search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார்"

    • பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த ஓதியம்பட்டு பகுதியை தலைமையிடமாக கொண்டு தனியார் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இங்கு தயாரிக்கபடும் பொருட்கள் அரியாங்குப்பம், மிஷன் வீதியில் உள்ள வணிக நிறுவனங்களின் விற்பனை செய்யபட்டு வருகிறது. பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த 20 பேர் அடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று புதுச்சேரிக்கு வந்தனர். ஒரே நேரத்தில் 3 குழுக்களாக பிரிந்து, தோல் தொழிற்சாலை மற்றும் விற்பனையகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வரி ஏய்ப்பு காரணமாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதில் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • சீர்காழியில் வருகிற 18-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடபட்டு இருந்தது.
    • மழையில் காரணமாக வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டது.

    மயிலாடுதுறை:-

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2-வது சிறப்பு தனியார்துறை வேலைவாய்;ப்பு முகாமானது வருகிற 18-ந்தேதி சனிக்கிழமையன்று சீர்காழியிலுள்ள விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் முகாம் நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மார்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் நடத்துகிறது.
    • 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 2-வது சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை 4-ந்தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மார்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் நடத்துகிறது.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, செவிலியர் படித்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து வழங்கும் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது.
    • அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 5 மாவட்டத்தை சேர்ந்த 408 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினர்.

    சேலம்:

    தமிழ்நாடு கல்வித் துறை சார்பில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து வழங்கும் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது.

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 5 மாவட்டத்தை சேர்ந்த 408 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினர்.

    போட்டி தேர்வுகள்

    விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது:-

    மதுரையில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு 20 நாட்களில் 70 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர். போட்டித் தேர்வுக்கு அரசு பள்ளி பாட புத்தகங்களை அதிக அளவில் நூலகத்தில் வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனென்றால் போட்டித் தேர்வுகளுக்கு அரசு புத்தகத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன.

    அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிப்பவர்கள் என அனைவரும் நமது பிள்ளைகள். மாணவர்களின் கல்வி தான் முக்கியம். தனியார் பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கைகள் முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குறைகள் தீர்க்கப்படும்.

    வரலாறு படைக்கலாம்

    அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்பதில் கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. திருச்சி, கோவை மண்டலத்தை தொடர்ந்து சேலம் மண்டலத்தில் தற்போது ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்திட முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.

    தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளோடு இணைந்து செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் புதிய வரலாறு படைக்கலாம். கல்வி சேவையை தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் நலனிலும் அனைவரும் அக்கறை செலுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    எந்த துறையும் அரசு மட்டும் செயல்படுத்துவது கடினம். பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். அது போன்று தான் பள்ளி கல்வித்துறையிலும் தனியார் பங்களிப்பு முக்கியம். இதன் காரணமாகவே, இந்தியாவிலேயே 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

    ரூ.39 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

    நகராட்சி துறைக்கு ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.39 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். இந்த மாவட்டம் வீரபாண்டியாரால் வளர்க்கப்பட்ட மாவட்டம். சேலம் அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், பெரியார் பல்கலைக்கழகம், கருப்பூர் என்ஜினீயரிங் காலேஜ் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டன.

    கலைஞர் ஆட்சியிலும், தற்போதைய முதல்-அமைச்சர் ஆட்சியிலும் வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருகிறோம் என்பதற்கு இந்த விழாவே சாட்சி.

    கடந்த காலங்களில் இதுபோன்ற ஆணை பெறுவதற்கு பலரை சந்திக்க வேண்டிய நிலை இருந்து வந்ததை மாற்றி யாரையும் சந்திக்க வேண்டியதில்லை என்ற நிலைக்கு முதல்-அமைச்சர் மாற்றி உள்ளார்.

    ஒத்துழைப்பு

    அது மட்டுமல்ல ஆசிரியர் கவுன்சிலிங் முறையில் எந்த ஒரு சிறு தவறும் நடந்திடாத வகையில் செயல்பட்டு ஆட்சியை விமர்சிக்கும் சமூக வலைத்தளத்தினரும் எதிரானவர்களும் பாராட்டும் வகையில் தமிழ்நாடு கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.

    இதே போன்று அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறோம். கல்வி துறையில் தமிழகம் சிறப்பாக செயல்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், சேலம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், துணை மேயர் சாரதாதேவி, மண்டல தலைவர் உமாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 பெண்கள் இணைந்து குழுவாக மகேந்திரா பைனான்ஸில் தலா 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
    • அப்பகுதி பொதுமக்கள் ஏராளமான ஒன்று கூடி தனியார் வசூல் செய்யும் நபரை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி குளத்துப்புதூர் பகுதியை சேர்ந்த 10 பெண்கள் இணைந்து குழுவாக மகேந்திரா பைனான்ஸில் தலா 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். வாரம் 1000 ரூபாய் வீதம் 52 வாரம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் 28 வாரம் பணம் செலுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் 29 -வது வாரம் 9 பேர் பணம் செலுத்தி ஒருவர் உடல்நலம் குன்றியதால் 400 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதம் தர வேண்டிய 600 ரூபாய் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து சிவானந்தம் என்ற வசூல் செய்யும் நபர் இரவு 12 மணிக்கு பெண்களை நடுரோட்டில் பிடித்து வைத்து பணம் கட்டவில்லை என்றால் வீட்டிற்கு செல்ல முடியாது என மிரட்டியதாக தெரிகிறது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமான ஒன்று கூடி தனியார் வசூல் செய்யும் நபரை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரச்சனையை தீர்த்து வைத்தனர் இதனையடுத்து தனியார் நிறுவன ஊழியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    • 200-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான ஆட்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.

