search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடைகள்"

    • தடுப்பு முறைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி பேசினர்.
    • ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் மோகன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் செய்திருந்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், ஒன்பத்துவேலி ஊராட்சியில் கால்நடைகளுக்கான நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கால்நடை துறை உதவி இயக்குநர் கண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஒன்பத்துவேலி ஊராட்சி மன்ற தலைவர் விஜயா மதியழகன் கால்நடைகளுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் முகாமில் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் உதவி மருத்துவர்கள் ரகுநாத். சௌந்தரராஜன் ஆகியோர் விளக்கி பேசினர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவக்குமார், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் கால்நடை வளர்ப்போர் பலரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் மோகன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறையினர் செய்து இருந்தனர்.

    • குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்.
    • சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் குறிப்பாக வடக்கு பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாலை, மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் மற்றும் கோவை காலநிலை ஆராய்ச்சி மைய அறிக்கைப்படி, இந்த வாரம் திருப்பூரில், வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சம் 31 டிகிரி, குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 100 சதவீதம், மாலை நேரம், 92 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் நாட்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால் போதியளவு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். விவசாய நிலங்களில் நீர்பாசனம் மற்றும் மருந்து தெளிக்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டும். மழைக்காலமாக இருப்பதால், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த வெப்ப நிலையில் கால்நடைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் போதிய கதகதப்பு ஏற்படுத்துவதுடன் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகள் சுற்றி திரிகிறது.
    • இதுநாள் வரை 43 மாடுகள், 42 கன்றுகள் பிடிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காப்பகத்திற்கு கொண்டு செல்லவும், அபராத தொகை விதிக்கவும் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மாடுகளின் உரிமைதாரர்களுக்கு அபராத தொகையாக முதல்முறை பிடிபடும் மாடு ஒன்றுக்கு அபராதம் ரூ.3000- மற்றும் கன்று ஒன்றுக்கு ரூ.1500, இரண்டாவது முறை அதே மாடு பிடிக்கப்படும் நிலையில் அதன் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.4000, கன்று ஒன்றுக்கு ரூ.2000, மூன்றாவது முறை அதே மாடு பிடிக்கப்பட்டால் அதன் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.5000, கன்று ஒன்றுக்கு ரூ.2500 வசூலிக்கப்பட்டு வந்தது.

    இதுநாள் வரை 43 மாடுகள், 42 கன்றுகள் பிடித்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது மாநகராட்சியில் தொடர்ந்து சாலையோரத்தில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பராமரிப்பதற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதினால் முதல்முறை பிடிபடும் மாடு ஒன்றுக்கு அபராதம் ரூ.5000, கன்று ஒன்றுக்கு ரூ.1500 வசூலி க்கப்படும்.

    இரண்டாவது முறை அதே மாடு பிடிக்கப்படும் நிலையில் ரூ.10000-ம் கன்று ஒன்றுக்கு ரூ.5000 வசூலிக்கப்படும். மூன்றாவது முறை அதே மாடு பிடிக்கப்பட்டால் ரூ.15000, கன்று ஒன்றுக்கு ரூ.10000 வசூலிக்கப்படும்.

    நான்காவது முறை அதே மாடு தொடர்ந்து பிடிக்கப்பட்டால் கோசாலைக்கு அனுப்பப்படும்.

    எனவே கால்நடை உரிமைதாரர்கள் தங்கள் கால்நடைகளை தங்களுக்கு உரிய இடத்தில் பராமரித்து, பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பைபாஸ் சாலையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • கால்நடைகளை வீட்டில் கட்டி வைத்து வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் நெற்பயிர்கள் மற்றும் தானிய வகை பயிர்களை விளைவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை கால்நடைகள் சேதப்படுத்தி வந்தன.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை வயல் பகுதிகளில் மேய்ந்த கால்நடைகளை பிடித்து கொண்டு விவசாயிகள் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது விவசாயிகள் கால்நடைகள் விவசாய பயிர்களை சேதபடுத்தி வருகிறது.

