துவத்தை வலுவாக நிறுவியுள்ளது. நிதிஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்திருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்னும் சூழலில் பா.ஜ.கவின் என்.டி.ஏ அரசு வெகு நாட்கள் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

    இன்று பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, என்.டி.ஏ கூட்டணி தலைமையிலான அரசு தவறுதலாக உருவாகியுள்ளது. .மோடியிடம் அரசைத் தக்கவைக்க எந்த உறுதியும் இல்லை. இது ஒரு மைனாரிட்டி அரசு. எனவே இந்த அரசு எந்த நேரமும் சரிய வாய்ப்புள்ளது. ஆனால் இந்த அரசு தொடரவே நாங்கள் விரும்புகிறோம். அது நாட்டு மக்களுக்கு நன்மையானதாக இருந்தால் சரிதான். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாமலேயே பல முக்கிய சட்டங்களை பெரும்பான்மை வைத்திருந்ததால் பா.ஜ.க தன்னிச்சையாக நிறைவேற்றியது. இனி எந்த சட்டமாக இருந்தாலும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்தையும் கேட்க வேண்டிய நிர்பந்தம் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 

    • தி.மு.க.வால் நாங்களும், எங்களால் தி.மு.க.வும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
    • சின்ன சின்ன பதவிகளை யாவது எங்களுக்கும் கொடுத்தால்தானே நாங்களும் கட்சியை வளர்க்க முடியும் என்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றது. வெற்றி பெற்ற எம்.பி.க்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை.

    அதற்குள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பிறரை சார்ந்து இருக்கப் போகிறோம் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுக் குழுவில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உசுப்பி விட்டார்.

    அதை கேட்டதும் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சூடாகி விட்டார்கள். தி.மு.க. தயவால்தான் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அந்த நன்றியை மறந்து விடக்கூடாது என்றார்கள். இதனால் பொதுக்குழு கூட்டத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.

    தி.மு.க. மீது காங்கிரசுக்கு ஏன் இந்த திடீர் ஊடல்? என்பது பற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    இதை தி.மு.க.வுடன் ஊடல் என்பதை விட எங்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ஊடல் என்பது தான் சரியாக இருக்கும். காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே இருக்கும் மனக்குமுறல்தான் இது.

    2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 96 இடங்களை மட்டுமே பிடித்தது. காங்கிரஸ் 34 இடங்களை பிடித்தது. பெரும்பான்மை இல்லாமல் இருந்தும் காங்கிரஸ் தயவில் தி.மு.க. ஆட்சி நடத்தியது. அப்போதும் ஆட்சியில் பங்கு தரவில்லை.

    இப்போதும் சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் எங்கள் பலத்தையும் சேர்த்துதான் தி.மு.க. வென்றது. இப்போதும் நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.

    எந்த மாவட்டத்திலும் எந்த மட்டத்திலும் காங்கிரசாருக்கு உரிய மரியாதையை தி.மு.க.வினர் தரவில்லை.

    ஆட்சியில் பங்கு கேட்காவிட்டாலும் 10 வாாரியங்களில் பொறுப்பு தர கேட்டோம். அதிலும் காங்கிரசாரை கண்டு கொள்ளவில்லை.

    உள்ளாட்சி தேர்தலிலும் சரியான பங்கீடு கிடைக்க வில்லை. கட்சி மேலிடம் முடிவு செய்யாமல் மாவட்ட அளவில் பேசி முடிக்கும்படி கூறி விட்டார்கள். ஆனால் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எங்களை மதிக்கவில்லை. கொடுத்த இடங்களில் கூட போட்டி வேட்பாளர்களை நிறுத்தி காங்கிரசாரை தோற்கடித்தார்கள். இப்படி இருந்தால் காங்கிரசை வளர்ப்பது எப்படி?

    கட்சியை இப்படியே கண்டு கொள்ளாமல் விட்டால் ஒரு கட்டத்தில் காங்கிரசை காண முடியாது. எனவேதான் எம்.பி., எம்.எல்.ஏ. பதவி சிலருக்கு கிடைத்து விட்டதால் கட்சி பலவீனப்பட்டு போவதை தலைவர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதுதான் தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    நாங்கள் 10 வாரியங்கள் கேட்டதில் பீட்டர் அல்போன்சுக்கு மட்டும் தி.மு.க. தன்னிச்சையாக பதவி கொடுத்தது. அறங்காவலர் பதவிகள் கேட்டோம். தரவில்லை. அரசு வக்கீல்கள் பதவி தரவில்லை. வாரிய தலைவர்கள் பதவி விரைவில் முடிய இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலும் விரைவில் வரப்போகிறது.

