search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
    • ஒரு பக்கம் பெற்றோர்கள், மற்றொரு மக்கள் பயிற்சி மையம் என நெருக்கடி கொடுப்பதால் மாணவர்கள் மனஅழுத்தம்.

    இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள். எப்படியாவது மருத்துவராக வேண்டும் என நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்களை பெற்றோர்கள் அதிக அளவில் பணம் செலவழித்து நீட் தேர்வு மையத்தில் சேர்த்து விடுகிறார்கள்.

    இதை லாப நோக்கத்தில் பார்க்கும் தனியார் மையங்கள் நாட்டில் பெரும்பாலான இடங்களில் நீட் பயிற்சி மையத்தை அமைத்துள்ளன. இந்த பயிற்சி மையத்தில் லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் சேர்த்து விடுகிறார்கள். இந்த மையங்கள் தங்களது பெயர்களை நிலைநாட்ட, மாணவர்களை கசக்கி பிழிந்து எடுக்கிறார்கள்.

    நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அதிகமாக உள்ளன. இதனால் பயிற்சி முனையமாக கோட்டா திகழ்கிறது. வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அதிகமான அளவில் கோட்டாவில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் படித்து வருகிறார்கள். இவர்கள் இங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே பெற்றோர்களை பிரிந்து வந்து தனிமையில் தங்கியிருக்கும் மாணவர்களை, தங்களது மையம் முதன்மையாக விளங்க வேண்டும் என நினைக்கும் பயிற்சி மையங்கள் தேர்ச்சியை அதிகமாக காண்பிக்க படிபடி என நெருக்கடி கொடுக்கின்றன. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் மனஅழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    கடந்த வருடத்தில் மட்டும் கோட்டாவில் 26 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் தங்கிருந்து படித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

    அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பெற்றோர்கள் வந்ததும் அந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ராஜஸ்தான் அரசு, பயிற்சி மையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசை வசைபாடும் கருத்துக்களை எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
    • எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதுகின்றனர்.

    மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, மத்திய அரசை வசைபாடும் கருத்துக்களை எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், செய்தியாளர்களிடையே பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து புதிய விளக்கம் அளித்துள்ளார். அதில், "இந்தியாவில் கடந்த ஆண்டு நீட் மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகம். இவற்றில் பெரும்பாலானவை காலியாகவே உள்ளன."

    "மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பில், மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் என்பதற்கு அர்த்தம், நீட் எழுதி இருந்தாலே போதும் என்பது தான். அவர்கள் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதுகின்றனர்."

    "எம்.பி.பி.எஸ். தேர்வே கட்-ஆஃப் தேர்வு தான். இதைத் தான் தற்போது பூஜ்ஜியம் மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் முழுமையாக நிரம்பும்."

    "நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதலிலும், அடுத்தடுத்த மதிப்பெண்களை எடுத்தவர்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெறுவர். நீட் தேர்வு மதிப்பெண்ணிற்கு ஏற்ற வகையில், அவர்கள் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் சேர முடியும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எம்.பி.பி.எஸ். தேர்ச்சி போதுமானது என்பதால் தான் ஜூரோ பெர்சண்டைல் கொண்டுவரப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்து உள்ளார்.

    கடந்த ஆண்டு இந்தியாவில் மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்களே 64 ஆயிரத்து 059 ஆகும். இதில் 4 ஆயிரத்து 400 இடங்கள் காலியாகவே இருந்தன. 2021-22 ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 60 ஆயிரத்து 202 ஆக இருந்தது. இதில் 3 ஆயிரத்து 744 இடங்கள் காலியாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் தான் என்று ஒப்புக் கொண்டு விட்டது.
    • நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது.

    மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, மத்திய அரசை வசைபாடும் கருத்துக்களை எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க.-வினர் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், இது குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் தான் என்று ஒப்புக் கொண்டு விட்டது," என்று குறிப்பிட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

     

    இது தொடர்பாக பேசிய அவர், "மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் "பூஜ்ஜியம்" மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை போல தவறாக விமர்சிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண், பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன? என்பதை பற்றிய புரிதல் முதலில் அறிந்து கொள்ளவும்."

