search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deed registration"

    • காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அரசுக்கும், கட்டுமான துறைக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
    • பதிவு கட்டண மற்றும் சேவை கட்டண உயர்வுகளால் சிறிய மற்றும் நடுத்தர வகுப்பினரின் வீடு வாங்கும் கனவு பாதிக்கப்படும்.

    சென்னை:

    சிங்கார சென்னை கட்டுனர் சங்க தலைவர் அனிபா, செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சமீபத்திய பதிவு கட்டணம் மற்றும் சேவை கட்டண உயர்வு சம்பந்தமாக அனைத்து கட்டுனர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று எங்களது குறைகளை பரிவுடன் கேட்டு நிவர்த்தி செய்வதாக வாக்களித்த பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கும் அதில் கலந்து கொண்ட பதிவுத்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் உயர்த்தப்பட்ட பல்வேறு சேவைகளின் பதிவு கட்டணங்களின் அதீத உயர்வை மறு மதிப்பாய்வு செய்வது சம்பந்தமாக உடனடி தீர்வு காணும்படி அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அரசுக்கும், கட்டுமான துறைக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    சிறிய மற்றும் நடுத்தர கட்டுமான தொழில் புரியும் கட்டுனர்களுக்கு பெரிதும் பொருளாதார உதவியாக இருப்பது "இன்வெஸ்டர்ஸ் " எனப்படும் முதலீட்டாளர்கள். அவர்கள் கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்து கட்டுமானம் நிறைவு பெறும்போது அதை மீண்டும் மறு விற்பனை செய்து தங்களது லாபத்தை எடுத்து கொள்வார்கள். இத்தகைய முதலீட்டாளர்களால் அரசுக்கு ஒரே சொத்துக்கு இரண்டு முறை வருவாய் வரக்கூ டிய வாய்ப்பாய் அமைகிறது. அத்தகைய முதலீடுகள் இத்தகைய பதிவு கட்டண மற்றும் சேவை கட்டண உயர்வுகளால், சொத்து பரிவர்த்தனைகளுக்கான செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

    இதன் விளைவாக, செலவினங்கள் குறைவாக உள்ள மற்றும் லாபம் அதிகம் உள்ள அண்டை மாநிலங்களில்மு தலீட்டாளர்கள் முதலீடு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பதிவு கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி போன்ற வருமானங்களில் பெருமளவு பாதிப்பு ஏற்படும். இத்தகைய நிகழ்வுகள் பொருளாதார முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்வினையாக அமையும். பதிவு கட்டண மற்றும் சேவை கட்டண உயர்வுகளால் சிறிய மற்றும் நடுத்தர வகுப்பினரின் வீடு வாங்கும் கனவு பாதிக்கப்படும்.

    முன்பு பவர் ஆப் அட்டர்னி பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இப்போது பத்திரப்பதிவு துறையால் அரசாணை எண். 1337 படி சொத்தின் சந்தை மதிப்பில் 1 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை நிலவரங்கள் மற்றும் நியாயமான மதிப்பீட்டிற்கு ஏற்ப கட்டணத்தை ரூ. 20,000, ரூ. 25,000 ஆக மாற்றுவதை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பத்திரப்பதிவு துறையால் அரசாணை எண். 1337 படி கட்டுமான ஒப்பந்தங்களுக்கான பதிவுக் கட்டணத்தை 1 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தியதை மறு ஆய்வு செய்ய வேண்டும். கட்டணத்தை அதன் முந்தைய விகிதத்தில் வைத்திருப்பதற்கான சாத்தியத்தை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    பெரு முதலாளிகளை மட்டுமே மனதில் வைத்து சீர்திருத்தப்படும் சட்டங்களால் குறுந்தொழில்கள் பாதிப்படைந்து நலிவடைந்து மறைந்து வருகிறது. உதாரணத்திற்கு தெருவுக்கு தெரு இருந்த மிதிவண்டி சீர்திருத்த கடைகள், நூலகங்கள், முடி திருத்தும் நிலையங்கள், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பெட்டிக்கடைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. இதனால் பாமர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்புகளால் சிறு குறு தொழில்கள் பெரும் பண முதலாளிகளின் கைக்கு சென்று விடுகிறது. சுய தொழில் செய்து சுயமரியாதையுடன் வாழ நினைக்கும் தமிழர்கள் பெரு முதலாளிகளின் வேலையை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சீர்திருத்தம் மற்றும் மாற்றம் என்பது காலத்துக்கு ஏற்ப தேவையான ஒன்றுதான். ஆனால் அத்தகைய மாற்றங்களை மறுசீரமைக்கும் போது தமிழர்களின் பொருளாதார மரபு சார்ந்த வாழ்க்கை நெறிமுறை பாதிப்படைய செய்யும் வகையில் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே இது சம்பந்தமாக அரசு கவனத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாத வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது தமிழக அரசுக்கு மேலும் வலு சேர்க்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பத்திரப்பதிவு துறையின் மூலமாக அளிக்கப்படுகின்ற சேவைகளை பெறுவதற்காக நாள்தோறும் வந்து செல்கின்றோம்.
    • மின்தடையின் போது இயங்கக்கூடிய யுபிஎஸ்., பேட்டரிகள் பழுதடைந்து விட்டது.

