search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#சோதனை"

    • சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
    • தேர்தல் முடியும் வரையிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை கவர மது பானங்களை பயன்படுத்துவதை தடுக்க மற்றும் அண்டை மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக மது பானங்களை கடத்துவதை தடுக்கவும், புதுவை பிராந்திய எல்லை பகுதிகளில் 10 இடங்களில் கலால்துறையால் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கனகசெட்டிகுளம், தவளக்குப்பம், முள்ளோடை, சோரியாங் குப்பம், மடுகரை, மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு, அய்யங் குட்டிபாளையம், கோரிமேடு ஆகிய சோதனை சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழுக்கள் புதுச்சேரியில் இருந்து அண்டை மாநிலத்துக்கும், அண்டை மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கும் வாக்காளர்களுக்கு வழங்க பணம், மதுபானங்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை சட்ட விரோதமாக கடத்துவதை, தவிர்க்க வாகன சோதனையில் தேர்தல் நடக்கும் நாள் வரை ஈடுபட உள்ளது.

    மேலும் இந்த சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    இதற்கிடையே புதுச்சேரி சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ் பெக்டர்கள் பங்கேற்றனர்.

    அந்த ஆலோசனை கூட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணித்து தடுக்க வேண்டும். தேர்தல் முடியும் வரையிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    • கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை நீலகிரி மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பறக்கும் படையினர் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனை மேற்கொண்டு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 கேரள பதிவெண் கொண்ட லாரிகள் வந்தது.

    அதிகாரிகள் அந்த லாரிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 லாரிகளிலும் ரூ.11.80 லட்சம் பணம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த வாரம் இதே பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து தீவிர சோதனை நடைபெற்றது.
    • கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று காலையில் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    சென்னை:

    மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த வாரம் இதே பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து தீவிர சோதனை நடைபெற்றது. இன்று இரண்டாவது முறையாக அதே பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    ஏற்கனவே கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று காலையில் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சென்னையிலும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த ஓதியம்பட்டு பகுதியை தலைமையிடமாக கொண்டு தனியார் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இங்கு தயாரிக்கபடும் பொருட்கள் அரியாங்குப்பம், மிஷன் வீதியில் உள்ள வணிக நிறுவனங்களின் விற்பனை செய்யபட்டு வருகிறது. பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த 20 பேர் அடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று புதுச்சேரிக்கு வந்தனர். ஒரே நேரத்தில் 3 குழுக்களாக பிரிந்து, தோல் தொழிற்சாலை மற்றும் விற்பனையகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வரி ஏய்ப்பு காரணமாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதில் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • கோவை காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.
    • வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பில் இருப்பவர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக என்.ஐ.ஏ. என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கு முன்பு இது தொடர்பாக சென்னை உள்பட அனைத்து மாவட் டங்களிலும் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. இதில் தடை செய்யப்பட்ட அமைப்பினரோடு தொடர்பில் இருப் பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையிலும் அடைத்துள்ளனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீரென்று சோத னையில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில் சீமான் தலை மையிலான நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் களத்தில் தனியாகவே நின்று ஒவ்வொரு தேர்தலையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

    விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றியும், அந்த இயக்கத்தை பற்றியும் நாம் தமிழர் கட்சியினர் பெருமைப்பட பேசி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே நீடித்து வருகிறது.

    இதுபோன்ற சூழலில் இலங்கை போரின்போது தப்பி ஓடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளிலும், வெளியிடங்களிலும் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். இதுபோன்ற நபர்கள் யார்-யாருடன் தொடர்பில் உள்ளார்கள்? அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்கள் யார்-யார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதன் அடிப்படையிலேயே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை கொளத்தூர் பாலாஜி நகர் 2-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தற்போது பெங்களூரில் தங்கி இருந்து பணி புரிந்து வருகிறார்.

    நாம் தமிழர் கட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கும் இவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பாலாஜியின் மனைவியிடம் விசாரித்து விட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

    திருச்சி, வயலூர் ரோடு சண்முகா நகரில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் வீடு உள்ளது. இங்கு இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சாட்டை துரைமுருகன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது மனைவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன் மற்றும் சிம் கார்டுகளை கைப்பற்றி உள்ளனர்.