    "நீட் தேர்வை பற்றிய புரிதல் இன்றி நீட் தேர்வை ஒழிப்பதாக கூறிக்கொண்டு இருப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமல்ல? நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை," என்று தெரிவித்து இருக்கிறார்.

     

    தெலுங்கானா கவர்னர் கூறியிருப்பது போன்று பெர்சண்டேஜ் மற்றும் பெர்சண்டைல் இடையே உண்மையில் பெரிய வித்தியாசம் உண்டு. பெர்சண்டேஜ் என்பது சதவீதம். நூறில் எத்தனை பங்கு எனக் கணக்கிடுவது. உதாரணமாக 100 மதிப்பெண் தேர்வில் 50 பெர்சண்டேஜ் என்பது 50 மதிப்பெண்கள். இந்த பெர்சண்டேஜ் எத்தனை பேர் தேர்வு எழுதினாலும் மாறாது. யார் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் மாறாது. 50 தான்.

    பெர்சண்டைல் என்பது அனைத்து மாணவர்களும் எடுத்த மதிப்பெண்களை வரிசைப்படுத்தி அதில் ஒரு இடத்தை குறிப்பது. உதாரணமாக, ஒரு தேர்வில் 9 மாணவர்களின் மதிப்பெண்கள்- 89,90,90,91,92, 96,98,98,99. இதில் 50வது பெர்சண்டைல் 92. அதாவது 50% மாணவர்கள் 92க்கு மேல் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 92க்கு கீழ் பெற்றுள்ளனர்.

    இதே தேர்வு சற்று கடினமாக இருந்தது என வைத்துக் கொள்வோம். அப்போது மதிப்பெண்கள்- 18,22, 34, 35, 36, 40,41,41,42 என்று இருந்தால், 50% மாணவர்கள் 36க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 36க்கு கீழ் பெற்றுள்ளனர். நீட் நுழைவு தேர்விலும் நெகடிவ் மதிப்பெண் உண்டு.

     

    ஜீரோ பெர்சண்டைல் என்பது ஜீரோ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண். அதாவது கடைசி மதிப்பெண் நெகடிவில் இருந்தாலும் அதுதான் ஜீரோ பெர்சண்டைல். எனவே முட்டை மதிப்பெண்ணுக்கும் கீழ் நெகடிவ் மதிப்பெண் எடுத்தாலும் சீட் உறுதி.

    அந்த வகையில் மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பின் படி, மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்பதே பொருள்.

    • ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நிச்சயம் ஒழிப்போம் என்று வாக்குறுதி.
    • பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும், ஏன் அதற்கும் கீழ் எடுத்தாலும் கூட நீங்கள் பட்ட மேற்படிப்பில் சேரலாம்.

    இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி நாடு முழுக்க அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த விதிமுறை அதிக சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வு குறித்து ஏராளமான சர்ச்சைகள் அரங்கேறி வருகின்றன. எனினும், சர்ச்சைகளோடு, சேர்த்து நீட் தேர்வும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

    நீட் தேர்வில் பங்கேற்கும் தமிழக மாணவர்களில் பலர் சமீப காலங்களில் அதிகளவில் தேர்ச்சி பெற துவங்கி உள்ளனர். தமிழகத்தில் நீட் தொடர்பான தற்கொலைகளும் முற்றுபெறாமல், தொடர் கதையாகவே இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் ஆளும்கட்சியாக இருக்கும் தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நிச்சயம் ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்து இருந்தது.

     

    இது தொடர்பான விவாதங்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பங்கேற்போர் பூஜ்ஜியம் மதிப்பெண்களை பெற்றாலும் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு நாடு முழுக்க அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    2016ஆம் ஆண்டு 50 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் தான் பட்ட மேற்படிப்பு செல்ல முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இதன் காரணமாக அன்று பட்ட மேற்படிப்பு தேர்வு எழுதிய மருத்துவர்களில் பெரும்பாண்மையானவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுத்ததால் இந்த விதியால் பிரச்சனையும் எழவில்லை.

