search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road pothole"

    • எடையூர் இ.சி.ஆர். சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • மழையால் பாலத்தின் சாலையில் மணல் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது, முத்துப்பேட்டை அருகே எடையூர் இ.சி.ஆர். சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி எதிரே சாலை ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

    இந்த சாலை திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை பிரதான சாலையாகும்.

    இந்த சாலையில் கனரக வாகனங்களும் அரசு பேருந்துகளும் தனியார் வாகனங்களும் அதிக அளவில் செல்லும்.

    இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலத்தின் நடுவே போடப்பட்ட சிமெண்ட் குழாய் உடைந்து பள்ளம் உருவானது.

    பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒரு குழாயை கொண்டு வந்து பாலத்தில் வைத்து மேற் பரப்பில் மணலை நிரப்பி சென்று விட்டனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் பாலத்தின் சாலையில் மணல் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விபத்து நடப்பதற்கு முன்னர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் புதிய பாலத்தையும் கட்டி தரவேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது பற்றி அப்பகுதிளை சேர்ந்த நடையழகன் கூறியதாவது:-

    இந்த பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது பாசன வாய்க்காலின் நடுவே ஏற்பட்ட10 அடி ஆழத்திற்கும் 2 அடி அகலத்திற்கும் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து வந்து போக்குவரத்தை மாற்றி அமைத்து பாலத்தின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டும் அதுவரையில் மாற்று வழியில் போக்குவரத்து இயக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • பொதுமக்களிடையே நெகிழ்ச்சி ஏற்படுத்தியது
    • குண்டும் குழியுமா இருந்ததால் கடும் அவதி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் அரசு மேநிலைப்பள்ளி எதிரே உள்ள சாலை சேதமடைந்து கிடக்கிறது.

    ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    மேலும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் விழுந்து காயங்களுடன் செல்வது தொடர்கதையாக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த மாதம் வேலூர் தொரப்பா டியை சேர்ந்த பெண் தனது மகனுடன் மொபட்டில் படவேடு ரேணுகாம்பாள் கோவி லுக்கு சென்று வீடு திரும்பிய போது அந்த பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    எனவே மீண்டும் அந்த இடத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க சந்தவாசல் போலீசார் நடவடிக்கை எடுத்து ள்ளனர். அதன்படி சந்தவாசல் போலீசார் சப்- இன்ஸ்பெ க்டர்கள் நாராயணன், மகேந்திரன் மற்றும் போலீசார் விபத்து நடந்த பள்ளத்தை சிமெண்டு கலவை கொண்டு சீரமை தந்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • ஆற்காடு ரோட்டில் பாதாள சாக்கடை பணியால் விபரீதம்
    • பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி கானாறு தெருவை சேர்ந்தவர் ராம் (வயது 32). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். ராம் நேற்று இரவு கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார்சைக்கிள் சென்றார்.

    பின்னர் அவர் வேலூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பினார். அவரது பின்னால் விளாப்பாக்கம் செல்லும் அரசு பஸ்சும் சென்றது.

    காகிதப்பட்டறை பஸ் நிறுத்தம் அருகே ராம் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையில் இருந்த மாடு ஒன்று குறுக்கே வந்ததால் சாலை பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் இறங்கியது.இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து நடந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். மேலும் பஸ்சும் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் ராமின் மனைவி மற்றும் குடும்பத்தினரும் அங்கு வந்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    விபத்து நடந்ததும் பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டதால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது. எனவே பஸ்சில் இருந்த சில பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். அதில் ஒரு சிலர் பஸ்சின் பின்புறம் காலால் உதைத்தனர். இதை பார்த்த போலீசார் அதில் ஒருவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    பின்னர் ராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பஸ்சையும் போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். பயணிகள் வேறு பஸ்களில் ஏறிச்சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் -ஆற்காடு சாலையில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் காரணமாக சாலையின் ஒரு பகுதியை மட்டுமே இருவழிப் போக்குவரத்துக்காக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாததால் இந்த நிலை உள்ளது. மேலும் அங்கு டாஸ்மாக் கடைகள் உள்ளதால் பலர் மது குடித்துவிட்டு சாலையில் அதிேவகமாகவும் செல்கின்றனர். ஆங்காங்கே மாடுகளும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன.

    பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் சாலை அமைக்கப்பட்டு இருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே ஆற்காடு சாலையில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×