search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமமக்கள்"

    • கிராம மக்கள் பாம்பை பிடிக்க முயன்றனர்.
    • வன துறையினர் கயிற்றால் கட்டி வைத்திருந்த மலைப்பாம்பை மீட்டனர்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டு கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடியிருப்புக்குள் சுமார் 12 நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உணவு தேடி வந்தது.

    இதனைக் கண்ட குடியிருப்பு வாசிகள் மலைப்பாம்பை பார்த்து கத்தி கூச்சலிட்டனர். மேலும் கிராம மக்கள் பாம்பை பிடிக்க முயன்றனர். பாம்பு சீரியதால் அனைவரும் பயந்து ஓடினர். இதனையடுத்து மாட்டின் கயிற்றை சிலர் எடுத்து வந்தனர்.

    பின்னர் பாம்பு எங்கும் செல்லாதவாறு தலை பகுதியில் கயிற்றால் சுருக்கு முடி போட்டு கட்டி வைத்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒடுகத்தூர் வன துறையினர் கயிற்றால் கட்டி வைத்திருந்த மலைப்பாம்பை மீட்டனர்.

    இதனையடுத்து மலைப்பாம்பை வனத்துறையினர் அருகே உள்ள பரவமலை காப்பு காட்டில் பத்திரமாக கொண்டு போய் விட்டனர்.

    மேலும் வனத்துறையினர் கிராம மக்களிடம் பாம்புகளை இதுபோன்று கயிற்றால் கட்டக் கூடாது என்று அறிவுறுத்தி சென்றனர்.

    குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பை கிராம மக்கள் கயிற்றால் கட்டி வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விரைவில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பரிசல் மூலம் ஆற்றை கடந்து வருகின்றனர்.

    காங்கயம்:

    மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி பகுதியில் நொய்யல் ஆறு உற்பத்தியாகி கோவை திருப்பூர், ஈரோடு மாவட்டம் வழியாக 172 கிலோ மீட்டர் தூரம் கடந்து, ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரியில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் ஒரத்துப்பாளையம் அணை அருகே கத்தாங்கண்ணி, வயக்காட்டுப்புதூர், கணபதிபாளையம், வெங்கலப்பாளையம உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமமக்கள் போதிய சாலை வசதி இல்லாததால் பரிசல் மூலம் நொய்யல் ஆற்றை கடந்து சென்னிமலை, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    கடந்த 20 வருடங்களாகியும் சாலை வசதி மற்றும் ஆற்றை கடக்க பாலம் இல்லாததால் ஆற்றின் இரு கரையிலும் கம்பங்கள் நட்டு அதில் கம்பிகளை கட்டியுள்ளனர். பரிசலில் ஏறியபின் அந்த கம்பிகளை பிடித்து கொண்டு பரிசல் மூலம் ஆற்றை கடந்து வருகின்றனர்.

    சாலை வழியாக சென்றால் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும் என்பதால் வெங்கலப்பாளையம் பகுதியில் பரிசலில் ஆற்றை கடந்து செல்லும் போது பயண தொலைவு குறையும் என்பதால் இவ்வாறு பரிசலை பயன்படுத்தி ஆற்றை கடப்பதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

    தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் 2 ஆயிரம் கன அடி வரை சென்று கொண்டிருப்பதால், அப்பகுதி மக்கள் நொய்யல் ஆற்றை கடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மழை காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, பரிசலில் செல்ல முடியாத நிலையில் இன்றும் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு ஊத்துக்குளி, சென்னிமலை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இங்கு பாலம் அமைக்க கோரி மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்றனர்.

    • வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
    • மகளிர் சுகாதார கழிவறையை சீரமைக்க வேண்டும்

    நீடாமங்கலம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்பாட்டத்தில் வலங்கைமான் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தில் வடக்கு தெரு சாலை, மேலத் தெரு சாலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு செல்லக்கூடிய சாலை ஆகியவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    இதனால் மழைக்கா லங்களில் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே சாலையை சீரமைத்து தரவேண்டும்.

