search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • இந்துக்கள் சர்க்கரை பொங்கலை சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • பாத்தியா ஓதி வழிபாடு நடத்தப்பட்ட பின்பு அது அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற்கு ட்பட்ட கொடிக்கால்பாளை யத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நூற்றாண்டுகள் பழமையான மத நல்லிணக்க  பாச்சோறு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான பாச்சோற்று திருவிழா கடந்த நவம்பர் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த பாச்சோற்று திருவிழா மொத்தம் 9 நாட்கள் நடைபெறும்.

    இந்த திருவிழா தொடங்கிய நாள் முதல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றும் பொருட்டு தங்களது வீடுகளில் சர்க்கரை பொங்கல் சமைத்து அதனை எடுத்து வந்து பள்ளிவாசலில் வைத்து பாத்தியா ஓதி வழிபாடு செய்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து ஹஜ்ரத் செய்யதினா செய்யது மஃஸூம் சாஹிப் ஒலியுல்லாஹ் நினைவிடத்தில் சந்தனம் பூசி வழிபாடு நடத்தப்பட்டது.

    இந்த திருவிழாவின் இறுதி நாளும் ஹஜ்ரத் செய்யதினா செய்யது மஃஸூம் சாஹிப் ஒலியுல்லாஹ் வின் நாளுமான நேற்று முக்கிய நிகழ்வான பாச்சோறு திருவிழா நடைபெற்றது.

    இதில் திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது வீட்டில் சர்க்ரைப் பொங்கலை சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இவ்வாறு நூற்றுக்க ணக்கான சட்டிகளில் சர்க்கரை பொங்கல் சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் கொடுத்தனர். அந்த அனைத்து பாத்திரங்களிலிருந்தும் சர்க்கரை பொங்கல் எடுக்கப்பட்டு மொத்தமாக ஒரு பெரிய சட்டியில் இடப்பட்டு பாத்தியா ஓதி வழிபாடு நடத்தப்பட்ட பின்பு அது அனைத்து தரப்பு மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

    இந்து முஸ்லீம் என அனைத்து தரப்பு மக்களும் மதப் பாகுபாடு இன்றி கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை இங்கு செலுத்தினர்.

    இந்த திருவிழாவில் செவ்வாடை அணிந்து ஆதி பராசக்தி பக்தர் ஒருவர் தலையில் சக்கரை பொங்கல் அடங்கிய பாத்திரத்தை எடுத்து வந்து வழிபாடு நடத்தியது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

    • மன்னார்குடியில் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா நடை பெற்றது.
    • தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாக செயல்பட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட அளவிலான அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் மன்னார் குடியில் உள்ள பின்லே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தனராஜ் தலைமை தாங்கினார்.

    மன்னார்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் தனபால் வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் இன்பவேணி, தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாக செயல்பட்டனர்.

    நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் சத்யா (நீடாமங்கலம்), அனுப்பிரியா (திருத்துறைப்பூண்டி) மற்றும் ஆசிரிய பயின்றுனர்கள் கலந்துக்கொண்டனர். நிறைவாக ஆசிரிய பயின்றுனர் காளிமுத்து நன்றி கூறினார்.

    • ஆண்டுதோறும் பெரியகந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் பிரசித்திபெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு அனைத்து சமுதாயத்தினரும் வந்து செல்வதால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இங்கு ஆண்டுதோறும் பெரியகந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான 722-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான புனித சந்தனக்கூடு ஊர்வலம் இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு 10.30 டிரஸ்டிகள் இல்லத்தில் இருந்து சந்தனங்கள் நிரப்பிய குடங்கள் தர்காவிற்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி சிறப்பு பிராத்தனையுடன் தொடங்கி நடைபெற்றது. பின்னர், நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று, 2.30 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர்

    எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் தலைமையில் டிரஸ்டிகள் புனித சந்தனக்குடத்தை தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்தனர். தொடர்ந்து, வானவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கியது.

    சந்தனக்கூடு ஊர்வலம் அடக்கஸ்தலம் சென்று, பின்னர் ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்கா பகுதிக்கு வந்தடைந்து, மீண்டும் தர்காவை 3 முறை சுற்றியது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பூக்களை சந்தனக்கூடு மீது தூவி பிராத்தனை செய்தனர்.

    பின்னர் அதி காலை 5 மணிக்கு சந்தன கூட்டில் இருந்து சந்தன குடங்கள் தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு, ஷேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் கலந்து கொண்டனர். விழாவை யொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ உத்தரவிட்டார்.

