search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமான நிறுவனம்"

    • தொழில் பிரச்சினையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு.
    • பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

    பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அண்மையில் ஓஷன் லைஜப் ஸ்பேஷஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    ரூ.50 கோடி வரை பணிபரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    இந்நிலையில், தொழில் பிரச்சினையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு என நீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனம் வாதம் செய்தது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்ததாக கட்டுமான நிறுவனம் வாதித்தது.

    வாதத்தை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்ததோடு, பதிலளிக்குமாறும் அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • மெட்ரோவை விரிவுபடுத்த தொழிலாளர்கள் சுரங்கப்பாதை தோண்டினர்
    • 23,680 சதுர அடி அளவில் ஏற்பட்ட இந்த பள்ளத்தால் 7 பேர் உயிரிழந்தனர்

    உலகிலேயே பரப்பளவில் 5-வது இடத்தில் உள்ள பெரிய நாடு, பிரேசில் (Brazil). இதன் தலைநகரம் பிரெசிலியா (Brasilia).

    2007 ஜனவரி மாத காலகட்டத்தில் பிரேசில் நாட்டின் சா பாலோ (Sao Paulo) நகரின் பின்ஹெரோ (Pinheiros) பகுதியின் சுற்றுப்புறத்தில், மெட்ரோ அமைப்பை விரிவுபடுத்துவதற்காக தொழிலாளர்கள் சுரங்கப்பாதை தோண்டிக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பூமி உள்வாங்கி அங்கு மிக பெரும் பள்ளம் ஏற்பட்டது.

    இதனை சற்றும் எதிர்பாராத அப்பகுதி வழியாக நடந்து சென்ற பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் இந்த பெரும் பள்ளத்தில் விழுந்தனர்.


    23,680 சதுர அடி அளவில் ஏற்பட்ட இந்த பள்ளம், ஒரு மினி பஸ், 7 வீடுகள் மற்றும் பொதுமக்களில் சுமார் 200 பேர் என உள்ளே இழுத்து கொண்டது. பல லாரிகள் ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்தன.

    இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

    விபத்திற்கு காரணமானவர்கள் என கட்டுமான நிறுவனங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.


    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மார்கோஸ் டி லிமா போர்டா (Marcos de Lima Porta) தீர்ப்பை அறிவித்தார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    இவ்வளவு பெரிய கட்டுமானத்தில் தாங்கி பிடிக்கும் தூண்கள் உருவாக்க வேண்டும் என வல்லுனர்கள் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், செயலை விரைவாக முடித்தாக வேண்டும் என்கிற ஒரே நோக்கில் அவசரகதியில் கட்டுமானத்தை மேற்கொண்டவர்கள் பணியாற்றி உள்ளார்கள். அதனால் இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்திற்கும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கும் அவர்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி கூறினார்.

    தனது தீர்ப்பில் ரூ.4,00,96,84,875.00 ($48.3 மில்லியன்) நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ள நீதிபதி, மெட்ரோ நிறுவன அதிபர், ஒரு பொறியாளர், கட்டிட ஆய்வாளர் உட்பட 6 பேரும், 6 நிறுவனமும் இந்த அபராதத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் 2018ல் உயிரிழந்து விட்டார். ஆனாலும், அவரது வாரிசுகள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சோதனையில் ரூ .50 கோடி வரையில் லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    • அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு பின்னி மில்லுக்கு சொந்தமான 14 ஏக்கர் இடத்தை கடந்த 2015-2017ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது 2 கட்டுமான நிறுவனங்கள் விலைக்கு வாங்கியுள்ளன.

