search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய புலனாய்வு அமைப்பினர்"

    • கோவை காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.
    • வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பில் இருப்பவர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக என்.ஐ.ஏ. என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கு முன்பு இது தொடர்பாக சென்னை உள்பட அனைத்து மாவட் டங்களிலும் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. இதில் தடை செய்யப்பட்ட அமைப்பினரோடு தொடர்பில் இருப் பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையிலும் அடைத்துள்ளனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீரென்று சோத னையில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில் சீமான் தலை மையிலான நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் களத்தில் தனியாகவே நின்று ஒவ்வொரு தேர்தலையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

    விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றியும், அந்த இயக்கத்தை பற்றியும் நாம் தமிழர் கட்சியினர் பெருமைப்பட பேசி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே நீடித்து வருகிறது.

    இதுபோன்ற சூழலில் இலங்கை போரின்போது தப்பி ஓடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளிலும், வெளியிடங்களிலும் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். இதுபோன்ற நபர்கள் யார்-யாருடன் தொடர்பில் உள்ளார்கள்? அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்கள் யார்-யார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதன் அடிப்படையிலேயே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை கொளத்தூர் பாலாஜி நகர் 2-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தற்போது பெங்களூரில் தங்கி இருந்து பணி புரிந்து வருகிறார்.

    நாம் தமிழர் கட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கும் இவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பாலாஜியின் மனைவியிடம் விசாரித்து விட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

    திருச்சி, வயலூர் ரோடு சண்முகா நகரில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் வீடு உள்ளது. இங்கு இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சாட்டை துரைமுருகன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது மனைவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன் மற்றும் சிம் கார்டுகளை கைப்பற்றி உள்ளனர்.

    சாட்டை துரைமுருகன் தனது சாட்டை வலைதளம் மூலமாக மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    அந்த வகையில் தமிழக காவல்துறையினர் அவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் தான் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    2 மணி நேர சோதனைக்கு பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரி கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது பழ. நெடுமாறன் எழுதிய விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் மற்றும் திருப்பி அடிப்பேன் என்ற இன்னொரு புத்தகம் ஆகிய 2 புத்தகங்களை கைப்பற்றி சென்றனர்.

    வருகிற 7-ந்தேதி சாட்டை துரைமுருகன் சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கினர். அந்த சம்மனை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.

    கடந்த 2022-ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூரில் துப்பாக்கி தயாரிப்பது குறித்து வெளியான காணொளி குறித்து சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 7 நாம் தமிழர் கட்சியினர் மீது அப்போது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படை யில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆர்.ஜி.நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். யூடியூபரான இவர் நாம் தமிழர் கட்சியின் தொழில் நுட்ப பாசறை பிரிவு உறுப்பினராக சில ஆண்டு கள் பணியாற்றி உள்ளார். அதன்பின்னர் அந்த கட்சி யில் இருந்து விலகிவிட்டார். பின்னர் வீட்டில் இருந்த படியே விளம்பர பேனர்கள் தயாரித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். அதில் பல்வேறு கருத்துக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு 12 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் காரில் வந்து இறங்கினர். பின்னர் அவர்கள் ரஞ்சித்குமாரின் வீட்டிற்குள் சென்றனர்.

    வேறு யாரும் உள்ளே வராதபடி வாயில் கதவை அவர்கள் அடைத்தனர். மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி கொண்ட னர். பின்னர் அவரது வீட்டில் உள்ள அறைகள் முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையின் போது வீட்டில் சில ஆவணங்கள் இருந்ததாகவும், அதனை அதிகாரிகள் கைப்பற்றி கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த அவரிடமும் விசாரித்தனர்.

    இவரது வங்கி கணக்கில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த சிலருக்கு பணம் அனுப்பி உள்ளதாக புகார் எழுந்து உள்ளது. அதன்பேரி லேயே இவரது வீட்டில் சோதனை நடப்ப தாக கூறப்படுகிறது.

    கோவை காளப்பட்டி சரஸ்வதி கார்டனை சேர்ந்தவர் முருகன். இவருடைய வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி அது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரியை சேர்ந்தவர் மதிவாணன். இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். அப்பகுதி யில் ஸ்டூடியோவும், இ-சேவை மையமும் நடத்தி வருகிறார்.

    இவரது ஸ்டூடியோவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு குழுவினர் 2 கார்களில் வந்தனர். அவர்கள் மதிவாணனின் ஸ்டூடியோவிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள பகைவரை வென்றான் கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலை யொட்டி கட்சி பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந் தார்.

    இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு தேசிய புலனாய்வுக்குழு அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அதிரடியாக விஷ்ணு வீட்டில் சோதனை நடத்தினர்.

    மேலும் யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச் சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிகாலை 5 மணி முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகா ரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், பேச்சாளருமான இடும்பாவனம் கார்த்திக் நேரில் ஆஜராக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த சம்மனை பெற்றுக் கொண்ட இடும்பாவனம் கார்த்திக் வருகிற 5-ந்தேதி விசாரணைக்கு ஆஜராவதாக பதில் அனுப்பி உள்ளார்.

    சீமான் கட்சியினரின் வீடுகளில் இன்று நடை பெற்றுள்ள இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×