search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby"

    • ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்கும் போது சிலர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.
    • குழந்தையின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் அப்பெண் ரீல்ஸ் எடுத்துள்ளார்.

    சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து வெளியிடும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது. ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்கும் போது சிலர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.

    தற்போது குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கிணற்றுக்கு அருகில் அமர்ந்துள்ள பெண் ஒரு பாடலுக்கு ஏற்றவாறு நடன அசைவுகள் செய்து ரீல்ஸ் எடுத்துள்ளார்.

    அப்போது அவளது காலை பிடித்தவாறு கிணற்றுக்குள் அருகில் அவளது குழந்தை உள்ளது. சிறிது கை கழுவினால் கூட குழந்தை கிணற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. ஆனால் குழந்தையின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் அப்பெண் ரீல்ஸ் எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில் பலரும் அப்பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை மட்டுமே டையப்பர் பயன்படுத்தலாம்.
    • பயன்படுத்தப்பட்ட டயாப்பர்களை தகுந்த முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

    குழந்தைகளுக்கு டயாப்பர் பயன்படுத்தப்படும் பொழுது அவர்களுடைய மென்மையான சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அந்த சரும பாதிப்பு என்பது எரிச்சலை ஏற்படுத்தி அரிப்பை உண்டாக்குவதால் குழந்தை அசவுகரியமாக உணர்வதன் காரணமாக அழுகிறது.

    குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும், பாதுகாப்பான முறையிலும் டயாப்பரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து மருத்துவ ஆலோசகர்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

    டயப்பரை நான்கு மணிநேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். குழந்தைகள் மலம் கழித்ததை கவனித்து எச்சரிக்கையாக அதை மாற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் எளிதாக நோய்த்தொற்று ஏற்படக்கூடும். டயாப்பர் கிருமித்தொற்றைத் தடுக்க பயன்படுத்தும் ஆன்டிசெப்டிக் கூட குழந்தைகளின் மென்மையான சருமத்தை பதம் பார்த்து விடலாம்.

    அந்த நிலையில், குழந்தையின் சருமம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து அதற்கு ஏற்ற டயாப்பரை மருத்துவர்கள் ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும். அதன் பின்னர் டயாப்பரை முறையாக பயன்படுத்தி வரும்பொழுது குழந்தைகளின் தோலில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

    டயாப்பரை சுற்றியுள்ளது சருமப் பகுதிகளை தொடும்பொழுது குழந்தை அழும்போதோ, டயப்பர் மாற்றும் போதோ குழந்தைகள் அழக்கூடும். இந்த நிலைகளில் டையப்பர் பயன்பாடு காரணமாக குழந்தையின் சருமம் பாதிக்கப்பட்டு இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

    அந்த நிலையில் தொடக்க கட்டத்திலேயே தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகளின் சருமத்தில் அரிப்பு ஏற்பட்டு சிவந்த நிலையில் ரத்த கசிவும் உருவாகலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

    வயிற்றுப்போக்கு நோயால் குழந்தைகள் பாதிக்கப்படும் பொழுது பயன்படுத்தப்படும் டயப்பர் மூலமாகவும் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். அத்துடன் டயாப்பரை இறுக்கமாக அணிவதன் மூலமாகவும் குழந்தையின் சருமம் பாதிக்கப்படுகிறது.

    குழந்தைகளுடைய சருமம் மிகவும் உணர்வு திறன் கொண்டது அதனால் டயாப்பரில் உள்ள பல்வேறு ரசாயன பொருட்கள், துணி போன்றவை குழந்தைகளின் சருமத்துக்கு ஏற்றதாக இருப்பதில்லை. அதனால் குழந்தையின் சரும நிலை பற்றி அறிந்து அதற்கு ஏற்ற டயாப்பரை பயன்படுத்துவது நல்லது.

    பகல் முழுவதுமே டையாப்பரை பயன்படுத்தும் பழக்கத்தை தவிர்த்து அவ்வப்போது குழந்தைகளின் சருமத்திற்கு சூரிய வெளிச்சமும் காற்றோட்டமும் கிடைக்கும் படி அவர்களை சுதந்திரமாக விட வேண்டும்.

