search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள்
    X

    பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள்

    • மன்னார்குடியில் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா நடை பெற்றது.
    • தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாக செயல்பட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட அளவிலான அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் மன்னார் குடியில் உள்ள பின்லே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தனராஜ் தலைமை தாங்கினார்.

    மன்னார்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் தனபால் வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் இன்பவேணி, தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாக செயல்பட்டனர்.

    நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் சத்யா (நீடாமங்கலம்), அனுப்பிரியா (திருத்துறைப்பூண்டி) மற்றும் ஆசிரிய பயின்றுனர்கள் கலந்துக்கொண்டனர். நிறைவாக ஆசிரிய பயின்றுனர் காளிமுத்து நன்றி கூறினார்.

    Next Story
    ×