search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
    X

    மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மயிலாடுதுறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

    • மயிலாடுதுறை அருகே கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் அமைந்துள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர், மேனாள் மாவட்ட தலைவர் முருகேசன், வட்டாரத் தலைவர் சித்ரா ஜாக்குலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர், வட்டாரத் செயலாளர் அறிவழகன் வரவேற்றார்.

    அப்போது ஆசிரியர் பயிற்சி மாணவர்களைக் கொண்டு பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும், இ.எம்.ஐ.எஸ். பணியை உடனடியாக நீக்கிட வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் , சரண்டர் விடுப்பு பணப்பயன்களை உடனடியாக அரசு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஏராளமான ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் ராஜ்குமார், பாலசுப்பி ரமணியன், ராபர்ட் சந்தனகுமார், சந்திரா, அருள் தாமஸ் எடிசன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×