    சாட்டை துரைமுருகன் தனது சாட்டை வலைதளம் மூலமாக மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    அந்த வகையில் தமிழக காவல்துறையினர் அவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் தான் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    2 மணி நேர சோதனைக்கு பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரி கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது பழ. நெடுமாறன் எழுதிய விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் மற்றும் திருப்பி அடிப்பேன் என்ற இன்னொரு புத்தகம் ஆகிய 2 புத்தகங்களை கைப்பற்றி சென்றனர்.

    வருகிற 7-ந்தேதி சாட்டை துரைமுருகன் சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கினர். அந்த சம்மனை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.

    கடந்த 2022-ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூரில் துப்பாக்கி தயாரிப்பது குறித்து வெளியான காணொளி குறித்து சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 7 நாம் தமிழர் கட்சியினர் மீது அப்போது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படை யில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆர்.ஜி.நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். யூடியூபரான இவர் நாம் தமிழர் கட்சியின் தொழில் நுட்ப பாசறை பிரிவு உறுப்பினராக சில ஆண்டு கள் பணியாற்றி உள்ளார். அதன்பின்னர் அந்த கட்சி யில் இருந்து விலகிவிட்டார். பின்னர் வீட்டில் இருந்த படியே விளம்பர பேனர்கள் தயாரித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். அதில் பல்வேறு கருத்துக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு 12 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் காரில் வந்து இறங்கினர். பின்னர் அவர்கள் ரஞ்சித்குமாரின் வீட்டிற்குள் சென்றனர்.

    வேறு யாரும் உள்ளே வராதபடி வாயில் கதவை அவர்கள் அடைத்தனர். மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி கொண்ட னர். பின்னர் அவரது வீட்டில் உள்ள அறைகள் முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையின் போது வீட்டில் சில ஆவணங்கள் இருந்ததாகவும், அதனை அதிகாரிகள் கைப்பற்றி கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த அவரிடமும் விசாரித்தனர்.

    இவரது வங்கி கணக்கில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த சிலருக்கு பணம் அனுப்பி உள்ளதாக புகார் எழுந்து உள்ளது. அதன்பேரி லேயே இவரது வீட்டில் சோதனை நடப்ப தாக கூறப்படுகிறது.

    கோவை காளப்பட்டி சரஸ்வதி கார்டனை சேர்ந்தவர் முருகன். இவருடைய வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி அது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரியை சேர்ந்தவர் மதிவாணன். இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். அப்பகுதி யில் ஸ்டூடியோவும், இ-சேவை மையமும் நடத்தி வருகிறார்.

    இவரது ஸ்டூடியோவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு குழுவினர் 2 கார்களில் வந்தனர். அவர்கள் மதிவாணனின் ஸ்டூடியோவிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள பகைவரை வென்றான் கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலை யொட்டி கட்சி பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந் தார்.

    இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு தேசிய புலனாய்வுக்குழு அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அதிரடியாக விஷ்ணு வீட்டில் சோதனை நடத்தினர்.

    மேலும் யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச் சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிகாலை 5 மணி முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகா ரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், பேச்சாளருமான இடும்பாவனம் கார்த்திக் நேரில் ஆஜராக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த சம்மனை பெற்றுக் கொண்ட இடும்பாவனம் கார்த்திக் வருகிற 5-ந்தேதி விசாரணைக்கு ஆஜராவதாக பதில் அனுப்பி உள்ளார்.

    சீமான் கட்சியினரின் வீடுகளில் இன்று நடை பெற்றுள்ள இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுப்பட்டது என்பது பற்றிய விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகளே முதலில் கண்டுபிடித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டுமான நிறுவனங்கள் சார்பில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை இந்த லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் சில அரசு துறை அதிகாரிகளுக்கு இந்த லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டுவதற்காக 2 கட்டுமான நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டன.

    அப்போது அந்த இடத்தின் அருகே ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றுவதற்காக இந்த லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டிருப்பது தற்போது அம்பலமாகி உள்ளன.

    யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுப்பட்டது என்பது பற்றிய விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகளே முதலில் கண்டுபிடித்துள்ளனர். கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த அதிபர் ஒருவரின் வீட்டில் அப்போது சோதனை நடத்தப்பட்டு யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி சென்னை ஐகோர்ட் டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு முதல் கட்ட விசாரணை 4 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.