    ஆனால், இம்முறை பட்ட மேற்படிப்பு தேர்வு எழுதியவர்களில் பலரும் பூஜ்ஜியம் அல்லது அதற்கும் குறைவாகவே மதிப்பெண் எடுத்துள்ளார்கள். எனவே பட்ட மேற்படிப்பு நுழைவு தேர்வில் 50 சதம் மதிப்பெண் எடுத்தால் தான் பட்ட மேற்படிப்பு செல்ல முடியும் என்றால் இவர்களால் பட்ட மேற்படிப்பு படிக்க முடியாது.

    எனவே இவர்களுக்காக, பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும், ஏன் அதற்கும் கீழ் எடுத்தாலும் கூட நீங்கள் பட்ட மேற்படிப்பில் சேரலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

    2016-ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான சேர்ந்தவர்கள் 12ஆம் வகுப்பு மதிப்பெண் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள். ஆனால், 2023-ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவு தேர்தில் பூஜ்ஜியம் மதிப்பெண் கூட எடுக்காமல் நெகடிவ் மதிப்பெண் எடுத்திருப்பவர்கள் 2017-க்கு பிறகு நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள்.

     

    மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்களை எடுத்தாலும் மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற மத்திய அரசின் புதிய அறிவிப்பின் மூலம், நீட் தேர்வு எழுதி மருத்துவம் பயின்றவர்களால், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்களை கூட எடுக்க முடியவில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    மேலும், நீட் தேர்வின் மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தவர்களால் பட்ட மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்களை கூட எடுக்க முடியாத நிலை இருப்பதால் தான், இந்த சட்ட திருத்தம் இயற்றப்பட்டதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

    • மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி னார்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுக்கா அரியலூர் அரசு பள்ளியில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஒன்று திரண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி னார். இது பற்றி தகவலறி ந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.செ யலாளரும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமானவசந்தம் கார்த்திகேயன் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் .

    நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே மாணவர்களாகிய நீங்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்றார். அதனை ஏற்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், கட்சி நிர்வாகிகள் அண்ணா துரை, லிங்கநாதன், பத்மநா பன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • அதிமுக மாநாடு நடைபெற்றால் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மதுரையில் கூடினர்
    • மாநாடு உடன் போராட்டம் நடத்தப்பட்டால் பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால் தள்ளிவைப்பு

    தி.மு.க. நேற்று நடத்திய போராட்டம் மதுரையில் மட்டும் நடைபெறவில்லை. அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றதாலும், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாலும், மதுரையில் மட்டும் போராட்டம் நடைபெறவில்லை.

    இதனால் மதுரையில் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் 24-ந்தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அண்ணாநகர், அம்பிகா தியேட்டர் அருகில் உள்ள ரவுண்டானாவில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் பேராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக,

    'நீட்' தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், தமிழ்நாடு கவர்னரையும் கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் மதுரையை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    உண்ணாவிரதத்தை தி.மு.க. பொதுச் செயலாளர், அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். முன்னதாக 'நீட்' தேர்வு காரணமாக தமிழ்நாட்டில் உயிரிழந்த மாணவர்களின் உருவப்படங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    உண்ணாவிரத போராட்டத்தில், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தி.மு.க. மாவட்ட செயலாளர் சிற்றரசு, மாணவர் அணி செயலாளர் எழிலரசன், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகராஜன், இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, செயல் தலைவர் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி., திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • ஏழை மாணவர்கள் ரூ.3 லட்சம் வரை கட்டி நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு படிக்கிறார்கள்.
    • கவர்னர் நீட் சட்டத்தை நிறைவேற்ற மாட்டேன் என ஒவ்வொரு முறையும் பேசி வருகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் தமிழகத்திற்கு மட்டுமானது அல்ல.ஒட்டுமொத்த இந்தியாவிற்கான குரலாக இந்த உண்ணாவிரதம் ஒலிக்கும்.கொரோனா காலத்தில்,பல்வேறு தொழில்கள் நலிவடைந்த நிலையில், நீட் பயிற்சி மையங்கள் நலிவடையாமல், ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.மத்திய அரசு நீட் பயிற்சியை வணிகமாக பார்க்கிறது.எங்களைப் பொறுத்தவரை மாணவச் செல்வங்களின் உணிர் முக்கியம்.