    எனவே கால்நடைகளை வீட்டில் கட்டி போட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதைத் தொடர்ந்து போலீஸ் தரப்பில் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

    பின்னர் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு தாது உப்புக்கள் வழங்கப்பட்டது.
    • விவசாயிகள் பலர் தங்களது கால்நடைகளைக் கொண்டு வந்து அவைகளுக்கு தடுப்பூசி, மருந்துகள் பெற்று சென்றனர்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது உசேன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர் கிருஷ்ணராஜ், உதவியாளர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு தாது உப்புக்கள் வழங்கினர். இதில் துணைத்தலைவர் ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் விவசாயிகள் பலர் தங்களது கால்நடைகளைக் கொண்டு வந்து அவைகளுக்கு தடுப்பூசி போட்டு, மருந்துகள் பெற்று சென்றனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் கால்நடை வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
    • தமிழக அரசு நேற்று முதல் கால்நடைகளுக்கு முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக கோமாரி தடுப்பு ஊசி செலுத்த முகாம் அமைக்கப்பட்டது.

    முத்தூர்: 

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் கால்நடை வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார்கள்.மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குவதால் உயிரிழப்பும் நேரிடும். கோமாரி நோய் குளிர், பனிக்காலங்களில் மற்றும் நோய் பாதித்த பகுதியிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், தடுப்பூசி போடாமல், சுகாதாரமாக கால்நடை வளர்க்காதது, நோய் பாதித்த பின்பு பிரித்து பராமரிக்காமல் இருத்தல் ஆகியவற்றால் இந்த நோய் பாதிப்பு ஏற்படும்.

    இந்த நோய்களுக்கான அறிகுறிகளானது கால்நடைகளுக்கு காய்ச்சல் வரும், மந்த நிலையில் தீவனம் உண்ணாமல், அசை போடாமல், தண்ணீர் தாகம் இருக்கும். பால் உற்பத்தி குறைந்தும், வாயில் நுரை கலந்த உமிழ்நீர் வரும். சினை மாடுகளில் கருச்சிதைவு, நாக்கு, கால் குளம்பு ஆகிய பகுதிகளில் கொப்பளங்கள், புண்ணாக மாறும். குறிப்பாக இந்நோய் மழை காலங்களில் கால்நடைகளை தாக்கும். இதனால் மழை காலம் தொடங்கும் முன்பே கால்நடைதுறை மூலம், முகாம் அமைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கோமாரி நோய் தடுப்பூசி வழங்குவார்கள். இதனால் கால்நடைகளுக்கு நோய் வருவதை முன்கூட்டியே தடுக்க முடியும்.

    இதையடுத்து தமிழக அரசு நேற்று முதல் கால்நடைகளுக்கு முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக கோமாரி தடுப்பு ஊசி செலுத்த முகாம் அமைக்கப்பட்டது. இதையடுத்து காங்கயம் அரசு கால்நடைதுறை மருத்துவ மனையை செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் திருக்குமரன் அறிவுரைப்படி நேற்று காங்கயம் ஒன்றியத்தில் 7 இடங்களில் முகாம் அமைத்து மாடு, எருமை உள்ளிட்ட 1050-கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் அந்தப் பகுதி கால்நடை மருத்துவர்கள் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    • கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டது.
    • சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு மேலாண்மைகான விருது வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்

    நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவம் முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் லாரன்ஸ், பூபதி, ராதா ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வாய்மேட்டை அடுத்த அண்ணாப்பேட்டை ஊராட்சியில் நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக கால்நடை உதவி மருத்துவர் கமலப்பட்டு வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர் கோமதி தனபால், கால்நடை உதவி மருத்துவர் சிவசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. இதில் சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு மேலாண்மைகான விருது வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • ஏரிகளில் அதிக அளவு ஆழத்திற்கு மண் எடுத்து லாரியில் கொண்டு செல்லப்படுகிறது.
    • மழை தண்ணீர் தேங்கி கால்நடைகள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்ட தமிழ் நாடு விவசாயிகள் சங்க தலைவர் ராமச்சந்திரன் தஞ்சை கனிம வள உதவி இயக்குநர் மற்றும் தஞ்சை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    செங்கிப்பட்டி பகுதியில் செங்கிப்பட்டி ஆச்சாம்பட்டி, உசிலம்பட்டி, துருசுப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள ஏரிகளில் விதிகளை மீறி அதிக அளவு ஆழத்திற்கு மண் எடுத்து லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் குறைந்த பரப்பிற்கு அனுமதி பெறப்பட்டு பல ஏக்கர் பரப்பில் மண் எடுத்து வருகின்றனர்.