    பாதுகாப்பு பணியில் திருவாரூர் ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், இன்ஸ்பெக்டர்ராஜேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து, இன்று மாலை உள்ளூர் மக்களுக்காக அந்திக்கூடு ஊர்வலம் நடைபெற உள்ளது. வருகிற 27-ந்தேதி கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா முடிவடைகிறது. மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் நடந்த இந்த கந்தூரி விழாவால் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
    • மகளிர் சுகாதார கழிவறையை சீரமைக்க வேண்டும்

    நீடாமங்கலம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்பாட்டத்தில் வலங்கைமான் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தில் வடக்கு தெரு சாலை, மேலத் தெரு சாலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு செல்லக்கூடிய சாலை ஆகியவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    இதனால் மழைக்கா லங்களில் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே சாலையை சீரமைத்து தரவேண்டும்.

    மேலும் அங்குள்ள மகளிர் சுகாதார கழிவறையை சீரமைக்க கோரியும், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றித் தரக் கூறியும், நீர்த்தேக்க தொட்டியை மாதந்தோறும் முறையாக சுத்தம் செய்து தரவேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்களுடன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சி திருவாரூர் வடக்கு மாவட்ட தலைவர் முருகேஷ் மற்றும் அகில இந்திய தேவேந்திரர் குல வேளாளர் சங்கம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஆகியோர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    • எடையூர் இ.சி.ஆர். சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • மழையால் பாலத்தின் சாலையில் மணல் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது, முத்துப்பேட்டை அருகே எடையூர் இ.சி.ஆர். சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி எதிரே சாலை ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

    இந்த சாலை திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை பிரதான சாலையாகும்.

    இந்த சாலையில் கனரக வாகனங்களும் அரசு பேருந்துகளும் தனியார் வாகனங்களும் அதிக அளவில் செல்லும்.

    இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலத்தின் நடுவே போடப்பட்ட சிமெண்ட் குழாய் உடைந்து பள்ளம் உருவானது.

    பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒரு குழாயை கொண்டு வந்து பாலத்தில் வைத்து மேற் பரப்பில் மணலை நிரப்பி சென்று விட்டனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் பாலத்தின் சாலையில் மணல் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விபத்து நடப்பதற்கு முன்னர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் புதிய பாலத்தையும் கட்டி தரவேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது பற்றி அப்பகுதிளை சேர்ந்த நடையழகன் கூறியதாவது:-

    இந்த பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது பாசன வாய்க்காலின் நடுவே ஏற்பட்ட10 அடி ஆழத்திற்கும் 2 அடி அகலத்திற்கும் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து வந்து போக்குவரத்தை மாற்றி அமைத்து பாலத்தின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டும் அதுவரையில் மாற்று வழியில் போக்குவரத்து இயக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • திருவாரூர் பழைய பஸ் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையின்படி மக்கள் நல பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பணியிடத்தில் எவ்வித நியமன ஆணையும் வழங்காமல் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள மக்கள் நல பணியாளர்களுக்கு பணி வரன்முறையுடன் கூடிய ஊதியத்தை கணக்கிட்டு அரசாணை வெளியிட வேண்டும்.

    காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் திருவாரூர் பழைய பஸ் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் மாநில தலைவர் செல்ல பாண்டியன், மாநில பொதுச்செ யலாளர் புதியவன், மாநில பொருளாளர் ரங்கராஜ் உள்ளிட்ட ஏராள மானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும், திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் நல பணியாளர்கள் பேரணியாக வந்து பொதுமக்களிடம் யாசகம் பெற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
    • இதே நிலை நீடித்தால் ஒட்டுமொத்த நெற்பயிர்களும் பாதிக்கப்படக்கூடும்.

    திருவாரூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை என்பது பெய்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மழை நின்றது.

    இதனால் விவசாயிகள் தங்கள் நெல் பயிர்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

    குறிப்பாக திருவாரூர், மாங்குடி, கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் மிதமானது முதல் கன மழை என்பது பெய்து வருகிறது.

    இந்த மழையின் காரணமாக சம்பா நெல் பயிர் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே பெய்த மழையின் கார ணமாக நெல் பயிர்களில் மழை நீர் தேங்கி இருந்ததால் நெல் பயிர்கள் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகி இருந்தது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மழை விட்டிருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை என்பது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

    இந்த மழை தொடர்ந்து பெய்தால் ஒட்டுமொத்த நெல் பயிர்களும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    • பைபாஸ் சாலையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • கால்நடைகளை வீட்டில் கட்டி வைத்து வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் நெற்பயிர்கள் மற்றும் தானிய வகை பயிர்களை விளைவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை கால்நடைகள் சேதப்படுத்தி வந்தன.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை வயல் பகுதிகளில் மேய்ந்த கால்நடைகளை பிடித்து கொண்டு விவசாயிகள் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது விவசாயிகள் கால்நடைகள் விவசாய பயிர்களை சேதபடுத்தி வருகிறது.