    தி.மு.க.வால் நாங்களும், எங்களால் தி.மு.க.வும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அமைச்சர் பதவிகள் எதையும் நாங்கள் கேட்கவில்லை. சின்ன சின்ன பதவிகளை யாவது எங்களுக்கும் கொடுத்தால்தானே நாங்களும் கட்சியை வளர்க்க முடியும் என்றனர்.

    வரப்போகும் உள்ளாட்சி மன்ற தேர்தலிலும், காலியாக போகும் வாரிய தலைவர்கள் பதவியிலும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் முரண்டு பிடிப்பதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • டிவி விவாதத்தின்போது காங்கிரஸ் பெண் தலைவர் குறித்து அவதூறு வார்த்தைகள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு.
    • இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பு- ரஜத் சர்மா.

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளில் செய்தி தெலைக்காட்சிகள் விவாதங்கள் நடத்தின. இந்தியா டி.வி.யும் விவாதம் நடத்தியது. இந்த விவாதத்தை ரஜத் சர்மா தொகுத்து வழங்கினார். அப்போது இழிவான வார்த்தையை பயன்படுத்தியதாக காஙகிரஸ் கட்சி தலைவர் ராகிணி நாயக் குற்றம்சாட்டினார். மேலும் டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் ரஜத் சர்மா காங்கிரஸ் தலைவர்கள் ராகிணி நயக், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன் கெரா ஆகியோருக்கு எதிராக 100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு தொடரந்துள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கருத்துதெரிவிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.

    இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்கள் கேட்கப்பட்டது. உத்தரவு சேம்பரில் உள்ளது என நீதிபதி தெரிவித்தார்.

    ராகிணி நாயக் குற்றச்சாட்டுக்கு ரஜத் சர்மா வழக்கறிஞர் பதில் அளிக்கையில் "விவாதம் ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்று நடைபெற்றது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் ஜூன் 10 மற்றும் 11-ந்தேதியில் இது தொடர்பாக டுவீட் செய்துள்ளனர். உண்மையான வீடியோவில் இல்லாத வார்த்தைகள் சேர்க்கப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

    எந்த அவதூறு பேச்சும் இல்லை. லைவ் ஷோ வெளியான ஆறு நாட்களுக்குப் பிறகு காங்கிரஸ் பெண் தலைவருக்கு எதிராக டி.வி. தொகுப்பாளர் அவதூறாக பேசியதாக டுவீட் செய்துள்ளனர். 11-ந்தேதி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இது தொடர்பாக தெரிவித்துளளனர். ஜூன் 4-ந்தேதி இது தொடர்பாக ராகிணி ஏதும் தெரிவிக்கவில்லை. அந்த நாளில் இது தொடர்பாக கேட்கவில்லை" என்றார்.

    • நீட் தேர்வின்போது பேப்பர் லீக் ஆகவில்லை என்றால், பீகார் பேப்பர் லீக் காரணமாக 13 குற்றவாளிகளை கைது செய்தது ஏன்?.
    • மோடி அரசு கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலமாக நீட் ஊழலை மூடி மறைக்க தொடங்கியுள்ளது.

    நீட் தேர்வுக்கான பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்தனர். விசாரணை மேற்கொண்டதில் இது தெரிய வந்ததாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. ஊழல் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் நீட் ஊழல் வியாபம் 2.0 என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்றால்தான் 24 லட்சம் மாணவர்களில் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    நீட் ஊழல் தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    மோடி அரசு கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலமாக நீட் ஊழலை மூடி மறைக்க தொடங்கியுள்ளது.

    நீட் தேர்வின்போது பேப்பர் லீக் ஆகவில்லை என்றால், பீகார் பேப்பர் லீக் காரணமாக 13 குற்றவாளிகளை கைது செய்தது ஏன்?. பேப்பரை பரிமாற்றிக் கொள்வதற்காக 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை மாபியா கும்பல், அமைப்புகள் ஈடுபட்டத்தை பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளிப்படுத்தவில்லையா?.

