search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Various Requests"

    • வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
    • மகளிர் சுகாதார கழிவறையை சீரமைக்க வேண்டும்

    நீடாமங்கலம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்பாட்டத்தில் வலங்கைமான் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தில் வடக்கு தெரு சாலை, மேலத் தெரு சாலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு செல்லக்கூடிய சாலை ஆகியவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    இதனால் மழைக்கா லங்களில் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே சாலையை சீரமைத்து தரவேண்டும்.

    மேலும் அங்குள்ள மகளிர் சுகாதார கழிவறையை சீரமைக்க கோரியும், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றித் தரக் கூறியும், நீர்த்தேக்க தொட்டியை மாதந்தோறும் முறையாக சுத்தம் செய்து தரவேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்களுடன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சி திருவாரூர் வடக்கு மாவட்ட தலைவர் முருகேஷ் மற்றும் அகில இந்திய தேவேந்திரர் குல வேளாளர் சங்கம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஆகியோர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    • மயிலாடுதுறை அருகே கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் அமைந்துள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர், மேனாள் மாவட்ட தலைவர் முருகேசன், வட்டாரத் தலைவர் சித்ரா ஜாக்குலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர், வட்டாரத் செயலாளர் அறிவழகன் வரவேற்றார்.

    அப்போது ஆசிரியர் பயிற்சி மாணவர்களைக் கொண்டு பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும், இ.எம்.ஐ.எஸ். பணியை உடனடியாக நீக்கிட வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் , சரண்டர் விடுப்பு பணப்பயன்களை உடனடியாக அரசு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஏராளமான ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் ராஜ்குமார், பாலசுப்பி ரமணியன், ராபர்ட் சந்தனகுமார், சந்திரா, அருள் தாமஸ் எடிசன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • திருமருகல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டம் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன்,ஏஐடியுசி மாவட்ட தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் திருமருகல் வட்டார தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும், திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, ஏனங்குடி, கணபதிபுரம்,திட்டச்சேரி ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர் உடன் செயல்பட வேண்டும், திருமருகல் ஒன்றிய பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

    முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    ×