என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North District"

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி வருகிறது.
    • பூத் கமிட்டி குழுவை நியமிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசினார்.

    கூட்டத்தில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், சடடமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் செல்வராஜ், மணி, அன்வர்கான், மாநகராட்சி கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, பி.ஆர்.செந்தில்குமார் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி வருகிறது. மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பாகவும், எழுச்சியோடும் பிறந்தநாளை கொண்டாட வேண்டும். வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதி முதல் ஜூன் மாதம் 3-ந் தேதிக்குள் வீடுதோறும் சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் கிளை, வட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பாகங்களுக்கு உடனடியாக பூத் கமிட்டி குழுவை நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் அமைச்சர் கீதா ஜுவன் தலைமையில் நாளை நடைபெறுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:- 

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்கு–ழுக்கூட்டம் நாளை (29-ந் தேதி) காலை 10மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடக்கிறது.

    கூட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் செல்வ ராஜ் தலைமை வகிக்கிறார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நான்(கீதாஜீவன்) சிறப்புரை ஆற்றுகிறேன்.

    கூட்டத்தில், ஜூன்-3-ந் தேதி கலைஞர் பிறந்தநாள் விழா குறித்தும், சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

    எனவே, கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பி னர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றிடவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
    ×