search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hangs himself"

    • பேன் மாட்டும் கொக்கியில் ஜீவா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தனர்.
    • சத்தியமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப் பேட்டை, பிரிட்டோ காலனி யை சேர்ந்தவர் ஜீவா (35). இவர் குள்ளங்காட்டில் உள்ள தனியார் பிரிண்டிங் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி தனபாக்கியம் (29). கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜீவாவின் அண்ணனும், அதைத்தொடர்ந்து அவரது பாட்டியும் இறந்துவிட்டனர்.

    இதனால் கடுமையான மன அழுத்தத்துக்குள்ளான ஜீவா தொடர்ச்சியாக மது அருந்த ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜீவா தொடர்ந்து, மது அருந்தி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மாலை தனபாக்கியம் அருகில் வசித்து வரும் தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அதிக மது போதையில் ஜீவா அங்கு வந்துள்ளார்.

    அப்போது மது அருந்து வது குறித்து தனபாக்கியம், கணவர் ஜீவாவை கண்டித்து ள்ளார். இதையடுத்து இருவரும் அங்கேயே படுத்து தூங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் அதிகாலை தனபாக்கியத்தின் தாயார் கண் விழித்துப் பார்த்தபோது ஜீவா அங்கு இல்லை.

    இதையடுத்து அருகில் உள்ள தங்களது வீட்டுக்கு தனபாக்கியமும், அவரது தாயாரும் சென்று பார்த்து ள்ளனர். அப்போது வீட்டின் அறையில் பேன் மாட்டும் கொக்கியில் ஜீவா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தனர்.

    உடனடியாக உறவினர்களின் உதவியுடன் ஜீவாவை மீட்டு சத்தியம ங்கலம் அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர் வரும் வழியி லேயே ஜீவா இறந்து விட்ட தாக தெரிவித்தார்.

    இது குறி த்து சத்தியமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணேசன் மரச்சட்டத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சூரம்ப ட்டி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டிவலசு, பட்டேல் வீதியை சேர்ந்தவர் கணேசன் (37). இவர் பிரிண்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக சரிவர வேலை இல்லாததால் வெளியில் கடன் வாங்கி தொழில் செய்து வந்துள்ளார்.

    ஆனால் கடன் தொகை யை திருப்பி செலுத்தாததால் கடன்காரர்கள் வீடு தேடிவந்து கேட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில் இவரது மனைவி சரண்யா கடந்த ஒரு மாதகாலமாக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவ்வ ப்போது வந்து கணவரை பார்த்து சென்று வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று பிரிண்டிங் பட்டறை யில் தனியாக இரு ந்த கணேசன் மரச்சட்டத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொ ண்டார்.

    இது குறித்து சூரம்ப ட்டி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரபு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
    • அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவுட்டுப்பாளையம் பழனியப்பா வீதி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 39). இவர் கைத்தறி நெசவுத்தொழில் செய்து வந்தார்.

    பிரபுவுக்கு ராணி (30) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சல் அடைந்த பிரபு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பிரபுவை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • மன உளைச்சல் அடைந்த வெங்கடாசலம் வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் இடையன்காட்டுவலசு ஆண்டவர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் வெங்கடாசலம் (வயது 59). இவரது மனைவி சரோஜா (51). வெங்கடாசலம் சம்பத் நகர் உழவர் சந்தை அருகே தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் உடல்நிலை பாதி க்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சல் அடைந்த வெங்கடாசலம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி கொண்டார்.

    உடனே அக்கம் பக்க த்தினர் வெங்கடாசலத்தை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோ தித்த மருத்துவர்கள் வெங்க டாசலம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரது மனைவி சரோஜா ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாஸ்பேட்டை மடுவுபேட் சேத்திலால் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்
    • பிரபாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை மடுவுபேட் சேத்திலால் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் கார் டிரைவர் இவருக்கு துளசி என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    பிரபாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனை அவரது மனைவி துளகி கண்டித்து வந்தார். ஆனாலும் பிரபாகரன் மது பழக்கத்தை கைவிட வில்லை. இந்த நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி வீட்டில் கடன் தொல்லை இருக்கும் நிலையில் இது போன்ற சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து செலவழித்தால் கடனை எப்படி திருப்பி கொடுப்பது என சத்தம்போட்டார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது தொடர்ந்து வாக்குவாதம் செய்தால் பிரச்சினை வரும் என கருதிய துளசி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

    சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது வீட்டின் மாடிக்கு செல்லும் கைப்பிடியில் கணவர் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பிரபாகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துளசி கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்திவருகிறார்கள்.

    • மாரியப்பனுக்கும், அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது.
    • வீட்டில் மாரியப்பன் கேபிள் ஓயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தண்ணீர்பந்தல்பாளையம் பூலேரிகாடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (29). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு ராசிகா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் மாரியப்பன் குடும்ப செலவுக்காக அவருக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்தார்.

    இதற்கிடையில் மாரியப்பனுக்கும், அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன்காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன் மாரியப்பன் அவரது குடும்பத்துடன் அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூா் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் மாரியப்பன் கேபிள் ஓயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அந்தியூர் போலீசார் மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மாரியப்பனின் தாய் வீரம்மாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹாலில் உள்ள விட்டத்தில் பாலகிருஷ்ணன் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் புதூர், ஜி.கே.நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (39). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிவமாலதி.

