search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the villagers"

    • ரங்கநாதபுரம் நடு காலணியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது தாயார் நேற்று இறந்து போனார்
    • ர்மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் 2 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டும் என்றும், இதனால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது,

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரம் நடு காலணியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது தாயார் நேற்று இறந்து போனார். அதனைத் தொடர்ந்து இவரது உடலை அடக்கம் செய்ய தனியார் நிலங்களுக்கு இடையே உள்ள வண்டிப்பாதை வழியாக அடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்தன ஆனால் இந்த வழியாக செல்லக்கூடாது என சிலர் வேலி அமைத்ததாக தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் மற்றும் தாசில்தார் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பினரும் பிடிவாதம் பிடிக்கவே அரசு அதிகாரிகள் செய்வ தறியாது திகைத்தனர்.

    ரங்கநாதபுரம் நடு காலணியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது தாயார் நேற்று இறந்து போனார்மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் 2 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டும் என்றும், இதனால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தாங்கள் வழக்கமாக பயன்படுத்தும் வண்டிப்பாதையை திறந்து விடக் கோரி நடு காலனி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். முடிவு ஏற்படாத நிலையில் அப்பகுதி மக்கள் வேலியை உடைத்து விட்டு வழக்கமாக செல்லும் வண்டிப் பாதையை பயன்படுத்தி மூதாட்டியின் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இதனை அடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. 

    • ஆக்கிரமிப்பு செய்த கண்மாயை மீட்டு தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயப் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லாம்பட்டி கிராமத்தில் 150 குடியிரு ப்புகள் உள்ளன. கிராமத்திற்கு பாத்தியப்பட்ட குலவன் கண்மாய் சுமார் 23 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.

    பருவ மழை காலங்களில் கண்மாயின் மூலம் கிடைக்கப்பெறும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயப் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கண்மாய்க்கு அருகே இருந்து வரும் சுமார் 24 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களை 1987-ம் ஆண்டிலிருந்து 5 நபர்கள் கொண்ட கூட்டு பட்டா எங்கள் வசம் இருந்து வருவதாக அவர்களின் வாரிசுதாரர்கள் கூறி அந்நிலங்களில் உள்ள முட்செடிகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் தற்சமயம் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கண்மாய்க்கு அருகே உள்ள நிலங்கள் அனைத்தும் கண்மாய்க்கு உட்பட்ட தாகவே இருந்து வருகிறது. எனவே இதில் தற்சமயம் தனியார் தரப்பினைச் சேர்ந்த நபர்கள் மேற்கொண்டு வரும் பணியினை நிறுத்த வேண்டும், கண்மாய்க்கு நடுவே இரு திசைகளில் இருந்து வரும் கோவில் மற்றும் மயான பகுதிக்கு செல்லும் பாதைகள் முதலியவற்றை மீட்டு தர வேண்டும்.

    அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். கண்மாய்க்கு பாத்தியப்பட்ட கலிங்கு மற்றும் கரை பகுதியை மீட்டு தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் துறையினருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அளித்துள்ளனர். ஆனால் தற்போதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

    எனவே கண்மாய்க்கு அருகில் உள்ள நிலப்பகுதிகள் கிராமத்திற்கு சொந்தமானதா? அல்லது 5 பேர்கள் கொண்ட குழுவினரின் வாரிசுகளுக்கு சொந்தமானதா? என்று முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட நிர்வாகத்தி னருக்கும், வருவாய் துறையினரும் மட்டுமே உள்ள காரணத்தினால் அவர்கள் மௌனம் கலைத்தால் மட்டுமே இதற்கு முடிவு எட்டும் என்பது சமூக ஆர்வலர்க ளின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

    மேலும் இது சம்பந்தமான நீதி கிடைக்க நீதிமன்றத்தை நாடப்போவதாக கிராம மக்கள் தரப்பினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×