    உடுமலை:

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி வீதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தின் மூலமாக பத்திரப்பதிவு,பிறப்பு,இறப்பு சான்றிதழ்,திருமண பதிவு, வில்லங்கச்சான்று நில வழிகாட்டி மதிப்பு,பத்திர நகல்கள்,வில்லங்க சான்று உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் நாள்தோறும் பெற்று வருகின்றனர்.

    மின்தடையின்போது பொதுமக்கள் தங்கு தடையின்றி சேவையை பெறுவதற்கு ஏதுவாக இந்த அலுவலகத்தில் யுபிஎஸ்., வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.ஆனால் நேற்று மின்தடை ஏற்பட்ட போது யுபிஎஸ்., பேட்டரிகள் இயங்கவில்லை.இதன் காரணமாக பத்திரப்பதிவு உள்ளிட்ட பிற சேவைகள் பாதிக்கப்பட்டது.இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,

    பத்திரப்பதிவு துறையின் மூலமாக அளிக்கப்படுகின்ற சேவைகளை பெறுவதற்காக நாள்தோறும் வந்து செல்கின்றோம்.இந்த சூழலில் நேற்று பத்திரப்பதிவு மற்றும் பிற சேவைகள் செயல்பாட்டில் இருந்த போது அலுவலகத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது.அப்போது மின்தடையின் போது இயங்கக்கூடிய யுபிஎஸ்., பேட்டரிகள் பழுதடைந்து விட்டது.அனைத்து சேவைகளும் ஆன்லைன் முறையில் செய்யப்பட்டதால் பத்திரப்பதிவு உள்ளிட்ட பிற சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    மேலும் பத்திரப்பதிவுக்கு வருகை தந்திருந்த மூத்த குடிமக்கள்,உடல் நலன் குன்றியோர்,கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.அதிகாரிகள் அலட்சியம் காரணமாக யுபிஎஸ் பேட்டரிகள் முறையாக பராமரிக்காததே சேவை குறைபாட்டிற்கான காரணமாகும்.

    அரசுக்கு பெருமளவு வருமானம் ஈட்டி தரக்கூடிய பத்திரப்பதிவு அலுவலகத்தில் சுமார் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் அரசுக்கு வருமான இழப்பும் பொது மக்களுக்கு கால நேர விரையமும் ஏற்பட்டது.எனவே உடுமலை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதுடன்,யுபிஎஸ் பேட்டரிகளை முறையாக பராமரிப்பு செய்வதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • பேராசிரியர் ராமதாஸ் வலியுறுத்தல்
    • புதுவையில் இன்று பலர் கோடிஸ்வரர்களாக உருவாகி உள்ளனர்.