    நீட் மோசடி கும்பல் குஜராத் மாநிலம் கோத்ராவில் பிடிபடவில்லையா? குஜராத் போலீஸின் தகவல்படி, பயிற்சி மையம் நடத்தியவர், ஆசிரியர், மற்றொரு நபர் ஆகியோருக்கு இடையில் 12 கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 24 லட்சம் இளைஞர்களின் ஆசைகளை மோடி அரசு நசுக்கியுள்ளது.

    அரசு கல்லூரிகளில் ஒரு லட்சம் இடங்களில் 55 ஆயிரம் இடங்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த முறை மோடி அரசு என்டிஏ-வை தவறாக பயன்படுத்தி மார்க் மற்றும் தரவரிசையில் மோசடி செய்துள்ளது. இதனால் ஒதுக்கீடு இடங்களுக்கான கட்ஆஃப் மார்க் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிகாரம் மற்றும் அவர்களின் ஆணவம் காரணமாக 241-ல் ராமரால் நிறுத்தப்பட்டது.
    • இது பெரும்பான்மை பெற தவறிய பா.ஜ.க.வை விமர்சிப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கனோட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ராமர் மீது பக்தி செய்தவர்கள் படிப்படியாக திமிர் பிடித்தனர். அந்தக் கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதிகாரம் மற்றும் அவர்களின் ஆணவம் காரணமாக 241-ல் ராமரால் நிறுத்தப்பட்டது என கூறியுள்ளார்.

    அவரது இந்தப் பேச்சு பாராளுமன்ற தேர்தலில் 240 இடங்களைப் பிடித்தாலும் பெரும்பான்மை பெற தவறிய பா.ஜ.க.வை விமர்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், தேர்தல் பிரசாரத்தில் கண்ணியமான தன்மை, பணிவு என்பது ஒரு சேவகர் அல்லது பொது ஊழியரின் சிறந்த பண்பு. ஆனால் அதை சிலர் செய்யவில்லை. ஒரு சேவகர் தன்னை பற்றி நினைக்கக் கூடாது. மக்களை பற்றி நினைக்கவேண்டும் என கூறியிருந்தது, அவர் மறைமுகமாக பிரதமர் மோடியை விமர்சிப்பதாக பேசப்பட்டது.

    இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரான பவன் கெரா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்சை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பிரதமர் மோடி அவர்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, நாம் ஏன்? பேசவேண்டிய நேரம் வரும்போது பேசியிருந்தால் எல்லோரும் அவரை சீரியசாக எடுத்திருப்பார்கள். அப்போது ஆர்.எஸ்.எஸ்சும் அமைதி காத்தது. அவர்களும் அதிகாரத்தை அனுபவித்தனர் என தெரிவித்தார்.

    • 500 எண்கள் கண்டறியப்பட்டு சந்தேகப்படும்படியாக தற்போது 25 செல்போன் எண்களை கண்டறிந்துள்ளனர்.
    • ஜெயக்குமாரின் மர்மச்சாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நேற்று ஏடிஜிபி வெங்கட்ராமன், சி.பி.சி.ஐ.டி . ஐ.ஜி. அன்பு, போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நெல்லைக்கு வருகை தந்து ஜெயக்குமார் இறந்து கிடந்த அவரது தோட்டம், அவரது வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்தனர். அவர்களது மகன்கள் கருத்தையா, மார்ட்டின் மற்றும் ஜெயக்குமாரின் மனைவி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. முன்னதாக இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் 'டம்ப் டவர்' மூலமாக ஜெயக்குமார் மரணம் அடைந்த நாளன்று அந்த பகுதியில் அதிகம் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.

    இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன் சிக்னல்கள் காட்டப்பட்ட நிலையில் அதனை நேற்று கவனத்துடன் பகுப்பாய்வு செய்தனர். அதில் 500 எண்கள் கண்டறியப்பட்டு சந்தேகப்படும்படியாக தற்போது 25 செல்போன் எண்களை கண்டறிந்துள்ளனர். அந்த 25 செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அந்த நபர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த எண்கள் அனைத்தும் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய நாள் மற்றும் கொலை செய்யப்பட்ட நாள் அன்று அந்த பகுதியில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த சந்தேக செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அதன் உரிமையாளர்களிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரிக்கும் பட்சத்தில் இதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிந்து விடும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருதுகின்றனர்.