    திருப்பூர், ஆக.2-

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மகளிா் திட்ட அலுவலகம் சாா்பில் அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதில், 200-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான ஆட்களைத் தோ்வு செய்யவுள்ளனா். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள், தையல் கலைஞா்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்க https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோா்க ளுக்கான ஆலோசனை, வங்கி கடன் குறித்த வழிகாட்டு தல்களும் வழங்கப்படவுள்ளது.

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தை தொடா்புகொள்ளலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்

    • அரசு ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன்பாக தனியார் ஆம்புலன்ஸ்கள் விபத்தான இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.
    • 10-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி அம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரங்களின் தலைமை மருத்துவமனை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட உள்நோயளி களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனியார் ஆம்புலன்கள்

    ஓமலூர் வழியாக தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. இந்த வழியாக லட்சக்க ணக்கான வாகனங்கள் வந்து செல்வதால், விபத்துக்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. விபத்தில் சிக்கியவர்களை, ஓமலூர் அரசு மருத்துவமனையின் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே ஓமலூர் அரசு மருத்துவமனை முன்பாக 10-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி அம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் தகவல் கிடைத்ததும், அரசு ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன்பாக தனியார் ஆம்புலன்ஸ்கள் விபத்தான இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.

    சிக்கல்

    இந்த நிலையில், தற்போது ஓமலூர் அரசு மருத்துவமனை தேசிய தர நிர்ணயசான்று பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தனியார் பங்க ளிப்புடன் ஆஸ்பத்திரியில் சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதனால், தேசிய தரச்சான்று வழங்கும் ஆய்வு குழுவினர் ஆய்வு செய்யும்போது தனியார் ஆம்புலன்ஸ்களை அரசு மருத்துவமனை முன்பு நிறுத்த கூடாது என்று மருத்துவமனை சார்பில் அறிவுறுத்தியும் தொடர்ந்து அங்கேயே நிறுத்தப்படுகிறது.

    அதனால், அரசு மருத்துவமனை சார்பில் ஓமலூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்கப்ப ட்டுள்ளது. ஆனாலும் , தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவனையை சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

    • டி.எஸ்.பி. மகேஷ்குமார் எச்சரிக்கை
    • உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் இருந்து தினமும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களும் உள்ளன. இந்த நிலையில் இங்குள்ள ஒரு சில தனியார் மதுபான கூடங்களில் அரசு நிர்ணயித்துள்ள நேரத்தை கணக்கிடாமல் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்து வருவதாகவும் இதனால் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதனை தடுக்கும் விதமாக கன்னியாகுமரி பகுதியில் உள்ள தனியார் மதுபான கூடங்களின் உரிமையாளர்களை கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள கன்னியாகுமரி சரக டி.எஸ்.பி. மகேஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:- அரசு நிர்ணயித்துள்ள நேரத்தில் மட்டுமே தனியார் மதுபான கூடங்கள் செயல்பட வேண்டும், எக்காரணம் கொண்டும் பார்சல் கொடுக்க கூடாது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக மது விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். தமிழக அரசு காவல்துறையில் பணி புரியும் அனைவருக்கும் நிறைவான ஊதியத்தை கொடுக்கிறது. இதனால் ஒரு பைசா கூட யாரும் லஞ்சம் கொடுக்க தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 10 மணிக்கு தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
    • 100-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் தனியா ர்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

    மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றி தழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவா ய்ப்பினை பெற்றுக்கொ ள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தீப க்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 21ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை நாடுபவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலை அளிப்பவர்கள் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில்முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை , ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் என கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் வேலை தேடுபவர்களும் வேலை அளிப்பவர்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்து கொள்ளலாம். புதுப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம்.

    தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது. இந்த பணி முற்றிலும் இலவசமானது.

    மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • இளைஞர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி திருவாரூரில் நடக்கிறது.
    • திறன் பயிற்சி, அயல் நாட்டு வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் - மகளிர் திட்டம் ஆகியவை சார்பில் திருவாரூர் மாவட்ட இளைஞர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.

    முகாமில் திருவாரூர் உட்பட பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

    இதில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம்.

    திறன் பயிற்சி, அயல் நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    எனவே விருப்பமுள்ள வேலை தேடும் இளைஞர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள், வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    முகாமில் திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த தனியார்துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உள்ளூர் பணியாளர்களை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொலைபேசி எண்ணை 04366-224226 தொடர்பு கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளி கிழமையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக நாளை 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 19-ந் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்க ளது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. அதனை பயன்படுத்தி அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டும். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    ×