    புதுச்சேரி:

    முன்னாள் எம்.பி பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை வம்பாக்கீரப்பாளையம் சன்னியாசித்தோப்பில் பல ஆண்டுகளாக மீனவர்கள் பயன்பாட்டிலும் பராமரிப்பிலும் இருந்து வந்த பரமேஸ்வரி கோவில் திடலை சிலர் திட்டமிட்டு அபகரித்துள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

    நீண்ட காலமாக இல்லாமல் திடீரென்று எப்படி 4 பேர் இந்த இடத்திற்கு பத்திரம் பதிந்து திடல் அவர்களுக்கு சொந்தம் என்று கொண்டாட முடியும் என்பதை இந்த அரசுதான் விளக்க வேண்டும்.

    புதுவையில் தொடர்ந்து வீடு மற்றும் நிலம் அபகரிக்கும் கும்பல்தான் இந்த காரியத்தை செய்கிறார்கள். இதனை புதுவையின் அதிகார வர்க்கத்தின் துணையும் உதவியும் இல்லாமல் செய்திருக்க முடியாது .

    ஏழை மீனவ சமுதாயத்தின் நிலத்தை அபகரித்தால் இதைத் தட்டிக் கேட்க யாரும் வரமாட்டார்கள் என்ற நினைப்பில் இந்த காரியம் நடைபெற்று உள்ளது. புதுவையில் பல்வேறு பகுதிகளில் இருந்த சீமான் செல்வராஜ் செட்டியாரின் சொத்தை அபகரித்து புதுவையில் இன்று பலர் கோடிஸ்வரர்களாக உருவாகி உள்ளனர்.

    சுற்றுலாவை வளர்க்கி றோம் என்று மீனவர்கள் பயன்படுத்தும் கடற்கரை சூறையாடப்பட்டு வருகிறது. அரசு இந்த சட்ட விரோத காரியங்களை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வம்பாக்கீரப் பாளை யத்தில் நடந்துள்ள அபகரிப்பு சம்பந்தமாக அரசுத்துறைகள் சரியான நடவடிக்கை எடுக்காது. எனவே இந்த விஷயத்தை புதுவை சி.பி.சி.ஐ.டி விசாரித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க சொல்ல வேண்டும்.

    நில அளவைத் துறை மற்றும் பத்திரப்பதிவு அதிகாரிகள் நில அபக ரிப்புக்காக தனியாருக்கு பத்திரம் தயார் செய்து கொடுத்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்.இந்த இட அவகரிப்பு எம்.எல்.ஏ.க்கள் செய்தி ருக்கிறார்கள் என்பது உண்மையானால் அது வெட்கக்கேடானது.

    இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் புதுவையில் இடம் மற்றும் வீடுகள் அபகரிப்பு தொடர்கதை யாக இல்லாமல் முடிவுக்கு வர அரசில் இருப்பவர்கள் இந்த குற்றத்தை செய்தவர்களை காப்பாற்ற முயன்றால் அவர்களும் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.

    குற்றம் செய்தவர்களை மக்கள் முன் நிறுத்த வேண்டியது ஒரு நியாயமான அரசின் கடமை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சொத்து பத்திரம், வீட்டு மனைப்பட்டா ஆகியவை இருந்தும் வங்கிகளில் கடன் உதவி பெற முடியவில்லை.
    • மருத்துவ சிகிச்சை, திருமணம், வீடு உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் இன்றி பலரும் சிரமப்பட்டு வருகின்றனா்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் நத்தம் நிலங்களை பூஜ்ஜியம் என்ற மதிப்பின்மை வகைப்பாடு ஆக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் சொத்து கிரயம் செய்ய முடியாத பிரச்னைக்கு அரசு தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மதச்சாா்பற்ற ஜனதா தளத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் பனப்பாளையம் பாலசுப்பிரமணியம், பத்திர ஆவண எழுத்தா்கள் சங்க பல்லடம் கிளைத் தலைவா் ஜெகதீசன், பல்லடம் நகர காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் பல்லடம் பத்திரப்பதிவு துறை சாா்பதிவாளா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