    இதனால் ஜெயக்குமார் வழக்கு சூடு பிடித்துள்ளது. இதன் மூலமாக ஜெயக்குமாரின் மர்மச்சாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி இன்று 2-வது நாளாக நெல்லையில் முகாமிட்டு இந்த விசாரணையை துரிதப்படுத்தி வருகிறார்.

    மேலும் அவர் விசாரணை குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி அதன்படி விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வயநாடு தொகுதியிலும், ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    • வயநாட்டை கைவிடும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க காங்கிரஸ் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது. வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடரமுடியும் என்பதால் ராகுல் காந்தி எந்த தொகுதியை தியாகம் செய்வார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த ஜூன் 4 முதலே எழத் தொடங்கியது. இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தோகுதி எம்.பியாக தொடர வேண்டும் என்பதை மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என தெரிவித்திருந்தார்.

     

    வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு உள்ளதால் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி எம்.பி யாக தொடர முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. வயநாட்டை கைவிடும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க காங்கிரஸ் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.அதாவது வயநாட்டில் மறுதேர்தல் நடக்கும்பட்சத்தில் அங்கு ராகுலின் தங்கையும் காங்கிரஸின் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

     

    முன்னதாக வாரணாசி தொகுதியில் மோடி கடந்த தேர்தலை விட குறைத்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றுள்ளதை விமர்சித்திருந்த ராகுல் காந்தி, வலுவான எதிர்ப்பு இல்லாமலேயே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற மோடி, வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் தோற்றிருப்பார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்ததாக கருதப்படும் நாளன்று 5 மணி நேரம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் விபரம் எடுக்கப்பட்டுள்ளது.
    • இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைகளின் விபரங்களை கேட்டறிந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக நேற்று திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமார் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பல ஏக்கர் நிலப்பரப்பை பல கிலோ மீட்டர்களுக்கு துல்லியமாக ஆராய்ந்து முப்பரிமாணத்தில் படம் எடுத்துக் கொடுக்கும் திறன் கொண்ட முப்பரிமாண 3-டி லேசர் ஸ்கேனர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த கேமராவை பயன்படுத்தி ஜெயக்குமார் தோட்டத்தின் 7 ஏக்கர் நிலப்பரப்பையும் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தனர்.

    தொடர்ந்து 'டம்ப் டவர்' மூலமாக சம்பவம் நடந்த நாளன்று ஜெயக்குமாரின் தோட்டத்தை சுற்றிலும் அதிகம் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை அறியும் சோதனை நடைபெற்றது. அதில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்ததாக கருதப்படும் நாளன்று 5 மணி நேரம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் விபரம் எடுக்கப்பட்டுள்ளது.

    அதில் லட்சக்கணக்கான செல்போன் எண்கள் வந்திருப்பதாகவும், சந்தேகப்படும் நபர்களின் எண்களை எடுத்து அவர்களிடம் விசாரிக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி இன்று நெல்லை வந்தார். அவர் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு நவ்ரோஜ், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைகளின் விபரங்களை கேட்டறிந்துள்ளார். மேலும் அந்த விசாரணை அறிக்கையையும் அவர் படித்து அது தொடர்பான விளக்கங்களை கேட்டார்.

    இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. அன்பு நெல்லைக்கு வர உள்ளதாகவும், அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் தியைன்விளை கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமாரின் வீடு மற்றும் தோட்டங்களில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகிய செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    • காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    புதுடெல்லி:

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டததில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகிய செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    மத்திய கிழக்கில் உள்ள நமது தொழிலாளர்களின் நிலை கவலைக்குரியது.

    இந்திய அரசு, அதன் சகாக்களுடன் இணைந்து, நமது குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

    • சபாநாயகர் அப்பாவு அறையில் பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    சென்னை:

    விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு தாவியதால் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதிக்கு பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பர்ட் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனார்.

    இன்று அவர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க சென்னை தலைமைச் செயலகம் வந்தார். அங்கு சபாநாயகர் அப்பாவு அறையில் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஸ் தாஷ், ரூபி மனோகரன், பிரின்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.


    ×