    எனவே கால்நடைகளை வீட்டில் கட்டி போட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதைத் தொடர்ந்து போலீஸ் தரப்பில் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

    பின்னர் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • சீருடை அணிந்த 118 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர்.
    • தொடர்ந்து, பந்தலடியில் ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது.

    முன்னதாக மன்னார்குடி காந்தி சாலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம், பந்தலடி, மகாமாரியம்மன் கோவில் தெரு, ருக்மணி பாளையம், தேரடி, பெரிய கடைவீதி வழியாக சென்று கீழராஜ வீதியில் முடிவடைகிறது.

    இதில் சீருடை அணிந்த 118 ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கள் அணிவகுத்து சென்றனர்.

    தொடர்ந்து, பந்தலடியில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் வி.ஜி.கே. மணி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன், வளரும் தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் பாலை.பட்டாபிராமன், ஆர்.எஸ்.எஸ். கோட்ட இணை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 4 சுற்றுகளில் வென்று இறுதி சுற்றில் 2-ம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • வெற்றிபெற்றவர்களும் கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    பாரதிதாசன் பல்கலை க்கழக அளவிலான கல்லூரி களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் 26 கல்லூரிகள் கலந்து கொண்டன.

    இதில் மன்னார்குடி அடுத்த மேலவாசல் குமாரபுரத்தில் உள்ள சதாசிவம் கதிர்காமவள்ளி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 4 சுற்றுகளில் வென்று இறுதி சுற்றில் 2-ம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.

    இதில் மாணவிகள் அட்சயா, சவுமியா, சரண்யா ஆகியோர் பல்கலைக்கழக பெண்கள் கபடி அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் காளிதாஸ் கோப்பையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

    வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரி நிறுவனர் சதாசிவம், முதல்வர் நாகரெத்தினம், உடற்கல்வி இயக்குனர் சசிரேகா ஆகியோர் பாராட்டினர்.

    • தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டியவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் சேந்தமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனத்தின் நிறுவனரும், தாளாளருமான வெங்கட்ராஜூலு தலைமையிலும் நேதாஜி கல்வி குழுமத்தினுடைய இயக்குநனரும்), மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி தாளாளருமான விஜயசுந்தரம் முன்னிலையில் நேதாஜி கல்வி நிறுவனங்கள், திருவாரூர் சிட்டி யூனியன் வங்கி இணைந்து மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியின் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாணவர்கள் எமதர்மராஜா (மற்றும்) சித்திரகுப்தன் வேடமணிந்து சாலை பயணத்தில் கவனமின்மையால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாகவும், தலைக்கவசம் உயிர்க்கவசம், சாலை விதிகளை கடைபிடிப்போம், படியில் பயணம் செய்தால் நொடியில் மரணம், தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம், இருசக்கர வாகனங்கள் செல்லும் பொழுது அவசியம் சீட் பெல்ட் அணிவோம், மதுஅருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்கவும் வேகத்தடையில் மெதுவாக செல்லவும், போன்ற வாசகம் அடங்கிய விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

    விழிப்புணர்விற்கு சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கீழ்காவாதுகுடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி தலைக்கோவன், திருவாரூர் சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் வினோத் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும்நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டிய 1000 ஆயிரம் நபர்களுக்கு மரக்கன்று கள்வழ ங்கப்பட்டது.

    மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல்க ல்லூரியின் சார்பாக 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிர்மை நேயத்தினை மனதில் கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    விழாவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமத்தினுடைய செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    இதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியினுடைய முதல்வர் சிவகுருநாதன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் நிர்மல் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியினுடைய முதல்வர் ராமபிரபா, துணை முதல்வர்,துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாணவ- மாணவிகள் ஆசிரியர்களுடன் வாழ்க்கை நிகழ்வுகளை கலந்துரையாடினர்.
    • 20 ஆண்டுகள் கழித்து சந்தித்த இந்த நிகழ்வு எங்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும்.

    நீடாமங்கலம்:

    நீடாமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் பள்ளிப்பருவ நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.

    தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

    பின்னர், மாணவ- மாணவிகள் ஆசிரியர்களுடன் வாழ்க்கை நிகழ்வுகளை கலந்துரையாடினர்.

    பின்னர், அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.

    தொடர்ந்து, அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

    இதுகுறித்து முன்னாள் மாணவர் அருண் கூறுகையில்:-

    ஒரே பள்ளியில் படித்த நாங்கள் அனைவரும் இன்று பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறோம்.

    அனைவரும் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும் என்ற எங்களது முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

    20 ஆண்டுகள் கழித்து சந்தித்த இந்த நிகழ்வு எங்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும் என்றார்.

    ×