    இதன் பேரிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ள னர். 2 கட்டுமான நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் இது தொடர்பாக சென்னையில் இன்று 5 இடங்களில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர்.

    குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் கட்டுமான அதிபர்களான உதயகுமார், சுனில், கெத்பாலியா, மணீஸ் ஆகிய 3 பேரின் வீடுகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 2 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    பின்னிமில் நிறுவனத்திடம் இருந்து 14.16 ஏக்கர் நிலத்தை வாங்கிய போது ஆக்கிரப்பாளர்களை காலி செய்வதற்காகவே ரூ.50 கோடி லஞ்சப் பணம் கைமாறி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப் பட்டது என்பது பற்றிய பட்டியலையும் இணைத்து உள்ளனர்.

    இதன் படி முன்னாள் எம்.பி. ஒருவர் ரூ.23 லட்சம் லஞ்சமாக பெற்றிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இன்னொரு எம்.பி.க்கு ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், கட்சி பிரமுகர் ஒருவருக்கு ரூ.33 லட்சமும் முன்னாள் பெண் கவுன்சிலர் ஒருவருக்கு ரூ.2 லட்சமும், முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு ரூ.40 லட்சமும் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி என யார்-யாருக்கு எந்தெந்த வழிகளில் லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

    50-க்கும் மேற்பட்டவர்களுக்கு இப்படி லஞ்சப் பணம் பிரித்து கொடுக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • இரவு அரசு மருத்துவமனை, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் விடுதி உள்ளிட்டவற்றை கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.
    • தொல்காப்பிய குடி ஊராட்சி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    சீர்காழி:

    தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சீர்காழியில் கடந்த 24 மணி நேர ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலை 9 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு பணியை தொடங்கினார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தது. இரவு அரசு மருத்துவமனை, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் விடுதி உள்ளிட்டவற்றை கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இரவு கொள்ளிடத்தில் தங்கினார்.

    இந்நிலையில் இன்று (1-ந்தேதி) அதிகாலையில் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியினை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் கொள்ளிடம் புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல் மையத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் எருக்கூர் நவீன அரிசி ஆலையில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து தொல்காப்பிய குடி ஊராட்சி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வில் கோட்டாட்சியர் அர்ச்சனா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கண்மணி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் மஞ்சுளா கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் தியாகராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழிஉள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் ஆய்வில் உடன் இருந்தனர். 

    • 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    தெலுங்கானா மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் சிவ பாலகிருஷ்ணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவினர் சிவ பாலகிருஷ்ணாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 20 இடங்களில் நேற்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சிவ பாலகிருஷ்ணா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அவருடைய வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகட்டாக பணம், தங்க கட்டிகள் நகைகள், 60 உயர் ரக கைக்கடிகாரங்கள், சொத்து ஆவணங்கள், 14 செல்போன்கள், 10 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரது வீடுகளில் இருந்து ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை அதிகாரிகள் எண்ணும் வீடியோ காட்சி சமூக வலைதளகளில் பரவி வருகிறது.

    தங்க நகைகள், செல்போன்களை குவித்து வைத்து வீடியோவாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    சிவபாலகிருஷ்ணா மீது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது பதவியை பயன்படுத்தி பெரும் அளவில் சொத்துக்களை குவித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

    தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை நாளை வரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    ஒரு அதிகாரியின் வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • பெரியார் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ரவி, துணை வேந்தரை சந்தித்த போது நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகவே காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய (பொறுப்பு) பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம் உள்பட பல இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. கடந்த வாரம் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 4 பேராசிரியர்கள் மற்றும் விருந்தினர் மாளிகை தற்காலிக ஊழியர் உள்பட 5 பேருக்கு கருப்பூர் போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து 5 பேரும் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை துணை வேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி அவருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது துணை வேந்தர் மீது போடப்பட்ட வழக்கின் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். சுமார் 25 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின் போது கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் துணை வேந்தர் ஜெகநாதன் மட்டுமே அந்த அறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து சிண்டிகேட் கூட்ட அரங்கில் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது துணை வேந்தர் ஜெகநாதன் வழக்கு தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

    இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி முறைகேடு புகாரில் கைதான துணை வேந்தர் ஜெகநாதனை சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 150-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடிகளுடன் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு முன்பு திரண்டனர். கவர்னர் வருவதற்கு முன்பாகவே அங்கு திரண்டிருந்த 156 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக நேற்று காலை 9 மணியளவில் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 30 போலீசார் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம், திட்டம் மற்றும் வளர்ச்சி நிர்வாக அலுவலகம், மாணவர் வசதி மையம், கணினித்துறை அலுவலகம், தமிழ்துறை அலுவலகம், ஆவணங்கள் பாதுகாக்கும் அலுவலகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் தீனதாயன் யோஜனா கிராமின் கவுசல்யா அலுவலகம் ஆகிய 7 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

    ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக இந்த சோதனை நடத்தப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ரவி, துணை வேந்தரை சந்தித்த போது நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனை இரவு 11 மணி வரை நடந்தது. பின்னர் போலீஸ் அதிகாரிகள் சோதனையை முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 14 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கவர்னர் வருகை, போலீஸ் சோதனை, மாணவர் அமைப்புகள் போராட்டம் ஆகியவை காரணமக நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகவே காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • வரி வசூலில் முறைகேடு நடப்பதாக சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு புகார் வந்தது.
    • விசாரணையையொட்டி வணிகவரித்துறை அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை 100 அடி சாலையில் வணிக வரித்துறை அலுவலகம் உள்ளது.

    இங்குள்ள அதிகாரிகள் புதுவையில் உள்ள தொழிற்சாலைகள், வணிகர்கள், வர்த்தக நிறுவனங்களிடம் வரி வசூலிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு வரி வசூலில் முறைகேடு நடப்பதாக சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு புகார் வந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 3 பேர் நேற்று இரவு 8 மணி முதல் வணிகவரித்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இன்று 2-வது நாளாக சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட 3 அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சில ஆவணங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். விசாரணையையொட்டி வணிகவரித்துறை அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அலுவலகத்துக்குள் யாரையும் பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை.

    இன்று மதியம் 12 மணியளவில் ஒரு கார் வந்தது. அதில் முகத்தை மூடிய ஒரு நபரை அலுவலகத்துக்குள் சி.பி.ஐ.அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். வணிகவரித்துறை அலுவலகத்தில் விசாரணை செய்யப்பட்ட அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் அந்த நபரை அழைத்து வந்ததாக தெரிகிறது.

    தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மண் பரிசோதனை செய்து நச்சுத்தன்மையை கணக்கிட வேண்டும்.
    • பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உதவிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    எண்ணெய் கழிவு கலந்த பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க சில பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியமானதாகும். எண்ணெய் படிந்த பகுதி மற்றும் எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட தாவரங்களை எடுத்து பரிசோதிக்க வேண்டும். மேலும் எண்ணெய் ஓடிய பகுதியில் மண் பரிசோதனை செய்து நச்சுத்தன்மையை கணக்கிட வேண்டும்.

    நிலத்தின் உள்பகுதியில் நீண்ட தூரம் எண்ணெய் ஊடுருவி இருக்கலாம் என கருதினால் நிலத்தடி நீர் சோதனையும் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் எண்ணெய் கசிவின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

    இது தவிர பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உதவிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    • விமான நிலையத்திற்கு வெளியே கூடுதல் செக்போஸ்ட்கள் வைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.
    • நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை சோதனையும் நடத்தப்பட்டது.

    கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்துக்கு வந்த மின்னஞ்சலில் இங்குள்ள ஒரு விமானத்தில் மற்றும் விமான நிலையத்தின் உள்ளே வெடிபொருட்கள் உள்ளது. அவை சில மணி நேரங்களில் வெடித்துவிடும். நான் உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவேன் என்றும், நாங்கள் பன்னிங் (வேடிக்கை) என்ற பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மின்னஞ்சலை கவனித்த விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதைதொடர்ந்து மங்களூரு நகர போலீசார் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்கு வெளியே கூடுதல் செக்போஸ்ட்கள் வைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.

    நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை சோதனையும் நடத்தப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் பாஜ்பே தலைமையில் விமான நிலைய அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு கூட்டமும் நடைபெற்றது. மேலும் விமான நிலைய அதிகாரிகளின் புகாரின் பேரில் உள்ளூர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பியவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×