    பாதுகாப்பான டயாப்பர் பயன்பாடு குறித்து மருத்துவ ஆலோசகர்கள் தெரிவித்த குறிப்புகள் கீழே வருமாறு :-

    குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை மட்டுமே டையப்பர் பயன்படுத்தலாம். அதற்குப் பிறகு டாய்லெட் பயன்படுத்துவதற்கு பழக்கப்படுத்தி விடுவது நல்லது.

    வெளியூர்களுக்கு செல்லும் பொழுது அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது மட்டும் குழந்தைகளுக்கு டயாப்பரை பயன்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

    முடிந்தவரை பகல் நேரங்களில் டயாப்பரை பயன்படுத்தாமல் இரவு நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம். வாசனை கொண்ட டயாப்பர்கள் சுகாதாரத்திற்கு ஏற்றதாக இல்லாமல் போகலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

    ஒருமுறை பயன்படுத்திவிட்டு அந்த டயாப்பரை நான்கு மணி நேரம் கழித்து அகற்றும் பொழுது குழந்தை மலம் அல்லது சிறுநீர் கழிக்கவில்லை என்பதற்காக அதே டயாப்பரை மீண்டும் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    பயன்படுத்தப்பட்ட டயாப்பர்களை தகுந்த முறையில் அப்புறப்படுத்த வேண்டும். குழந்தைகள் அவற்றை வைத்து விளையாடும் வகையில் வீடுகளில் போட்டு வைக்கக்கூடாது.

    • உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கால், கை விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.
    • விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் பயப்பட தேவையில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    பொதுவாக இரண்டு தலைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தைகளை பார்த்து இருக்கிறோம். மேலும் கை, கால் இல்லாமல் பிறந்த குழந்தைகள் பற்றியும் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் கர்நாடகத்தில் 25 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ள அதிசயம் நடந்துள்ளது. அது பற்றிய விவரம் பின்வருமாறு:-

    பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி அருகே கொன்னூரை சேர்ந்தவர் பாரதி (வயது 35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாரதி பிரசவத்திற்காக ராபகவி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கால், கை விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.

    அதாவது வலது கையில் 6 விரல்களும், இடது கையில் 7 விரல்களும், இரு கால்களிலும் தலா 6 விரல்களும் என மொத்தம் 25 விரல்களுடன் அந்த அதிசய குழந்தை பிறந்துள்ளது. இதை பார்த்து டாக்டர்களும், பாரதி மற்றும் அவரது குடும்பத்தினரும் ஆச்சரியம் அடைந்தனர்.

    இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், "பாரதியின் குழந்தைக்கு 25 விரல்கள் உள்ளன. மற்றபடி குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் பயப்பட தேவையில்லை" என்றனர்.

    • சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
    • கிளினிக் உள்ளிட்ட பகுதியில் சீல் வைக்கப்பட்ட அறைகளை சீலை அகற்றி அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் மகப்பேறு அரசு டாக்டராக பணியாற்றி வந்தவர் அனுராதா.

    இந்த நிலையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக அனுராதா மற்றும் புரோக்கர்கள் உள்பட 3 பேர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

    இதையடுத்து நாலு கால் மண்டபம் அருகே இருந்த தமிழரசு மருத்துவமனையில் டாக்டர் அனுராதா பயன்படுத்தி வந்த அறைகள் மற்றும் நாமக்கல் ரோட்டில் உள்ள அவருக்கு சொந்தமான மருத்துவமனை மற்றும் கிளினீக் ஆகியவை அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

    குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட துணை இயக்குனர் திலகம் தலைமையில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் அனுராதா பணியாற்றி வந்த திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மற்றும் அனுராதாவுக்கு சொந்தமான நாமக்கல் ரோட்டில் உள்ள கிளினிக் உள்ளிட்ட பகுதியில் சீல் வைக்கப்பட்ட அறைகளை சீலை அகற்றி அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சோதனை நிறைவடைந்த பிறகு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.

    இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்ன? குழந்தை விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? மேலும் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த கேள்விகளுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

    தற்போது குழந்தை விற்பனை விவகார வழக்கை மீண்டும் அதிகாரிகள் கையில் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பாதாம் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, நினைவாற்றலை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
    • பால் வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.

    பொதுவாக குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதில்லை, அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளின் ஊட்டச்சத்து குறைவாகவே காணப்படுகிறது. எனவே குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்து, வயதிற்கேற்ற உடல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுக்கவேண்டும்.

    எல்லா குழந்தைகளும் விளையாட்டுத்தனமாகதான் இருக்கும், எனவே நல்ல ஊட்டச்சத்துள்ள உணவை, அவர்களுடன் விளையாடிக்கொண்டே ஊட்ட முயற்சிப்பது மிக சிறந்த வழியாகும். குறைந்தது 1 மணி நேரமாவது உணவு தர செலவிடவேண்டும்.

    எதை விரும்புகிறார்கள் என்பதை நன்கு அறிந்து, அவர்களுடன் குழந்தைகளை சாப்பிடவைப்பது என்பது சற்று கடினமான விஷயம் என்றாலும், விடாமுயற்சியால் அவற்றை இலகுவாக்க முயற்சிக்கவேண்டும்.


    தற்போது உணவிலும் ரசாயன கலவை இருப்பதால், எதிர்பார்க்கும் அளவிற்கு ஊட்டச்சத்துள்ள பொருட்கள் நமக்கு கிடைப்பதில்லை. இருப்பினும் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க எவ்வகையான உணவு கொடுக்கலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

    வால்நட் பொதுவாக குழந்தைகளுக்கு மூளை செயல்பாடு எப்போதும் சுறுசுறுப்பாக தான் இருக்கும்.சில முக்கியமான உணவுகள் மூளையின் போதுமான வளர்ச்சிக்கு மேலும் உதவுகிறது.வளரும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த வகையான உணவுகள் சேர்த்துக்கொள்ளுங்கள். யதேர்ச்சையாக மூளையைப் போன்றே தோற்றமளிக்கும் வால்நட் மூளை வளர்ச்சிக்கும் உகந்ததாக உள்ளது. நுங்கு சாப்பிடுவது மார்பகத்திற்கு நல்லது என்ற சித்த மருத்துவர் கருத்து மாதிரி இல்லை இது. பல முன்னணி ஆங்கில இதழ்களில் வெளியான தகவல்தான் வால்நட்டின் நன்மைகள். வால்நட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு மூளை அல்சைமர் நோய்களைத் வராமல் தடுக்கிறது. தினமும் 3-5 வால்நட் கொடுத்தாலே போதுமானது.

    பாதாம் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, நினைவாற்றலை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாமை காலை அல்லது மாலையில் கொடுக்கலாம், இரவில் கொடுக்கக்கூடாது இரவில் கொடுப்பது செரிமான கோளாறு ஏற்படலாம்.தினமும் 5 முதல் 10 பாதாம் வரை கொடுக்கவேண்டும்,அதிக அளவு வயிற்றுப்போக்கு உண்டாக்கும்.

    முட்டை இதில் ஒமேகா 3 கொலஸ்ட்ரால் அமிலங்கள் மற்றும் கொலின் ஊட்டச்சத்து உள்ளது,தினமும் ஒரு 1 வேகவைத்த முட்டையை கொடுங்கள், 1 அல்லது 2 முட்டை கொடுக்கலாம், குழந்தைகள் ஆக்டிவ்வாக, சுறுசுறுப்பாக இருக்க உதவும்,மேலும் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும்


