என் மலர்

    நீங்கள் தேடியது "meeting"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கவர்னர் தமிழிசையிடம் மக்கள் பேரியக்க தலைவர் மனு
    • முறைகேடுகள் மாநில விளையாட்டுக் கவுன்சிலில் நடைபெற காரண மானவர்கள் யார்?

    புதுச்சேரி:

    புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் விளையாட்டு கவுன்சில் மற்றும் ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவற்றை முறைகேடாக உருவாக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் புதுச்சேரி என்ற விளையாட்டு ஆணையம் என்ற அமைப்பில் இணைப்ப தற்கான முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

    43 ஆண்டுகளாக இயங்கி வரும் மாநில விளையாட்டுக கவுன்சில் மற்றும் 36 ஆண்டுகளாக இயங்கி வரும் ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவற்றை மூட முயற்சிப்பதின் காரணம் என்ன? பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் மாநில விளையாட்டுக் கவுன்சிலில் நடைபெற காரண மானவர்கள் யார்? பணம் மற்றும் இதர மோசடிகள் 1980-ம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்று உள்ளது என்பதை கண்டறிய கவர்னர் மத்திய புலனாய்வு சி.பி.ஐக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    அப்போது தான் உண்மை குற்றவாளிகள் யார்? என்பது தெரிய வரும். ஏன் இந்த ஸ்போர்ட்ஸ் டெவெலப் மெண்ட் அத்தாரிட்டி என்ற அமைப்பை பல்வேறு முறைகேடுகள் செய்து சட்டத்திற்கு புறம்பாக ரெஜிஸ்டர் ஆப் சொசைட்டியில் பதிந்துள்ளனர் என்ற உண்மை தெரியவரும். சட்டத்திற்கு புறம்பான இந்த ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் புதுச்சேரி என்ற அமைப்பிற்கு வரும் 14-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புதுவை துணைநிலை கவர்னர் தமிழிசைக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துவதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, விளையாட்டு துறை அமைச்சர், தலைமை செயலர் கல்வித்துறை செயலர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோரிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் முறையான நடவடிக்கை எடுத்து கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முறைகேடாக பதிந்த பதிவையும் ரத்து செய்ய வேண்டும் இல்லையெனில் பல தொடர் போராட்டங்களை புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கம் மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கறம்பக்குடியில் தி.மு.க. தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது
    • தலைமை கழக பேச்சாளர் தஞ்சை காமராஜ் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை எடுத்துரைத்தார்.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றியம் மற்றும் நகரக் கழக சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் வரவேற்றார். கறம்பக்குடி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்லத்துரை, நகர இளைஞரணி அமைப்பாளர் ராசி பரூக் ஆகியோர் கூட்டத்தினை தொடங்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய செயலாளரும் ஆத்மா குழு தலைவருமான மணமடை முத்துகிருஷ்ணன், கறம்பக்குடி பேரூராட்சி தலைவரும் நகர தி.மு.க. செயலாளருமான முருகேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை காமராஜ் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை எடுத்துரைத்தார். இதில் கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை, பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது உள்ளிட்ட ஒன்றிய நகர இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர். தெருமுனைப் பிரச்சாரம் கறம்பக்குடி சீனி கடை முக்கம், கோவில் கடைவீதி, ரகுநாதபுரம் புது விடுதி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய நிர்வாகிகள் பற்றிய விவரங்களையும் தெரிவித்தார் .
    • ஆண்டுவிழா தொடர்பாக உறுப்பினர்கள் கருத்துகளையும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    உடுமலை :

    தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க உடுமலை கிளை சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் புலவர் நடராஜன் தலைமை வகித்தார் செயற்குழு உறுப்பினர் சிவராஜ் வரவேற்றுப் பேசினார்.

