search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறிஞ்சிப்பாடி அருகே மயான பாதையில் வேலி அமைப்பு கிராம மக்கள் கடும் அவதி:  நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
    X

    குறிஞ்சிப்பாடி அருகே ரங்கநாதபுரம் கிராம மக்கள் தனியார் நிலத்தின் வழியாக சுடுகாட்டிற்கு பிணத்தை எடுத்து செல்லும் காட்சி.

    குறிஞ்சிப்பாடி அருகே மயான பாதையில் வேலி அமைப்பு கிராம மக்கள் கடும் அவதி: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

    • ரங்கநாதபுரம் நடு காலணியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது தாயார் நேற்று இறந்து போனார்
    • ர்மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் 2 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டும் என்றும், இதனால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது,

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரம் நடு காலணியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது தாயார் நேற்று இறந்து போனார். அதனைத் தொடர்ந்து இவரது உடலை அடக்கம் செய்ய தனியார் நிலங்களுக்கு இடையே உள்ள வண்டிப்பாதை வழியாக அடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்தன ஆனால் இந்த வழியாக செல்லக்கூடாது என சிலர் வேலி அமைத்ததாக தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் மற்றும் தாசில்தார் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பினரும் பிடிவாதம் பிடிக்கவே அரசு அதிகாரிகள் செய்வ தறியாது திகைத்தனர்.

    ரங்கநாதபுரம் நடு காலணியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது தாயார் நேற்று இறந்து போனார்மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் 2 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டும் என்றும், இதனால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தாங்கள் வழக்கமாக பயன்படுத்தும் வண்டிப்பாதையை திறந்து விடக் கோரி நடு காலனி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். முடிவு ஏற்படாத நிலையில் அப்பகுதி மக்கள் வேலியை உடைத்து விட்டு வழக்கமாக செல்லும் வண்டிப் பாதையை பயன்படுத்தி மூதாட்டியின் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இதனை அடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.

    Next Story
    ×