பெண்களை வீட்டிற்கு செல்லவிடாமல் பிடித்து வைத்த தனியார் நிதிநிறுவன ஊழியரை சிறைபிடித்த பொதுமக்கள்

10 பெண்கள் இணைந்து குழுவாக மகேந்திரா பைனான்ஸில் தலா 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் ஏராளமான ஒன்று கூடி தனியார் வசூல் செய்யும் நபரை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி குளத்துப்புதூர் பகுதியை சேர்ந்த 10 பெண்கள் இணைந்து குழுவாக மகேந்திரா பைனான்ஸில் தலா 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். வாரம் 1000 ரூபாய் வீதம் 52 வாரம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் 28 வாரம் பணம் செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் 29 -வது வாரம் 9 பேர் பணம் செலுத்தி ஒருவர் உடல்நலம் குன்றியதால் 400 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதம் தர வேண்டிய 600 ரூபாய் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து சிவானந்தம் என்ற வசூல் செய்யும் நபர் இரவு 12 மணிக்கு பெண்களை நடுரோட்டில் பிடித்து வைத்து பணம் கட்டவில்லை என்றால் வீட்டிற்கு செல்ல முடியாது என மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமான ஒன்று கூடி தனியார் வசூல் செய்யும் நபரை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரச்சனையை தீர்த்து வைத்தனர் இதனையடுத்து தனியார் நிறுவன ஊழியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com