    மீன் வைட்டமின் டி மற்றும் பி12 கால்சியம், பாஸ்பர் நிறைந்துள்ளன, எனவே இது ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு நல்லது மற்றும் நினைவக சக்தியை அதிகரிக்கிறது.எந்த வகையான மீனாக இருந்தாலும் கொடுக்கலாம்,ஆனால் முள் அதிக அளவு உள்ள மீனை கட்லெட்,புட்டு போன்ற ஸ்னாக்ஸ் முறையில் கொடுத்தால்,குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் வாரம் இருமுறை மீன் கொடுக்கலாம், இது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தி மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

    பால் வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது,அதில் கால்சியம், புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன, இவை அனைத்தும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் நல்ல ஞாபக சக்தியை அளிக்கிறது,பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.தினமும் இரவில் ஒரு டம்ளர் பால் குடித்தால் குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் வரும்.

    • கழிவறையில் இருந்து குழந்தை சத்தம் கேட்பது தெரியவந்தது.
    • மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனிவாசபூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தார். அப்போது திடீரென வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவி கல்லூரி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.

    அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது மாணவி மயக்கத்தில் இருந்தார். இந்த நிலையில் குழந்தையின் அழுகுரல் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததால் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எங்கிருந்து குழந்தை அழும் சத்தம் வருகிறது என்று தேடினர். அப்போது கழிவறையில் இருந்து குழந்தை சத்தம் கேட்பது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவி மற்றும் குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு குழந்தை பிறந்த தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். மேலும் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் இதுதொடர்பாக மாணவியிடம் கோலார் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவி கொடுத்த தகவலின் அடிப்படையில் அனில்குமார் (21) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி கழிவறையில் மாணவி குழந்தை பெற்ற சம்பவம் கல்லூரி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

    • பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிகளவு கருப்பட்டியை சேர்த்து கொள்ளுங்கள்.
    • காய்கறிகள் சாப்பிடுவதை விட இறைச்சி வகைகளில் அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருக்கிறது.

    குழந்தைகளுக்கு எல்லா ஊட்டச்சத்துகளும் நிறைவாக கிடைக்கும் உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு தாய்ப்பால் தான். மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மையான உணவாகும்.

    குறிப்பிட்ட காலம் வரை குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்டவது குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமானது. தாயிடமிருந்து கிடைக்கும் இந்த இயற்கையான உணவு ஆரோக்கியம், குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒரு சிலருக்கு தாய்பால் சுரப்பதில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. எளிதில் சுரப்பை அதிகரிக்க சில உணவு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதை பற்றி பார்ப்போம்.

    தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்க கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், பட்டாணி மற்றும் பச்சை பயிறு, தட்டை பயிறு, இதுபோன்ற உணவுகளை ஊறவைத்து தாளித்து இதை சாப்பிட்டு வரலாம். இதில் ப்ரோட்டீன் சத்து அதிகமாக உள்ளதால் பால் சுரப்பி அதிகமாக ஆகும்.

    அதுமட்டும் அல்லாமல் நாட்டு கருது, வேகவைத்த வேர்க்கடலை இதெல்லாம் மாலை நேரத்தில் பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட்டால் ப்ரோட்டீன் சத்து அதிகமாய் கிடைக்கும்.

    கீரையை சுத்தம் செய்து கைப்பிடி அளவு பாசிப்பருப்பை அதனுடன் வேக வைத்து கூட்டாக சாப்பிட்டு வந்தால் தாய்ப் பால் சுரக்கும்.


    தாய்ப்பால் அதிகமாக சுரக்க தாய்மார்கள் அனைவரும் மட்டன், சிக்கன், கருவாடு, மீன் போன்றவை சாப்பிட வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் அனைவரும் முட்டை, சிக்கன், குழம்பு மீன் முக்கியமாக சாப்பிட வேண்டும்.

    காய்கறிகள் சாப்பிடுவதை விட இறைச்சி வகைகளில் அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருக்கிறது. அதோடு சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் பால் சுரக்கும் தன்மை இருக்காது. பகலில் கண்டிப்பாக தூங்கவேண்டும்.

    வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும். இது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

    வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் முதலியவற்றை தினமும் உணவுடன் ஒரு வேளை சேர்த்துக் கொள்வது நல்லது.

    முருங்கைக்கீரையை கூட்டாகவோ, பொரியலாகவோ, சூப்பாகவோ ஏதோ ஒரு வகையில் சமைத்து சாப்பிடலாம். இதை சரியான முறையில் சமைக்காவிட்டால் வயிற்றுப் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

    பால் சுறா என்னும் கருவாடு (அ) மீன் மிகச்சிறந்த உணவு. தாய்ப்பால் கொடுப்பவர்கள் சமைத்த உடனே சாப்பிட வேண்டும் பதப்படுத்தி வைத்து சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

    பால் சுரக்க என்ன உணவுகளை சாப்பிடவேண்டும் என்று யோசிக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் 500 மில்லி பாலினை உணவில் அவசியம் சேர்த்து கொள்ளுங்கள். இதனால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.

    கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பாலை சுரக்க செய்வதுடன், இவற்றின் சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது.


    எனவே பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிகளவு கருப்பட்டியை சேர்த்து கொள்ளுங்கள்.

    கிழங்கு வகைகள் நல்லது தான் என்றாலும் குறைவாக சாப்பிடவும். அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு மந்தம் வரும்.

    தாய்ப்பால் உற்பத்தி குறைவிற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். இச்சத்தில் குறைபாடு இருந்தால் தாய்ப்பாலை வறட்சியடையச் செய்து விடும்.

    மன அழுத்தம் வந்தால் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு இறுதியில் தாய்ப்பால் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மனதை ரிலாக்ஸாக, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம்.

    அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பொரித்தவை மற்றும் செயற்கை நிறங்கள் மற்றும் ரசாயணக் கலவை சேர்த்த உணவுகளை தவிர்க்கவும். குறிப்பாக குளிர் பானங்களைத் தவிர்க்கவும். சீதாப்பழத்தை கண்டிப்பாக தவிர்க்கவும்.

    குழந்தையின் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் போடும் முதல் அடித்தளம் இந்த தாய்ப்பாலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதனால் வீட்டில் உள்ள நம்முடைய ஆரோக்கியமான சமையல் மூலமாகவே தாய்ப்பாலை அதிகரிக்க செய்யலாம்.

    • 2012 ஆம் ஆண்டு `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
    • ஜனவரி 24 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டில் அவரது தோழி மற்றும் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்துக்கொண்டார்.

    இந்தி திரையுலகில் அதிகமான சம்பளம் வாங்க கூடிய நடிகர்களுள் வருண் தவானும் ஒருவர். 2012 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆண்டு வரை தொடர் வெற்றி படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் பதிந்தார். இவர் பிரபல இந்தி இயக்குனர் டேவிட் தவானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    2010 ஆம் ஆண்டு இயக்குனர் கரன் ஜோஹருக்கு உதவி இயக்குனராக பணிப் புரிந்தார். 2012 ஆம் ஆண்டு `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்' திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார். பல வெற்றி படங்களில் நடித்த வருண் தவான் ஜனவரி 24 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டில் அவரது தோழி மற்றும் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்துக்கொண்டார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி வருண் தவான் அப்பா ஆக போகிறார் என்ற செய்தியை இணையத்தில் பதிவிட்டார் . நேற்று வருண் தவான் மற்றும் நடாஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    வருண் தற்பொழுது அட்லி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த தெறி திரைப்படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • போர்வை வியாபாரியான தினேஷ் சிலாவத், மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
    • . நிறைமாத கர்பிணியாக உள்ள இவரது மனைவி ரஜினிக்கு நேற்று மதியம் 2:30 மணியளவில், பிரசவ வலி ஏற்பட்டது.

    ராஜஸ்தானை சேர்ந்த போர்வை வியாபாரியான தினேஷ் சிலாவத், மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். நிறைமாத கர்பிணியாக உள்ள இவரது மனைவி ரஜினிக்கு நேற்று மதியம் 2:30 மணியளவில், பிரசவ வலி ஏற்பட்டது. உடனே ஆட்டோ ரிக்க்ஷாவில் நீமுச் மாவட்ட மருத்துவமனைக்கு தனது மனைவியை தினேஷ் அழைத்துச்சென்றார்.

    ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை அனுமதிக்க மறுத்து, உதய்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் தினேஷ் செய்வதறியாது தவித்த நிலையில் ரஜினிக்கு ஆட்டோ ரிக்க்ஷாவிலேயே குழந்தை பிறந்துள்ளது.

     

    குழந்தை பிறக்கும் சமயத்தில் அருகில் இருந்தவர்கள் ஆட்டோவை துணியால் மறைத்து உதவினர். தொடர்ந்து, தாயும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமாக உள்ளனர். முன்னதாக மருத்துவமனை ஊழியர்கள் கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்தது சர்ச்சையாகியுள்ளது.

    இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், மயக்க மருந்து நிபுணர் விடுமுறையில் இருப்பதால், சிசேரியன் பிரசவம் செய்ய சாத்தியமில்லை என்பதாலேயே கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்ததாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுகுறித்த விரிவான விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் தொடர்பான சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.
    • அசினை ராகுல் ஷர்மாவுக்கு ஹவுஸ்புல் 2 படப்பிடிப்பு தளத்தில் வைத்து அக்ஷய் குமார் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் தொடர்பான சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல நடிகை அசினுடன் அக்ஷய் குமார் நடித்த கில்லாடி 786 திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் படமாக அமைந்தது.

    பின் ஹவுஸ்புல் 2 படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இதற்கிடையே அசின், அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு மணந்து கொண்டார். அசினை ராகுல் சர்மாவுக்கு ஹவுஸ்புல் 2 படப்பிடிப்பு தளத்தில் வைத்து அக்ஷய் குமார் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். ராகுல்- அசின் தம்பதிக்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. பெண்ணுக்கு ஆரின் என தம்பதி பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

     

    இந்நிலையில் சமீபத்தில், பேட்டி ஒன்றில் அசினின் கணவர் ராகுல் சர்மா பேசுகையில், அசினுக்கு குழந்தை பிறக்க இருக்கும் போது, அக்ஷய் போன் செய்து குழந்தை பிறந்த உடனே தெரிவிக்க வேண்டும் என்றார். நாள் முழுவதும் அக்ஷய் பரபரப்பாக இருந்தார்.மேலும் குழந்தை பிறந்த செய்தி கிடைத்தவுடன் கிளம்பி வருவதற்குத் தனது தனி விமானத்தைத் தயார் நிலையில் வைத்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தவுடன் தனது குடும்பத்தினர் வருவதற்கு முன்னரே முதல் ஆளாக வந்தவர் அக்ஷய் தான் என ராகுல் சர்மா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

     

    தனது வாழ்நாள் முழுவதும் மிகுந்த நட்புடன் பக்கபலமாக அக்ஷய் இருந்து வந்துள்ளார் என்றும் ராகுல் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ராகுல்- அசின் தம்பதியின் மகள் ஆரினுக்கு அக்ஷய் குமார் காட்பாதராக இருக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 4 மாதம் ஆகிவிட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி இணை உணவுகள் கொடுக்கலாம்.
    • குழந்தை பிறந்து 7 மாதம் ஆகிவிட்டால், நன்கு மசித்த சாதம், தயிர், மசித்த ஆப்பிள் கொடுக்கலாம்.

    பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது. குழந்தைகள் வளர வளர தாய்ப்பால் மட்டுமே அவர்களது பசியைப் போக்காது. குழந்தைகள் வளர்ச்சிக்கு திட உணவுகளை கொடுக்க வேண்டும்.