    பிளஸ்-2 முடித்தவுடன் இரண்டு, மூன்று ஆண்டுகள் நீட் பயிற்சி முடித்தால்தான் மருத்துவத்தில் சேர முடியும் என்கிற மன அழுத்தத்தை தரக்கூடாது. ஏழை, எளிய மாணவர்களை பொறுத்த வரை கடனை வாங்கி ஒன்றரை முதல் மூன்று லட்சம் வரை கட்டி நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு படிக்கிறார்கள்.

    அப்படி படிக்கும்போது அந்த முறை வெற்றி பெறவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக குடும்பத்தையும் பாதிக்கின்ற மனநிலை ஏற்படுகிறது.சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அந்த மாணவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    அரியலூர் மாணவி அனிதா ஆரம்பித்து,மாணவர் ஜெகதீஷ் அவரது தந்தை உள்ளிட்ட பலரை நாம் இழந்து உள்ளோம். இதற்காக ஒவ்வொரு முறையும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் கவர்னர் சட்டத்தை நிறைவேற்ற மாட்டேன் என ஒவ்வொரு முறையும் மைக்கை பிடித்து பேசி வருகிறார்.

    தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் முரண்பாடு சிந்தனை கொண்டவராக கவர்னர் செயல்படுகிறார். மத்திய அரசுக்கும் அவர்களின் கைபாவையாக இருப்பவர்களுக்கும் மனிதாபிமானம் என்பது இல்லாமல் போய்விட்டது.

    அரசியலைக் கடந்து பொதுநலத்துடன் சிந்தித்துப் பாருங்கள். நீட் தேர்வை நீக்கும் பணியில் எதிர்க்கட்சிகளாகிய அ.தி.மு.க.வும் எங்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

    மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரும் பொழுது அ.தி.மு.க தமிழக மக்களின் நலன் கருதி சட்டசபையில் இல்லாமல் வெளியேறி விடுகின்றனர். மத்திய அரசுடன் கூட்டணி உள்ள அ.தி.மு.க நீட் எதிர்ப்பு தொடர்பான அழுத்தங்களை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீட் தேர்வு நாடு முழுவதும் ரத்து செய்யப்பட வேண்டும்.
    • குறைந்தபட்சம் சமவாய்ப்பற்ற நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது; பணக்கார, நகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமானது என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் குற்றச்சாட்டு மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களின் பின்னணி குறித்த ஆய்வில் அத்தேர்வு ஏழை மாணவர்களால் எட்டிப்பிடிக்க முடியாதது என்பது உறுதியாகியுள்ளது.

    முதல் 50 இடங்களுக்குள் வந்தவர்களில் சுமார் 74 விழுக்காட்டினர் சி.பி.எஸ்.சி. பாடத்திட்ட பள்ளிகளில் படித்தவர்கள். 13 சதவீதம் ஆந்திர பாடத்திட்டம், 8 சதவீதம் மராட்டிய பாடத்திட்டம், 5சதவீதம் மேற்கு வங்க பாடத்திட்டத்தில் படித்தவர்கள். தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் உள்ளிட்ட பெரும் பான்மையான பிற பாடத் திட்டங்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை. எல்லா மாணவர்களும் பணக்காரர்கள், 74 விழுக்காட்டினர் உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள், அனைவரும் நகரப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள், 98 விழுக்காட்டினர் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். இப்படியாக சாதித்தவர்களுக்கும், சாதிக்க முடியாதவர்களுக்கும் இடையே மலைக்கும், மடுவுக்குமான வேறுபாடு இருக்கும் நிலையில், இருவரையும் மோத விடுவது நியாயமா?

    மருத்துவம் படிக்க வருவோர் அனைவரும் ஒரே மாதிரியான அளவு கோலால் அளவிடப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது சரி என்றால், நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களின் சமூக, பொருளாதார, கல்வி வாய்ப்புகளும் ஒரே மாதிரியாக இருப்பதுதானே சரியானதாக இருக்கும்? அவ்வாறு இல்லாமல் வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கு போட்டி நடத்தினால், கல்வி வாய்ப்பிலும், பொருளா தாரத்திலும் சிறந்தவர்கள் தானே வெற்றி பெறுவார்கள்? அது தானே இப்போது நடந்திருக்கிறது? இது எந்த வகையில் சமூக நீதியாகவும், சமநீதியாகவும் இருக்கும்? என்பதை அரசு விளக்க வேண்டும்.