    பின்னா் அவா்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக நத்தம் நில பட்டா உரிமையாளா்கள் தங்களது இடத்தை விற்கவோ, வாங்கவோ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். ஏனெனில் நத்தம் நிலத்திற்கு அரசு மதிப்பு பூஜ்ஜியமாக பத்திரப்பதிவு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் சொத்து பத்திரம், வீட்டு மனைப்பட்டா ஆகியவை இருந்தும் வங்கிகளில் கடன் உதவி பெற முடியவில்லை. அவசர செலவுக்கு இடத்தை அடமானம் வைக்கமுடியவில்லை. இதனால் மருத்துவ சிகிச்சை, திருமணம், வீடு உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் இன்றி பலரும் சிரமப்பட்டு வருகின்றனா். அரசு நத்தம் நில வகைப்பாட்டிற்கு உரிய மதிப்பு தொகையை நிா்ணயம் செய்து பத்திரப்பதிவு துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நத்தம் நிலங்களை கிரையம், அடமானம் போன்ற வழக்கமான நடைமுறைப்படி பத்திரப்பதிவு செய்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். 

    • பத்திரப்பதிவு தடையை நீக்கிட வேண்டும் என வழியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர்.
    • தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதார்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை பேரூராட்சி பகுதி யில் பழைய புல எண்கள் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளதை நீக்க கோரி ஊர் பொது மக்கள் சார்பாக நில மீட்பு குழு அமைத்து 100-க்கும் மேற்பட்டோர் பவானி தாசில்தார் ரவிச்சந்திரனிடம் தங்கள் பகுதியில் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என பத்திர பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தங்கள் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜம்பையில் 20 ஏக்கர் நிலத்தில் 93 சென்ட் போக மீதி உள்ள நிலத்தின் பத்திரப்பதிவு தடையை நீக்கிட வேண்டும் என வழியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர்.

    இதனையடுத்து கோரி க்கை மனு பெற்று க்கொ ண்ட தாசில்தார் 3 மாதத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து ள்ளதாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து பவானி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று சார் பதிவாளரிடம் கோரி க்கை மனு ஒன்று வழங்கினர்.

    • கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.
    • இடத்தின் மீது கடன் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    உடுமலை:

    குடிமங்கலம் அருகே பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியாமல் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பாளையம்,அடிவள்ளி உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட கிராமங்கள் கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலக வரம்பில் வருகிறது.இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பரிவர்த்தனைகள் மேற்கொண்டு வந்தனர்.இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராம குடியிருப்புகளில் காலி இடம்,வீடுகள் விற்பனை செய்யும்போது கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.இதற்காக உரிய காரணமும் தெரிவிக்க மறுக்கின்றனர்.இதனால் இந்த கிராமங்களில் காலி இடங்களை வாங்கியவர்கள் பத்திரப் பதிவு செய்ய முடியாமலும்,இடத்தின் மீது கடன் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.எனவே பத்திரப் பதிவுத்துறை உரிய விளக்கம் அளிக்கவும்,பிரச்சினைக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    • மாநில செயல் தலைவர் கோதண்டம், வக்கீல்களும் பார் கவுன்சிலும் என்ற தலைப்பில் பேசினார்.
    • பத்திரப்பதிவு செய்ய வக்கீல்கள் மட்டும் அனுமதிக்க சட்டம் இயற்ற வேண்டும்.

    திருப்பூர்:

    அகில இந்திய வக்கீல்கள் சங்க திருப்பூர் மாவட்ட நான்காவது மாநாடு திருப்பூரில் நடந்தது. மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மணவாளன் வரவேற்றார்.மாநாட்டை மாநில பொது செயலாளர் முத்து அமுதநாதன் துவக்கி வைத்தார். செயலாளர் பொன்ராம் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் வரதராஜ் வரவு செலவு அறிக்கையும் வாசித்தனர். மாநில செயல் தலைவர் கோதண்டம், வக்கீல்களும் பார் கவுன்சிலும் என்ற தலைப்பில் பேசினார்.