    இந்த நிலையில் மதுவுக்கு அடிமையான பாலகிருஷணன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    சம்பவத்தன்று மது போதையில் இருந்த பாலகிருஷ்ணனை அவரது தந்தை ஆறுமுகம் கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

    இதைக்கண்டு ஆத்திரமடைந்த மனைவி சிவமாலதி, படுக்கையறைக்குள் சென்று படுத்துகொண்டார். சுமார் 2 மணி நேரம் கழித்து அவர் மீண்டும் வெளியில் வந்து பார்த்தபோது ஹாலில் உள்ள விட்டத்தில் பாலகிருஷ்ணன் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பரந்தாமன் வீட்டில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வீரப்ப ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சம்பத் நகர் ஆண்டவர் வீதியை சேர்ந்த வர் பரந்தாமன் (41). தொழிலாளி. இவரது மனைவி தன்யா. பர ந்தாமனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இதனால் கணவன்-மனை விக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அதிகமாக குடிப்பதால் பரந்தாமனுக்கு வயிறு வலி இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்த ன்று இரவு பரந்தாமன் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து ள்ளார். பின்னர் பரந்தா மன் வீட்டில் படுத்து தூங்கினார்.

    தன்யா சமையலறையில் படுத்து தூங்கினார். பின்னர் காலை தன்யா வீட்டுக்குள் வந்து கதவை திறந்த போது பரந்தாமன் வீட்டில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை கீழே இறக்கி பார்த்தபோது மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்தார். உடனடியாக சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பரந்தாமன் கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்ப ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூவிழியன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பது தெரிய வந்தது.
    • போலீசார் வழங்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள புதுத்துறை பகுதியை சேர்ந்தவர் பூவிழியன் (21). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள டையிங் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பூவிழியன் வேலைக்கு வரவில்லை. நிறுவனத்தின் தங்கும் விடுதியிலும் இல்லை என அவரது தாயார் சித்ராவுக்கு (50) டையிங் நிறுவனத்தில் இருந்து போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து பெருந்துறை போலீசில் பூவிழியனை காணவில்லை எனகூறி புகார் தெரிவித்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெருந்துறை சேனிடோரியம் அருகில் உள்ள இணைப்பு சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் பூவிழியன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பூவிழியனின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் வழங்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • துரைசாமி தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம், பட்டத்தரசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் துரைசாமி (48). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு விஜய் என்ற மகன் உள்ளார்.

    துரைசாமி மற்றும் பழனி யம்மாள் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் துரை சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக அவர் வயிற்று வலியால் அவதி ப்பட்டு அதற்காக நாட்டு மருந்து சாப்பிட்டு வந்ததா கவும் ஆனால் வயிற்று வலி குணமா கவில்லை என கூறப்படுகிறது.

    வயிற்று வலி வரும்போ தெல்லாம் துரைசாமி செத்துவிடலாம் என்று புலம்பி வந்துள்ளார். அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு துரைசாமி, பழனியம்மாள், விஜய் 3 பேரும் சாப்பிட்டனர் .பின்னர் பழனியம்மாள் அவரது மகன் விஜய் வீட்டுக்குள் தூங்க சென்று விட்டனர். துரைசாமி வீட்டின் வெளியே தூங்க சென்றார்.

    இரவில் திடீரென ஏதோ சத்தம் கேட்க திடுக்கிட்டு எழுந்த பழனியம்மாள் கதவைத் திறக்க முயன்றார். ஆனால் கதவு வெளிப்பக்கம் தாழ் போடப்பட்டிருந்தது.

    உடனடியாக விஜய் அவரது நண்பருக்கு போன் செய்து தகவல் சொன்னார் . அவரது நண்பரும் விரைந்து வந்து கதவை திறந்தார். பழனியம்மாள், விஜய் வெளியே வந்து பார்த்த போது துரைசாமி தூக்குபோட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு கார் மூலம் சத்திய மங்கலம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சை க்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே துரைசாமி இறந்துவிட்டதாக தெரிவித்த னர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரத்தினசாமி வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
    • கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி கொளத்துப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி (35). இவரது மனைவி தீபா (27). ரத்தினசாமி தேங்காய் நார் உறிக்கும் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன் ரத்தினசாமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு வலிப்பு நோயும் உள்ளதாக தெரிகிறது.

    இதனால் மன உளைச்சலுடன் காணப்பட்ட ரத்தினசாமி, சம்பவத்தன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இதையறிந்த அவரது சகோதரர், கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    • தமிழ் அழகன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமிழ் அழகன் (31). கட்டிட தொழிலாளி. இவர் சவுமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இந்நிலையில் தமிழ் அழகனுக்கு மதுப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக் கிடையே சண்டை ஏற்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சவுமியா, தமிழ் அழகனை விட்டு குழந்தை களுடன் பிரிந்து அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அதிகமாக மது குடித்து வந்த தமிழ் அழகன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் தமிழ் அழகனை மீட்டு பெருந்து றையில் உள்ள அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தமிழ் அழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×