    லேண்ட் மார்க் ஹவுசிஸ், கே.எல்.பி. ஆகிய 2 கட்டு மான நிறுவனங்கள் மேற்கண்ட இடத்தை வாங்கிய போது அரசியல் பிரமுகர் கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2 கட்டுமான நிறு வனங்களிலும் வருமான வரிதுறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் நடத்திய சோதனையில் ரூ .50 கோடி வரையில் லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வருமான வரிதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கட்டுமான நிறுவனங்கள் யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்து உள்ளன என்கிற பட்டியல் கிடைத்தது. இதில் அ.தி. மு.க. முன்னாள் எம்.பி.க் கள் உள்பட அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இதன்மீது கோர்ட்டு உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த வாரம் இந்த விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்ச ஒழிப்பு போலீசார் கட்டுமான நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் 2 கட்டுமான நிறுவனங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    தி.நகர் சரவணா தெருவில் உள்ள லேட்மார்க் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கே.எல்.பி. கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவில் உள்ள கட்டுமான நிறுவன அதிபர் சுனில், மற்றும் வேப்பேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மனிஸ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடை பெற்றுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடை பெறும் இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் அரசியல் பிரமுகர் ஒருவரின் ஆடிட்டர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடை பெறும் இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரூ.50 கோடி லஞ்ச விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையை தொடர்ந்து அமலாக்கத் துறையினரும் சோதனை நடத்தி வருவதால் அரசியல் பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுப்பட்டது என்பது பற்றிய விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகளே முதலில் கண்டுபிடித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டுமான நிறுவனங்கள் சார்பில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை இந்த லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் சில அரசு துறை அதிகாரிகளுக்கு இந்த லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டுவதற்காக 2 கட்டுமான நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டன.

    அப்போது அந்த இடத்தின் அருகே ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றுவதற்காக இந்த லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டிருப்பது தற்போது அம்பலமாகி உள்ளன.

    யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுப்பட்டது என்பது பற்றிய விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகளே முதலில் கண்டுபிடித்துள்ளனர். கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த அதிபர் ஒருவரின் வீட்டில் அப்போது சோதனை நடத்தப்பட்டு யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி சென்னை ஐகோர்ட் டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு முதல் கட்ட விசாரணை 4 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.

    இதன் பேரிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ள னர். 2 கட்டுமான நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் இது தொடர்பாக சென்னையில் இன்று 5 இடங்களில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர்.

    குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் கட்டுமான அதிபர்களான உதயகுமார், சுனில், கெத்பாலியா, மணீஸ் ஆகிய 3 பேரின் வீடுகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 2 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    பின்னிமில் நிறுவனத்திடம் இருந்து 14.16 ஏக்கர் நிலத்தை வாங்கிய போது ஆக்கிரப்பாளர்களை காலி செய்வதற்காகவே ரூ.50 கோடி லஞ்சப் பணம் கைமாறி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப் பட்டது என்பது பற்றிய பட்டியலையும் இணைத்து உள்ளனர்.

    இதன் படி முன்னாள் எம்.பி. ஒருவர் ரூ.23 லட்சம் லஞ்சமாக பெற்றிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இன்னொரு எம்.பி.க்கு ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், கட்சி பிரமுகர் ஒருவருக்கு ரூ.33 லட்சமும் முன்னாள் பெண் கவுன்சிலர் ஒருவருக்கு ரூ.2 லட்சமும், முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு ரூ.40 லட்சமும் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி என யார்-யாருக்கு எந்தெந்த வழிகளில் லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

    50-க்கும் மேற்பட்டவர்களுக்கு இப்படி லஞ்சப் பணம் பிரித்து கொடுக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பீட்டர் தொடர்புடைய சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
    • இன்று 2-வது நாளாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது

    சென்னை:

    பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபராக உள்ளவர் பீட்டர். இவர் சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருகிறார்.

    முறைகேடாக பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் பீட்டர் வீட்டில் நேற்று காலையில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடந்தது. பீட்டர் தொடர்புடைய சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எதுவும் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது. சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    தொழில் அதிபர் பீட்டர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனை பற்றிய விவரங்களை அமலாக்கத்துறை வெளியிடவில்லை.

    இந்த சோதனையின்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×