search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
    X

    சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து கட்டி வைக்கப்பட்டுள்ளன. 

    சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

    • மாடுகளின் உரிமையாளரிடம் இருந்து ரூ.17 ஆயிரம் அபராதம் வசூலிப்பு.
    • ஏற்கனவே, பிடிபட்ட மாடுகள் மறுபடியும் பிடிபட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற்கு ட்பட்ட சாலைகளிலும், திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் கங்களாஞ்சேரி வரை இரவு நேரங்களில் மாடுகள் மற்றும் குதிரைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் தொடர்ந்து சாலை விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் திருவாரூர் நகராட்சிக்கு தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

    இதனையடுத்து திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் சாலையில் சுற்றி தெரியும் மாடுகள் மற்றும் குதிரைகள் நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடிக்கப்பட்டு அவற்றிற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், மூன்று நாட்கள் கடக்கும் பட்சத்தில் அந்த கால்நடைகள் பொது ஏலம் விடப்படும் என்றும், கால்நடைகள் மூலம் ஏற்படும் விபத்துகளுக்கு உரிமையாளரே பொறுப்பாவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து தருபவருக்கு ரூ 500 சன்மானமாக வழங்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள், நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை கடந்த இரண்டு நாட்களாக பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் பாதுகாத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளரிடமிருந்து ரூ17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் நகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே பிடிபட்ட மாடுகள் மறுபடியும் பிடிபட்டால் காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த மாடுகளால் ஏற்படும் விபத்திற்கு உரிமையாளரே பொறுப்பாவார் என்றும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுவரை 37 மாடுகள் பிடிபட்டது. இதில் 28 மாடுகளை உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி அழைத்துச் சென்றனர். மீதமுள்ள 9 மாடுகள் தற்போது நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×