search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலில் மதநல்லிணக்க பாச்சோறு திருவிழா
    X

    பாற்சோறு திருவிழாவிற்காக பாத்திரம் பாத்திரமாக வந்த உணவுகள்.

    கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலில் மதநல்லிணக்க பாச்சோறு திருவிழா

    • இந்துக்கள் சர்க்கரை பொங்கலை சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • பாத்தியா ஓதி வழிபாடு நடத்தப்பட்ட பின்பு அது அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற்கு ட்பட்ட கொடிக்கால்பாளை யத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நூற்றாண்டுகள் பழமையான மத நல்லிணக்க பாச்சோறு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான பாச்சோற்று திருவிழா கடந்த நவம்பர் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த பாச்சோற்று திருவிழா மொத்தம் 9 நாட்கள் நடைபெறும்.

    இந்த திருவிழா தொடங்கிய நாள் முதல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றும் பொருட்டு தங்களது வீடுகளில் சர்க்கரை பொங்கல் சமைத்து அதனை எடுத்து வந்து பள்ளிவாசலில் வைத்து பாத்தியா ஓதி வழிபாடு செய்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து ஹஜ்ரத் செய்யதினா செய்யது மஃஸூம் சாஹிப் ஒலியுல்லாஹ் நினைவிடத்தில் சந்தனம் பூசி வழிபாடு நடத்தப்பட்டது.

    இந்த திருவிழாவின் இறுதி நாளும் ஹஜ்ரத் செய்யதினா செய்யது மஃஸூம் சாஹிப் ஒலியுல்லாஹ் வின் நாளுமான நேற்று முக்கிய நிகழ்வான பாச்சோறு திருவிழா நடைபெற்றது.

    இதில் திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது வீட்டில் சர்க்ரைப் பொங்கலை சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இவ்வாறு நூற்றுக்க ணக்கான சட்டிகளில் சர்க்கரை பொங்கல் சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் கொடுத்தனர். அந்த அனைத்து பாத்திரங்களிலிருந்தும் சர்க்கரை பொங்கல் எடுக்கப்பட்டு மொத்தமாக ஒரு பெரிய சட்டியில் இடப்பட்டு பாத்தியா ஓதி வழிபாடு நடத்தப்பட்ட பின்பு அது அனைத்து தரப்பு மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

    இந்து முஸ்லீம் என அனைத்து தரப்பு மக்களும் மதப் பாகுபாடு இன்றி கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை இங்கு செலுத்தினர்.

    இந்த திருவிழாவில் செவ்வாடை அணிந்து ஆதி பராசக்தி பக்தர் ஒருவர் தலையில் சக்கரை பொங்கல் அடங்கிய பாத்திரத்தை எடுத்து வந்து வழிபாடு நடத்தியது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

    Next Story
    ×