search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோதனைசாவடி"

    • சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
    • தேர்தல் முடியும் வரையிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை கவர மது பானங்களை பயன்படுத்துவதை தடுக்க மற்றும் அண்டை மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக மது பானங்களை கடத்துவதை தடுக்கவும், புதுவை பிராந்திய எல்லை பகுதிகளில் 10 இடங்களில் கலால்துறையால் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கனகசெட்டிகுளம், தவளக்குப்பம், முள்ளோடை, சோரியாங் குப்பம், மடுகரை, மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு, அய்யங் குட்டிபாளையம், கோரிமேடு ஆகிய சோதனை சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழுக்கள் புதுச்சேரியில் இருந்து அண்டை மாநிலத்துக்கும், அண்டை மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கும் வாக்காளர்களுக்கு வழங்க பணம், மதுபானங்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை சட்ட விரோதமாக கடத்துவதை, தவிர்க்க வாகன சோதனையில் தேர்தல் நடக்கும் நாள் வரை ஈடுபட உள்ளது.

    மேலும் இந்த சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    இதற்கிடையே புதுச்சேரி சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ் பெக்டர்கள் பங்கேற்றனர்.

    அந்த ஆலோசனை கூட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணித்து தடுக்க வேண்டும். தேர்தல் முடியும் வரையிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    • யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து துரத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.
    • கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன சாலை பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைசாவடி அருகே யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து துரத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் சோதனைசாவடியில் ஆசனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சோதனை சாவடி அருகே வந்தது. இதை கண்ட போலீசார் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடம் சாலையில் ஒற்றை யானை உலா வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    இதனால் கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மெதுவாக யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே போலீசார் நிம்மதி அடைந்து பெருமூச்சுவிட்டனர். போக்குவரத்தும் சீரானது.

    • மேட்டூர் அருகே உள்ள பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    • தமிழக காவல்துறை சோதனை சாவடி 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரைக்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே உள்ள பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை சோதனை சாவடி 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரைக்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    உத்தரவு

    பாலாற்றில் தமிழக வனத்துறை மற்றும் காவல்துறை சோதனை சாவடி அமைப்பது குறித்து ஆய்வு அறிக்கை அனுப்ப தமிழக அரசு 2 மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டது.

    இதனை அடுத்து நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு,வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் காரைக்காடு சோதனை சாவடி யிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

    முன்னதாக கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் இரு மாவட்ட வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள்.

    ஆய்வுக்கு பிறகு ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக-கர்நாடக எல்லையான பாலாற்றில் கர்நாடகா அரசின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஈரோடு மாவட்ட எல்லையில் வனத்துறை அல்லது காவல்துறை சோதனை சாவடி இல்லை ஏதாவது சம்பவங்கள் நடந்தால் யார் பொறுப்பு என்பது பற்றி பிரச்சனை எழுந்தது.

    இது குறித்து முதல்-அமைச்சரின் கள ஆய்வில் பேசப்பட்டது. இதனை அடுத்து சோதனை சாவடி அமைப்பதில் என்ன நடை முறைகளை பின்பற்றலாம்? வனத்துறை, காவல்துறை இணைந்து சோதனை சாவடி அமைக்க லாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இது குறித்து 15 நாட்களில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.மேட்டூர் அருகே தமிழக எல்லையில்

    சோதனைசாவடி அமைக்க ஆய்வு

    • அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைகிறது
    • குற்றவாளிகள் தப்பவும், நுழையவும் முடியாது

    திருச்சி,

    திருச்சி மாநகரை சுற்றி உள்ள சாலைகளில் மாநகர காவல்துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் திண்டுக்கல் சாலையில் கருமண்டபம், மதுரை சாலையில் பஞ்சப்பூர், புதுக்கோட்டை சாலையில் செம்பட்டு, தஞ்சாவூர் சாலையில் காட்டூர் ஆயில் மில், சென்னை சாலையில் ஒய் ேராடு சந்திப்பு, திருவானைக்காவல் கொள்ளிடம், கரூர் சாலையில் குடமுருட்டி, வயலூர் சாலையில் ரெங்காநாகர், குழுமணி சாலையில் லிங்க நகர் என 9 செக்போஸ்ட்டுகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியின் வளர்ச்சியின் காரணமாக மாநகரத்தின் பரப்பளவும் மெல்ல அதிகரிப்பதோடு, குடியிருப்புகளும் பெருகி வருவதால், புதிய இணைப்பு சாலைகள் அமையப்பபெற்று உள்ளது. இதன் காரணமாக மேலும் சில செக் போஸ்ட்களை அமைக்க மாநகர காவல்துறை ஆணையர் சத்தியபிரியா முயற்சி மேற்கொண்டுள்ளார். இது குறித்த கள ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவின்படி திருச்சி மாநகரை சுற்றி மேலும் 7 சோதனைச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கே.கே.நகரில் இருந்து செல்லும் ஓலையூர் சாலையில் உடையான்பட்டி மேட்டு வாய்க்கால், எல்.ஐ.சி. காலனியில் இருந்து சாத்தனூர் செல்லும் சாலையில் கவிபாரதி நகர் பிரிவு சாலை, கலெக்டர் அலுவலகம் பின்புறம் உய்யகொண்டான் கால்வாய் ஒட்டி செல்லும் சாலையில் தொட்டிப்பாலம், மேலகல்கண்டார் கோட்டையில் காவிரி நகர், உள் அரியமங்கலத்தில் குவளக்குடி வாய்க்கால் பாலம், கல்லணை செல்லும் சாலைகளில் திருவளர்ச்சோலை மற்றும் சர்க்கார்பாளையம் சாலைகளில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் இடங்கள் என மேலும் 7 செக்போஸ்ட்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த 7 செக்போஸ்ட்டுகள் கட்டுவதற்கு அமைச்சர் கே.என்.நேருவின், தொகுதி மேம்பாட்டு நிதி கோரப்பட்டு உள்ளது.மேலும் தற்போது திண்டுக்கல் சாலை கருமண்டபத்தில் உள்ள செக்போஸ்ட் தீரன் நகர் பகுதிக்கும், குழுமணி சாலையில் உள்ள செக்போஸ்ட் அரவனூர் பகுதிக்கும், வயலூர் சாலையில் உள்ள செக்போஸ்ட் ரெட்டை வாய்க்கால் பகுதிக்கும் மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.புதிதாக 7 செக்போஸ்ட்கள் அமையப்பெற்றால், திருச்சி மாநகருக்குள் வரும் அனைத்து வழிகளிலும் மொத்தம் 16 சோதனைச்சாவடிகள் அமையப்பெறும். இதனால் மாநகருக்குள் குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மாநகரை விட்டு எங்கும் தப்பிக்கவும் முடியாது, மாநகருக்குள் நுழையவும் முடியாது என்கின்றனர் மாநகர காவல் துறை அதிகாரிகள்.

    ×