    சில இடங்களில் அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல அதிக ஆழத்தில் மண் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பருவமழை காலங்களில் இதில் மழை தண்ணீர் தேங்கி கால்நடைகள் மற்றும் மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். களஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் துர்நாற்றத்தில் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
    • கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    உடுமலை:

    உடுமலை அன்னபூரணி லேஅவுட் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் துர்நாற்றத்தில் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    குவிக்கப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மேலும் இந்த பகுதியில் சுற்றி திரியும் கால்நடைகள் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் அவல நிலை உள்ளது. இதனால் கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டை கனை வாங்க வருகின்றனர்.
    • நேற்றைய சந்தை யில் ரூ.38 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அரூர்,  

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திரு வண்ணா மலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சிக்கு மாடு நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டை கனை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடு ரூ. 8,200 முதல் ரூ. 37,700 வரையும். ஆடுகள் விலை ரூ. 5,500 முதல் ரூ.10,000 வரையும், நேற்றைய சந்தை யில் ரூ.38 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ரெயிலின் மீது கற்கள் எரிதல் மற்றும் ரெயில் பாதையில் கல் வைக்கக் கூடாது.
    • கால்நடைகள் விபத்தில் சிக்கினால் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயிலின் மீது கற்கள் எரிதல் மற்றும் ரெயில் பாதையில் கல் வைக்கக் கூடாது. இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். ரெயில் பாதை அருகில் கால்நடைகளை மேய்க்ககூடாது.

    அவ்வாறு மேய்க்கும் போது கால்நடைகள் விபத்தில் சிக்கினால் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். நின்று கொண்டிருக்கும் ரெயில் மற்றும் சென்று கொண்டிருக்கும் ரெயில்கள் முன்பு செல்பி எடுக்க கூடாது.

    ரெயில் பாதைக்கு அருகில் குப்பைகளை கொட்டுவது மற்றும் தீயிட்டு கொளு த்துபவர்களை கண்ட றிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நகராட்சி ஊழியர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்
    • பஸ் நிலையம் அருகே கட்டி வைத்து உரிமையாளரை வரவழைத்து அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது

    மேட்டுப்பாளையம்,

    கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களின் மைய பகுதியாகவும், தமிழக-கேரள மாநில எல்லைப்பகுதியாகவும் மேட்டுப்பாளையம் இருந்து வருகிறது.

    சமீப காலமாக அன்னூர், கோவை, சிறுமுகை, ஊட்டி, கோத்தகிரி செல்லும் சாலைகளில் ஆடு,மாடு மற்றும் இதர கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.

    இதனால் அடிக்கடி வாகன விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஆங்காங்கே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் நகர் மன்றத்தலைவர் மெஹரீபா பர்வீன், ஆணையர் அமுதா உள்ளிட்டோர் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கால்ந டைகளை வளர்க்க வே ண்டும். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். நகராட்சியின் எச்சரிக்கை யினையும் மீறி கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிந்து வந்தன.

    இதனை யடுத்து இன்று காலை முதல் நகராட்சி ஊழியர்கள் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடை களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறு கையில் போக்கு வரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு பஸ் நிலையம் பின்புறமுள்ள உள்ள நீருந்து நிலையத்தின் அருகே கட்டி வைக்கப்பட்டு பின்னர் அதன் உரிமை யாளர்கள் வரவழை க்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.

    ×