search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் அமைச்சர் கீதா ஜுவன் தலைமையில் நாளை நடைபெறுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:- 

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்கு–ழுக்கூட்டம் நாளை (29-ந் தேதி) காலை 10மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடக்கிறது.

    கூட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் செல்வ ராஜ் தலைமை வகிக்கிறார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நான்(கீதாஜீவன்) சிறப்புரை ஆற்றுகிறேன்.

    கூட்டத்தில், ஜூன்-3-ந் தேதி கலைஞர் பிறந்தநாள் விழா குறித்தும், சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

    எனவே, கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பி னர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றிடவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×