    கூட்டத்தில் இயற்கை எய்திய உறுப்பினர்களுக்கும் ஒரிசா ெரயில் விபத்தில் இறந்தவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைவர் நடராஜன் கடந்த மாதம் நடைபெற்ற ஆண்டு விழா செயல்பாடுகள் குறித்து பேசினார். தற்போது பதவியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்ப தற்கான அவசியம் ஏற்பட்டது எனவும் புதிய நிர்வாகிகள் பற்றிய விவரங்களையும் தெரிவித்தார் .ஆண்டுவிழா தொடர்பாக உறுப்பினர்கள் கருத்துகளையும் கேட்டுக் கொள்ளப்பட்டது. கடந்த மாத கூட்ட அறிக்கையை செயலாளர் அழகர்சாமி வாசித்தார். பொருளாளர் ஞானபண்டிதன் வரவு செலவு கணக்கு வாசித்து ஒப்புதல் பெற்றார். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிட்ட அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 23 -26-ம் ஆண்டு வரை 3ஆண்டுக்கான நிர்வாகிகள் பட்டியல் அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . முடிவில் துணைத்தலைவர் சின்னச்சாமி நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரத்தில் இன்று மாலை மீனவர்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
    • தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவ பிரதிநிதிகளின் சார்பில் குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரிக்கை விடப்பட்டி ருந்தது. அதன் அடிப்ப டையில் இன்று (9-ந் தேதி) பிற்பகல் 3.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் ராமநாத புரம் மாவட்ட அரசுத்துறை சார்ந்த அனைத்து அலுவ லர்களும் கலந்துகொள்ள இருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம். மேலும், தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கரூரில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது
    • நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி ஊராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. 

    ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ரியாஸ்கான், நகர் செயலாளர் ராஜபிரபு, அவை தலைவர் அய்யணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார்.
     
    ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். 
    மாற்று கட்சியில் இணைந்த உறுப்பினர்களை நீக்கி புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கி கிளைகளை பலப்படுத்தி ஊராட்சியில் கட்சியின் கொடி ஏற்றுவது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுத்தலைவர்எஸ்.எஸ்.பழனிமணிக்கம் எம்.பி. தலைமையில் ராமலிங்கம் எம்.பி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேசியதாவது:-

    தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிக்கும் பொருட்டு மாவட்டந்தோறும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் இந்த குழு கூட்டம் நடத்தப்பட்டது. இக்குழு கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்  உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

    இந்த ஆய்வில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா,  எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன்ஏ, டி.கே.ஜி.நீலமேகம், அன்பழகன், ஜவாஹிருல்லா, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெல்லையில் 30-ந்தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம் நடைபெற உள்ளது.
    நெல்லை:-


    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் நடைபெறும்.

    அதன்படி வருகிற 30-ந்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தாங்கி மனுக்களை பெறுகிறார்.

    இதில் எண்ணை நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி அவசர கூட்டம் சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் ரவிசந்திரன், நகராட்சி பொறியாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தனர்.

     இதில் வருகிற ஆகஸ்ட் மாதம் சங்கரன் கோவிலில் நடைபெற உள்ள முக்கிய திருவிழாவான ஆடித்தபசு திருவிழாவை நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை அடிப்படை வசதிகள் குறித்து உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தினர்.  கோரிக்கையை ஏற்ற சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

    இதில் சுகாதார அலுவலர் பாலச்சந்தர், நகராட்சி மேலாளர் மாரியம்மாள், தேர்தல் பிரிவு உதவியாளர் முருகன், கவுன்சிலர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆலங்குளத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது.
    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது.
    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஹரிஹர செல்வன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தூசி. செல்வராஜ், அமைப்புச் செயலர்கள் தங்கசாமி, மாவட்ட செயலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வழக்குரைஞர் அணி பொருளாளர் பால்ராஜ் வரவேற்றார்.   பேரமைப்பின் நிறுவனத் தலைவர் ராகம் சவுந்தர பாண்டியன், மாநில துணைத் தலைவர் லூர்து, வர்த்தக அணித் தலைவர் மாதவன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

    கூட்டத்தில் நான்கு வழிச்சாலைப் பணியால் தற்போதுள்ள காமராஜர் சிலை  அகற்றப்பட உள்ளதால், வேறு புதிய இடத்தில் காமராஜர் சிலை நிறுவ அனுமதி அளிக்க வேண்டும், பனைத் தொழி லாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் வழக்குரைஞர் நெல்சன், அருணாசலம், ரமேஷ் உள்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print