    சம வாய்ப்பை வழங்காத, சி.பி.எஸ்.இ பாடத்திட்ட, தனிப்பயிற்சி பெறும், நகர்ப்புற, பணக்கார, உயர் வகுப்பினருக்கு சாதகமாக இருக்கும் நீட் தேர்வு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. எனவே, நீட் தேர்வு நாடு முழுவதும் ரத்து செய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் சமவாய்ப்பற்ற நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அரியலூரில் 3 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது
    • கடும் சோதனைக்கு பின்னர் தேர்வெழுத அனுமதி

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூர் விநாயகா பப்ளிக் பள்ளி, அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் பள்ளி, தாமரைக்குளம் ராம்கோ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி என 3 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. மாணவிகள் அணிருந்த காதணி, தங்க சங்கிலி வளையல் உள்ளிட்ட அனைத்து அணிகலன்களையும் கழற்றி பெற்றோரிடம் ஒப்படைத்த பின்னர், வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இத்தேர்வை எழுத 2,078 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 2039 பேர் எழுதினர். 11 மாணவர்கள், 28 மாணவிகள் என 39 பேர் தேர்வெழுத வரவில்லை.

    • அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.20 மணி வரை தேர்வு நடை பெற்றது.
    • சேலம் மாவட்டத்தில் 10,400 மாணவர்கள் நீட் தேர்வை உற்சாகமாக எழு தினர்.

    சேலம்:

    இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வானது தேசிய தேர்வு முகமை நடத்தி வரு கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.20 மணி வரை தேர்வு நடை பெற்றது.

    சேலம்

    சேலம் மாவட்டத்தில் 10,400 மாணவர்கள் நீட் தேர்வை உற்சாகமாக எழு தினர். இதற்கான சேலம் மாவட்டம் முழுவதும் 17 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்த மாண வர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், கெங்க வல்லி, கொளத்தூர், சங்க கிரி உள்ளிட்ட பகுதி களில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் நீட் தேர்வை எழுதினர்.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 5000 பேர் தேர்வு எழுதினர். மாணவ, மாணவிகள், ஹால்டிக்கெட்டில் உள்ள படி குறிப்பட்ட நேரத்தில் வந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கம்போல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வு நடைபெற்றது.

    • பைரவி (வயது 17) பிளஸ் -2வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில்தற்போது மாணவி நீட் பயிற்சி பெற்று வருகிறார்
    • வீட்டிலிருந்து வந்த மாணவி பைரவி திடீரென மாயமாகியுள்ளார்

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள எரவார் கிராமத்தை சேர்ந்த ரவி மகள் பைரவி (வயது 17) இவர் அருகிலுள்ள பெரிய சிறுவத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் -2வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில்தற்போது மாணவி நீட் பயிற்சி பெற்று வருகிறார் எனகூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்து வந்த மாணவி பைரவி திடீரென மாயமாகியுள்ளார். இது சம்பந்தமாக அவரது பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத பட்சத்தில் இது சம்பந்தமாக மாணவியின் தந்தை ரவி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிளஸ் 2ல் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு, 20 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.
    • தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும்.

    திருப்பூர் :                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நவம்பர் மூன்றாம் வாரத்தில் இருந்து, ஒவ்வொரு சனிக்கிழமையும், மருத்துவ நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒரு ஒன்றியத்துக்கு தலா ஒரு மையம் என, 414 பயிற்சி மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும். தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 1 மாணவர்கள், 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்.

    ஒரு பயிற்சி மையத்திற்கு 70 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதில் பிளஸ் 2ல் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு, 20 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.இந்த வகுப்புகள் நேரடி வகுப்புகளாக நடக்கும். திருப்பூரில் குறைந்தது 13 ஒன்றியங்கள் தவிர கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்தார்.

    ×