search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private"

    • பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த ஓதியம்பட்டு பகுதியை தலைமையிடமாக கொண்டு தனியார் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இங்கு தயாரிக்கபடும் பொருட்கள் அரியாங்குப்பம், மிஷன் வீதியில் உள்ள வணிக நிறுவனங்களின் விற்பனை செய்யபட்டு வருகிறது. பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த 20 பேர் அடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று புதுச்சேரிக்கு வந்தனர். ஒரே நேரத்தில் 3 குழுக்களாக பிரிந்து, தோல் தொழிற்சாலை மற்றும் விற்பனையகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வரி ஏய்ப்பு காரணமாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதில் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி முசிறி சொக்கம்பட்டி துறையூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 49). விவசாயியான இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார்.

    இவரது பண்ணையில் 200 ஆடுகள் உள்ளன. வழக்கமாக கணவன் மனைவி இருவரும் காலை சமையல் பணிகளை முடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வேளாண் தோட்டங்களுக்கு கொண்டு செல்வார்கள்.

    நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு வடிவேல் தனது மனைவியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அங்குள்ள வேளாண் தோட்டத்துக்கு சென்றார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் வடிவேல் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கொள்ளையடிக்கபட்ட நகையின் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து உடனடியாக வடிவேல் தா.பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இதில் 4 பேரின் ரேகைகள் பதிவாகியுள்ளது. மோப்பநாய் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சீர்காழியில் வருகிற 18-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடபட்டு இருந்தது.
    • மழையில் காரணமாக வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டது.

    மயிலாடுதுறை:-

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2-வது சிறப்பு தனியார்துறை வேலைவாய்;ப்பு முகாமானது வருகிற 18-ந்தேதி சனிக்கிழமையன்று சீர்காழியிலுள்ள விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் முகாம் நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10 பெண்கள் இணைந்து குழுவாக மகேந்திரா பைனான்ஸில் தலா 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
    • அப்பகுதி பொதுமக்கள் ஏராளமான ஒன்று கூடி தனியார் வசூல் செய்யும் நபரை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி குளத்துப்புதூர் பகுதியை சேர்ந்த 10 பெண்கள் இணைந்து குழுவாக மகேந்திரா பைனான்ஸில் தலா 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். வாரம் 1000 ரூபாய் வீதம் 52 வாரம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் 28 வாரம் பணம் செலுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் 29 -வது வாரம் 9 பேர் பணம் செலுத்தி ஒருவர் உடல்நலம் குன்றியதால் 400 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதம் தர வேண்டிய 600 ரூபாய் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து சிவானந்தம் என்ற வசூல் செய்யும் நபர் இரவு 12 மணிக்கு பெண்களை நடுரோட்டில் பிடித்து வைத்து பணம் கட்டவில்லை என்றால் வீட்டிற்கு செல்ல முடியாது என மிரட்டியதாக தெரிகிறது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமான ஒன்று கூடி தனியார் வசூல் செய்யும் நபரை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரச்சனையை தீர்த்து வைத்தனர் இதனையடுத்து தனியார் நிறுவன ஊழியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    • 200-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான ஆட்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.

    திருப்பூர், ஆக.2-

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மகளிா் திட்ட அலுவலகம் சாா்பில் அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதில், 200-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான ஆட்களைத் தோ்வு செய்யவுள்ளனா். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள், தையல் கலைஞா்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்க https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோா்க ளுக்கான ஆலோசனை, வங்கி கடன் குறித்த வழிகாட்டு தல்களும் வழங்கப்படவுள்ளது.

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தை தொடா்புகொள்ளலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்

    • அரசு ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன்பாக தனியார் ஆம்புலன்ஸ்கள் விபத்தான இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.
    • 10-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி அம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரங்களின் தலைமை மருத்துவமனை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட உள்நோயளி களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனியார் ஆம்புலன்கள்

    ஓமலூர் வழியாக தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. இந்த வழியாக லட்சக்க ணக்கான வாகனங்கள் வந்து செல்வதால், விபத்துக்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. விபத்தில் சிக்கியவர்களை, ஓமலூர் அரசு மருத்துவமனையின் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே ஓமலூர் அரசு மருத்துவமனை முன்பாக 10-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி அம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் தகவல் கிடைத்ததும், அரசு ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன்பாக தனியார் ஆம்புலன்ஸ்கள் விபத்தான இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.

    சிக்கல்

    இந்த நிலையில், தற்போது ஓமலூர் அரசு மருத்துவமனை தேசிய தர நிர்ணயசான்று பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தனியார் பங்க ளிப்புடன் ஆஸ்பத்திரியில் சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதனால், தேசிய தரச்சான்று வழங்கும் ஆய்வு குழுவினர் ஆய்வு செய்யும்போது தனியார் ஆம்புலன்ஸ்களை அரசு மருத்துவமனை முன்பு நிறுத்த கூடாது என்று மருத்துவமனை சார்பில் அறிவுறுத்தியும் தொடர்ந்து அங்கேயே நிறுத்தப்படுகிறது.

    அதனால், அரசு மருத்துவமனை சார்பில் ஓமலூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்கப்ப ட்டுள்ளது. ஆனாலும் , தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவனையை சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

    • காலை 10 மணிக்கு தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
    • 100-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் தனியா ர்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

    மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றி தழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவா ய்ப்பினை பெற்றுக்கொ ள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தீப க்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 21ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை நாடுபவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலை அளிப்பவர்கள் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில்முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை , ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் என கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் வேலை தேடுபவர்களும் வேலை அளிப்பவர்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்து கொள்ளலாம். புதுப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம்.

    தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது. இந்த பணி முற்றிலும் இலவசமானது.

    மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • இளைஞர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி திருவாரூரில் நடக்கிறது.
    • திறன் பயிற்சி, அயல் நாட்டு வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் - மகளிர் திட்டம் ஆகியவை சார்பில் திருவாரூர் மாவட்ட இளைஞர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.

    முகாமில் திருவாரூர் உட்பட பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

    இதில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம்.

    திறன் பயிற்சி, அயல் நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    எனவே விருப்பமுள்ள வேலை தேடும் இளைஞர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள், வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    முகாமில் திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த தனியார்துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உள்ளூர் பணியாளர்களை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொலைபேசி எண்ணை 04366-224226 தொடர்பு கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டதாரி இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார்.
    • ஜேடர்பாளையம் அருகே சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுக்கா கரப்பாளையம் பகுதியில் பட்டதாரி இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார். அன்று முதல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவைப்பு சம்பவங்கள், வன்முறை நடைபெற்று வந்தது.

    இதன் காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் அருகே சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.

    ஜேடர்பாளையம் அருகே உள்ள பொத்தனூர் பகுதியை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் சவுந்தர்ராஜன் (55). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூர் பகுதியில் உள்ளது. இதில் 3 ஏக்கர் நிலத்தில் பாக்கு மரங்களையும், மீதியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு மற்றும் தென்னை பயிர் செய்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சவுந்தரராஜனின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த தங்கமுத்து சென்றுள்ளார். அப்போது சவுந்தரராஜன் நிலத்தில் பயிர் செய்திருந்த பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சவுந்தரராஜனுக்கு தகவல் தெரிவித்தார்.

    தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 1800 பாக்கு மரங்கள் அனைத்தையும் மர்ம நபர்கள் வெட்டிச் சாய்த்துள்ளதை பார்த்த சவுந்தர்ராஜன் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாக்கு மரங்களை வெட்டிவிட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கோவை மண்டல ஐ.ஜி சுதாகர் மற்றும் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி ஆகியோர் சவுந்தரராஜன் தோட்டத்திற்கு சென்று மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட பாக்கு மரங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து எஸ்.பி. ராஜேஷ்கண்ணா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாக்கு மரங்களை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தனிப்படை போலீசார் தனித்தனி குழுவாக ஆனங்கூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வீட்டில் உள்ளவர்கள் பெயர்கள், அவர்களுடைய செல்போன் எண்களைப் பெற்றும், பாக்கு மரங்களை வெட்டி சாய்த்த சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் இந்த பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக ஆனங்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.

    • அருண்குமாரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 3 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தது.
    • தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). சில மாதங்களுக்கு முன்பாக இவர்கள் இருவரும் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த இவர்கள் தினமும் மயிலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர். 

    இவர்கள் நேற்று முன்தினம் மைலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்களை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 3 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தது. அப்போது வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் வந்த போது, இவர்களை மர்மகும்பல் மடக்கி சுற்றி வளைத்தது. கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த மர்மகும்பல், அருண்குமார், அன்பரசனை கொலை செய்து அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இது தொடர்பாக வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையி லான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமை யில் தனிப்படை அமைத்து கொலையாளி களை பிடிக்க உத்தரவிட்டார். தனிப்படை போலீசாரின் விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் கொலை செய்யப்பட்ட அருண்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இவர் கூலிப்படையை வைத்தோ, அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ அருண்குமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்களை வைத்தே அருண்குமாரை முகிலன் கொலை செய்திருக்கலாம் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயத்தில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வேறு மாவட்டத்தில் உள்ள கோர்ட்டில் சரணடைய உள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசா ரணை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.

    • கடந்த மாதம் 13-ந்தேதி மர்ம கும்பல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததில் ஒடிசா மாநி லத்தைச் சேர்ந்த ராகேஸ் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
    • இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதி யைச் சேர்ந்த முத்துசாமி என்பவ ருடைய வெல்லம் தயாரிக்கும் ஆலைக் கொட்டகையில் பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் 4 பேர் மீது கடந்த மாதம் 13-ந்தேதி மர்ம கும்பல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததில் ஒடிசா மாநி லத்தைச் சேர்ந்த ராகேஸ் (19) என்ற இளைஞர் உயிரிழந்தார்.

    3 பேர் காயம் அடைந்த னர். மேலும் ஆலைக் கொட்டகை அருகே முத்துசாமியின் மருமகன் தோட்டத்தில் இருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில், ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த 4 இளை ஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் ஒரு இளைஞரின் வீடு ஆனங்கூரிலிருந்து பாகம்பாளையம் செல்லும் சாலையில் உள்ளது. இந்த இளைஞரின் வீட்டிற்கு யாரும் இல்லாதபோது போலீஸ் ஜீப்பில் வந்த தனிப்படை போலீசார், வீட்டின் கேட்டை திறந்து அங்கிருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து ஆய்வு செய்தனர்.

    அதேபோல் அங்கு கிடந்த வெற்று கேனை எடுத்து நுகர்ந்து பார்த்தனர். பின்னர் அந்த கேனை அங்கேயே போட்டு விட்டனர். தொடர்ந்து 6-க்கும் மேற்பட்ட போலீசார் வீட்டை ஒட்டி உள்ள கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து அந்த இளைஞர் ஆதாரங்களை மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடினார்கள்.

    அதுபோல் மற்ற இளைஞர்களின் வீடுகளுக்கும், அருகாமையில் உள்ள பகுதிகளுக்கும் சென்று தடயங்கள் மற்றும் ஆதாரங்கள் திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் இதில் ஆதாரங்கள் கிடைத்ததா? என்பது தெரியவில்லை.

    தொடர்ந்து தனிப்படை போலீசார், வட மாநில இளைஞர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×