search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பேசிய காட்சி.

    கீழப்பாவூரில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

    கீழப்பாவூரில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
    வீ.கே.புதூர்:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள எஸ்.கே.டி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    மாவட்ட தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர் சண்முகையா  தலைமை தாங்கினார். இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

     முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞரின் 99-வது பிறந்தநாளை  சிறப்பாக கொண்டாடும் விதமாக தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்  ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சி பகுதிகள்  என அனைத்து பகுதிகளிலும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு செய்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதில் மாவட்ட கலை இலக்கிய அணி பேரவை ஆலடி எழில்வாணன்,திமுக ஒன்றிய கவுன்சிலர்களான  சீனிதுரை,  சிவன்பாண்டியன், செல்லத்துரை, அன்பழகன், அழகு சுந்தரம், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன்,  யூனியன் தலைவர்கள் காவேரி,  திவ்யா மணிகண்டன், மாவட்ட விவசாய   அணி  துணை அமைப்பாளர் சங்கை சரவணன்,

    தொண்டர் அணி துணை அமைப்பாளர்  மேல பட்டமுடையார்புரம் ராமராஜ்  மற்றும்  தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தி.மு.க. இலக்கிய அணி தொண்டர் அணி என தி.மு.க.வில் உள்ள பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×