    மேலும் அங்குள்ள மகளிர் சுகாதார கழிவறையை சீரமைக்க கோரியும், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றித் தரக் கூறியும், நீர்த்தேக்க தொட்டியை மாதந்தோறும் முறையாக சுத்தம் செய்து தரவேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்களுடன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சி திருவாரூர் வடக்கு மாவட்ட தலைவர் முருகேஷ் மற்றும் அகில இந்திய தேவேந்திரர் குல வேளாளர் சங்கம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஆகியோர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    • சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாற்றுவழி ஏற்படுத்தி தர வேண்டும்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, தேவராயன் பேட்டை அருகே பொன்மான் மேய்ந்த நல்லூர் பகுதியில் தஞ்சை விக்ரவாண்டி நெடுசாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    பொன்மான் மேய்ந்த நல்லூர் கருப்பூர் இடையே உள்ள சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாற்றுவழி ஏற்படுத்தி தர கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    கிராமமக்கள் சென்று வர மாற்றுவழி ஏற்படுத்தி தர நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்காததால் பொன்மான் மேய்ந்த நல்லூர் கிராமமக்கள் பொன்மான்மேய்ந்த நல்லூர் பகுதியில் தஞ்சை விக்ர வாண்டி தேசிய நெடுஞ்சாலையில் பந்தல் அமைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பாபநாசம் மெலட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 23 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருக்காலை உரிமம் முடிவடைந்த நிலையில் அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17ந் தேதி முதல் கடந்த 23 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே காத்திருப்பு போராட்ட பந்தலில், அப்பகுதி மக்கள் 21 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதத்தை அனுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதற்கிடையே நேற்று மாலை உண்ணாவிரத பந்தலுக்கு வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வாழ்த்தினார்.

    • ரங்கநாதபுரம் நடு காலணியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது தாயார் நேற்று இறந்து போனார்
    • ர்மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் 2 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டும் என்றும், இதனால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது,

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரம் நடு காலணியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது தாயார் நேற்று இறந்து போனார். அதனைத் தொடர்ந்து இவரது உடலை அடக்கம் செய்ய தனியார் நிலங்களுக்கு இடையே உள்ள வண்டிப்பாதை வழியாக அடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்தன ஆனால் இந்த வழியாக செல்லக்கூடாது என சிலர் வேலி அமைத்ததாக தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் மற்றும் தாசில்தார் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பினரும் பிடிவாதம் பிடிக்கவே அரசு அதிகாரிகள் செய்வ தறியாது திகைத்தனர்.

    ரங்கநாதபுரம் நடு காலணியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது தாயார் நேற்று இறந்து போனார்மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் 2 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டும் என்றும், இதனால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தாங்கள் வழக்கமாக பயன்படுத்தும் வண்டிப்பாதையை திறந்து விடக் கோரி நடு காலனி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். முடிவு ஏற்படாத நிலையில் அப்பகுதி மக்கள் வேலியை உடைத்து விட்டு வழக்கமாக செல்லும் வண்டிப் பாதையை பயன்படுத்தி மூதாட்டியின் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இதனை அடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. 

    • கடந்த 16ந் தேதி பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
    • ஆலையின் எந்திர இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தாசில்தார் தெரிவித்தார்

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த16ந் தேதி பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து அனுப்பட்டியில் கடந்த 8 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 22-ந் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அடிப்படையில், இரும்பு உருக்காலை உரிமத்தை நீட்டிப்பு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், மேலும் ஆலையின் எந்திர இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார் தெரிவித்தார்.இந்தநிலையில் அனுப்பட்டி கிராமத்தில் 8-வது நாளாக பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே அங்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த காத்திருப்பு போராட்டத்தில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூடும் வரை எங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும் என அனுப்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • இந்த பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது.
    • பொதுமக்கள் இறந்த விட்டால் பறவையாற்றில் இறங்கிதான் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குபொய்கை நல்லூரில் காந்திமகான் தெரு, உழவர் தெரு, சிவன்கோயில் தெரு, சுனாமி குடியிருப்பு ஆகியவை உள்ளது.

    இந்த பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது.

    இவர்களுக்கு தனி சுடுகாடு இல்லை. தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள்.

    இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இறந்த விட்டால் பறவையாற்றில் இறங்கிதான் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    பறவையாற்றில் கடல் நீர் ஏறினால் ஆள் உயரத்திற்கு தண்ணீர் ஓடும். எனவே சடலத்தை கொண்டு செல்ல இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    பல ஆண்டு காலம் கோரிக்கையை முன் வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த விபத்தில் உயிரிழந்த ராணி என்பவர் சடலத்தை ஆற்றைக் கடந்து சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

    மேலும் இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்யவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே நிரந்தரமாக பாலம் அமைத்து சுடுகாடு கூரை அமைத்து தர வேண்டுமென அது கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கோரிக்கையை அரசு செவிசாய்க்காவிட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.
    • இடத்தின் மீது கடன் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    உடுமலை:

    குடிமங்கலம் அருகே பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியாமல் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பாளையம்,அடிவள்ளி உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட கிராமங்கள் கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலக வரம்பில் வருகிறது.இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பரிவர்த்தனைகள் மேற்கொண்டு வந்தனர்.இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராம குடியிருப்புகளில் காலி இடம்,வீடுகள் விற்பனை செய்யும்போது கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.இதற்காக உரிய காரணமும் தெரிவிக்க மறுக்கின்றனர்.இதனால் இந்த கிராமங்களில் காலி இடங்களை வாங்கியவர்கள் பத்திரப் பதிவு செய்ய முடியாமலும்,இடத்தின் மீது கடன் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.எனவே பத்திரப் பதிவுத்துறை உரிய விளக்கம் அளிக்கவும்,பிரச்சினைக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    • தலைஞாயிறு ஒன்றியத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • இதுவரை ஒரு பஸ் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. தலைஞாயிறுக்கு வரும் பஸ்கள் கடைவீதியிலேயே நிறுத்தப்படுகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஒன்றியத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு காவல் நிலையம், வட்டார மருத்துவமனை, வட்டார வளர்ச்சி அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட பல அலுவலகங்கள் உள்ளன.

    இந்நிலையில், மணக்குடி, ஓரடியம்புலம், நீர்முளை போன்ற கிராமங்கள் இருந்து ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பலரும் இங்கு வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், இந்த ஊரில் இதுவரை ஒரு பஸ் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. தலைஞாயிறுக்கு வரும் பஸ்கள் கடைவீதியிலேயே நிறுத்தப்படுகிறது.

    இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நேரிசல் ஏற்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தலைஞாயிறில் பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் என காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினரும், விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளருமான சுர்ஜித் சங்கர் மற்றும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நியாய விலை கடை, தபால் நிலையம் போன்றவற்றில் இணையவழி சேவை கிடைக்காததால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.
    • அவசர தேவைக்கு கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி பொங்கலூர் அருகே உள்ளது தேவணம்பாளையம் கிராமம். இங்கு 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், தற்காலத்து இளைஞர்கள் நகர பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர். பொங்கலூரில் பி.எஸ்.என்.எல் உட்பட பல்வேறு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

    பொங்கலூரில் இருந்து தேவணம்பாளையம் கிராமம் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் இந்த கிராமத்தில் எந்த செல்போன் சிக்னலும் கிடைப்பதில்லை. கடந்த 3 ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஜியோ உட்பட எந்த நெட்வொர்க் சிம் உபயோகபடுத்தினாலும் சரியாக டவர் கிடைப்பதில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இ-மெயில், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை கூட பயன்படுத்த முடியவில்லை என தெரிவிக்கின்றனர். வீட்டிற்குள் இருக்கும் போது எந்த ஒரு அழைப்பும் வருவதில்லை எனவும், அதே போல் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் வேதனையை தெரிவிக்கின்றனர்.

    தேவணம்பாளையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தள்ளி பொங்கலூர் வந்தால் மட்டுமே செல்போன் பயன்படுத்த முடியும். கிராமத்தில் இருக்கும் போது மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பல முறை அரசு அதிகாரிகள், தொலை தொடர்பு நிறுவனங்கள் ட்ராய் ஆகியவற்றிற்கு மனு அளித்தும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    நியாய விலை கடை, தபால் நிலையம் போன்றவற்றில் இணையவழி சேவை கிடைக்காததால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். 5ஜி தொழில் நுட்பம் அறிமுக படுத்திய பிறகும் கூட தங்கள் கிராம பகுதிக்கு 2ஜி சேவை கூட கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

    • புதிய அங்காடியை திறந்து வைத்து, ரேசன் பொருள்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார்
    • கிராமமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் கிருஷ்ணாபுரம்.

    கள்ளிமேடு, வையாபு ரிதோப்பு பகுதி கிராமமக்கள் பயன்பெறும் வகையில் புதியதாக பகுதிநேர அங்காடி துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ராராமுத்திரகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சோழன் தலைமை வகித்தார்.

    பாபநாசம் வட்ட வழங்கு அலுவலர் சிவக்குமார். கூட்டுறவு சார்பதிவாளர் ஆனந்தகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய கவுன்சிலர் பி.எஸ்.குமார் கலந்து கொண்டு புதிய அங்காடியை திறந்து வைத்து, ரேசன் பொருள்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த பகுதிநேர அங்காடி மூலம் கிருஷ்ணாபுரம். கள்ளிமேடு வையாபுரிதோப்பு பகுதியை சேர்ந்த 265 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.

    நிகழ்ச்சியில் தனி வருவாய் ஆய்வாளர் அஜீத்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் புனிதாபிரகலாதன், பூண்டி கூட்டுறவு சங்க செயலர் பிரிதிவிராஜ், ஊராட்சி செயலர் அசோக் மற்றும் அங்காடி ஊழியர்கள்.

    கிராமமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×