    * குழந்தை பிறந்த முதல் மாதம் தாய்ப்பால் தான் முதல் உணவாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை எந்த ஒரு திட உணவுகளையும் கொடுக்கக்கூடாது. முதல் மாதத்தில் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

    * குழந்தை பிறந்த 2-வது மாதத்தில் ஒரு நாளைக்கு 7-8 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    * 3-வது மாதத்தில் தாய்ப்பால் மட்டும் போதுமானது. இந்த மாதத்தில் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

     

    * 4 மாதம் ஆகிவிட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி இணை உணவுகள் கொடுக்கலாம். பழச்சாறு கொடுக்கலாம். அதிலும் ஆரஞ்சு ஜூஸை குழந்தைக்கு கொடுப்பது நல்லது. பழச்சாறு வீட்டில் தயாரித்ததாக இருக்க வேண்டியது அவசியம்.

    * 5-வது மாதத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு திட உணவுகளைக் கொடுக்க வேண்டும். வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை மசித்து கொடுக்கலாம்.

    * 6-வது மாதத்தில் குழந்தை சில உணவுகளை உட்கொள்ள மறுத்தால், அந்த உணவுகளை மீண்டும் கொடுக்க வேண்டாம். இந்த மாதத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலுடன், திட உணவுகளை கொடுக்கலாம்.

    * குழந்தை பிறந்து 7 மாதம் ஆகிவிட்டால், நன்கு மசித்த சாதம், தயிர், மசித்த ஆப்பிள் அல்லது வாழைப்பழம், வேக வைத்து மசித்த காய்கறிகள் போன்றவற்றையும் கொடுக்கலாம்.

    * குழந்தை பிறந்து 8-9 மாதம் ஆகியிருந்தால், அவர்களுக்கு இதுவரை கொடுத்த உணவின் அளவை விட, சற்று அதிகமாகவே உணவுகளை கொடுக்கலாம். கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டாம். குறிப்பாக சாக்லேட், ஜூஸ், சிப்ஸ், கேக் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    * 10 மாத குழந்தைகளுக்கு வேக வைத்த காய்கறிகள், சாதம், பால், தயிர், பழங்கள் போன்ற அனைத்தையுமே கொடுக்கலாம்.

    • தாய்ப்பால் கொடுப்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.
    • பாலூட்டும் தாய்மார்கள் ஒப்பனை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

    தாய்ப்பால் கொடுப்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். பிறந்த குழந்தைகளின் வளர்ச்சியை தாய்ப்பால்தான் அதிகமாக நிர்வகிக்கிறது. பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் இன்றியமையாதது. நோய்களை எதிர்த்து போராடும் ஆன்டிபயாடிக்குகளை வழங்குவதிலும் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடும் உணவு வகைகள், பழக்க வழக்கங்கள், மன ஆரோக்கியம் போன்றவை தாய்ப்பால் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

    * தாய்ப்பால் சுமார் 90 சதவீத நீரால் ஆனது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சுமார் 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் அல்லது பால் (அ) பழச்சாறு போன்றவற்றை குடிக்க வேண்டும்.

    * தாய்ப்பால் அதிகமாக சுரக்க பச்சை காய்கறிகள், முட்டை, பால், பூண்டு, வெங்காயம், திராட்சை சாறு, கோழி மற்றும் இறைச்சி சூப்களை சாப்பிட வேண்டும்.

    * தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க வெந்தயம், பெருஞ்சீரகம், பூண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    * தாய்ப்பால் கொடுப்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். குழந்தை தூங்கும்போது தாயும் தூங்க முயற்சி செய்ய வேண்டும்.

    * மார்பகங்களில் எப்போதும் குழந்தைக்கு பால் சுரக்கும். குழந்தைக்கு பாலூட்டும்போது மார்பகங்களில் மேலும் பால் அளவு அதிகரிக்கும்.

    * பிறந்த குழந்தைக்கு ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது 10 நிமிடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    * குழந்தை தூங்கிவிட்டால் மெதுவாக எழுப்ப முயற்சித்து பால் கொடுக்க வேண்டும்.

    * பாலூட்டும் தாய்மார்கள் ஒப்பனை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள், உலோகங்களின் வீரியம் அதிகமாக இருந்தால் அதுவும் தாய்ப்பாலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    ×