    மாநாட்டில் அகில இந்திய பார் கவுன்சில் வக்கீல்களுக்கான சேம நல நிதியை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மாநில அரசு, தமிழ்நாடு பார் கவுன்சில் வக்கீல்களுக்கு சேம நல நிதியை 10 லட்சமாக உயர்த்தியதை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.5 லட்சம் ரூபாய் நிரந்தர மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். பத்திரப்பதிவு செய்ய வக்கீல்கள் மட்டும் அனுமதிக்க சட்டம் இயற்ற வேண்டும்.

    பிறப்பு இறப்பு சான்று தொடர்பான வழக்குகள், வாடகை ஒப்பந்தம் தொடர்பான வழக்குகள், குழந்தைகள் தத்து கொடுப்பது தொடர்பான வழக்குகள் போன்றவற்றை கோர்ட்டில் தாக்கல் செய்து நடத்தும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

    திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் வக்கீல்களுக்கு அறைகள் கட்ட இடம் ஒதுக்கி அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். அனைத்து வக்கீல்கள் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் நூலகம், தபால் அலுவலகம், வங்கி, கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும்.தமிழக வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்ட கோர்ட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் பெஞ்ச், பார் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. சங்க மாவட்ட தலைவராக சுப்பராயன், துணைத்தலைவர்களாக கண்ணன், சேகர், தமயந்தி, கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்களாக மோகன், துணை செயலாளர்களாக பொன்ராம், நவீன், வினோத்குமார், கவுரி மற்றும் 7 கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    • 5 பேருக்கு பாத்தியப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான இடம் கிடாரகுளத்தில் அமைந்துள்ளது.
    • மீட்கப்பட்ட நில பத்திரத்தை வேணு கோபாலிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஒப்படைத்தார்.

    தென்காசி:

    ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது வாரிசுகளான சுந்தரி, மீனாட்சி, சங்கரமூர்த்தி, சுப்பிரமணியன் மற்றும் வேணுகோபால் ஆகிய 5 பேருக்கு பாத்தியப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான இடம் ஆலங்குளம்-சங்கரன்கோவில் சாலையில் கிடாரகுளத்தில் அமைந்துள்ளது.

    அந்த நிலத்தை உரிய அனுமதி இன்றியும் வாரிசு சான்றிதழ் இல்லாமலும் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்த ஒருவருக்கு சிலர் கிரையம் செய்து கொடுத்துள்ளனர். அந்த நிலத்தை மீட்டு தரும்படி வேணுகோபால் சமீபத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிடம் புகார் அளித்தார்.

    இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திச்செல்வி விசாரணை மேற்கொண்டு சுந்தரி மற்றும் அவரது மகனிடம் விசாரணை மேற்கொண்டு அபகரிக்கப்பட்ட நிலத்தின் கிரைய பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

    பின்பு மீட்கப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான நில பத்திரத்தை வேணு கோபாலிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஒப்படைத்தார். அதனை பெற்றுக்கொண்ட வேணுகோபால் மற்றும் அவர்களது சகோதர, சகோதரிகள் உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • பத்திரங்கள் பதிவு செய்தவற்குள் கணினியில் ஏற்பட்ட தடைகளினால் பத்திரப்பதிவு நடைபெறவில்லை.
    • இதனால் காலை முதல் மாலை வரை சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் கூட்டம் காணப்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் சார் பதிவாளர் அலுவலகம் தாலுகா அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது. நேற்று முகூர்த்த தினம் என்பதால் 40 பத்திரங்கள் கிரயம் செய்ய பத்திரப்பதிவு செய்திருந்தார்கள்.

    அதில் 4 பத்திரங்கள் மட்டும் பதிவு நடைபெற்றது. மீதமுள்ள பத்திரங்கள் பதிவு செய்தவற்குள் கணினியில் ஏற்பட்ட தடைகளினால் பத்திரப்பதிவு நடைபெறவில்லை.

    இதனால் காலை முதல் மாலை வரை சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் கூட்டம் காணப்பட்டது. நேற்று நடைபெற இருந்த பத்திரப்பதிவுகள் அனைத்தும் இன்று நடைபெற உள்ளது கூறிப்பிடதக்கது.

    ×