search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl"

    • வீடியோ வெளியிட்டு டெல்லி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • வேகமாக சென்ற பைக்கில் வாலிபர் சாகசம் செய்த போது திடீரென நிலைதடுமாறி பின்னால் இருந்த பெண் கீழே விழுகிறார்.

    பைக்கில் சாகசம் செய்வது இளைஞர்களுக்கு பிடித்த விஷயமாகி போனாலும், சில நேரங்களில் அது ஆபத்தாகவும் முடிந்துவிடும். எனவே தான் போலீசார் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், டெல்லி போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

    அந்த வீடியோவில், ஒரு காதல் ஜோடி பைக்கில் சாகசம் செய்த காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தின. பைக்கில் வேகமாக செல்லும் இளைஞரை பின்னால் இருக்கும் அவரது காதலி கட்டிப்பிடித்து கொண்டிருக்கிறார். அப்போது வேகமாக சென்ற பைக்கில் வாலிபர் சாகசம் செய்த போது திடீரென நிலைதடுமாறி பின்னால் இருந்த பெண் கீழே விழுகிறார். இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இந்த காட்சிகள் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோவை வைத்து போலீசார் அந்த ஜோடியை அடையாளம் கண்டனர். பின்னர் அவர்கள் மூலமாகவே விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டனர். அதில், நாங்கள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்துக்கு உள்ளானோம். எனவே பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் என அவர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோவும் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • சம்பவம் நடந்தபோது அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.
    • போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் 3 வாலிபர்களையும் தேடிவருகிறார்கள்.

    போபால்:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் இருந்து குஜராத் மாநிலம் சூரத்துக்கு, சூரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அந்த ரெயிலில் 32 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் 22 வயது மதிக்கத்தக்க அவரது ஆண் நண்பர் ஒருவரும் சென்றார்.

    அவர்கள் இருவரும் ஜார்க்கண்டில் இருந்து சூரத்துக்கு சென்றபோது இணைப்பு ரெயிலை தவறவிட்டதால் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இரவு 10 மணியளவில் சூரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுபெட்டியில் ஏறினார்கள். அந்த ரெயிலில் சுமார் 60 பயணிகள் இருந்தனர்.

    இந்த நிலையில் குவாலியரை தாண்டி ரெயில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் அந்த இளம்பெண்ணின் ஆடைகளை பிடித்து கிழித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அவருடன் வந்த நண்பர் தடுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் இளம்பெண்ணையும், அவரது நண்பரையும் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசினார்கள். சம்பவம் நடந்தபோது அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.

    ரெயிலில் இருந்து கீழே விழுந்ததில் அந்த பெண் பலத்த காயம் அடைந்தார். அவரது நண்பருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இளம்பெண்ணால் எழுந்து நடக்க முடியவில்லை.

    இதையடுத்து அவரது நண்பர் கிழிந்த ஆடைகளால் பெண்ணின் உடலை மூடி, மருத்துவ உதவி பெறுவதற்காக அடர்ந்த காட்டில் கொட்டும் மழையில் 5 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்றார். ஆனால் 2 கிராமங்களில் இருந்து மக்களிடம் அவர் உதவி கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை.

    இதையடுத்து அவர் 3-வதாக ஒரு கிராமத்துக்கு சென்று உதவி கேட்டார். அந்த கிராமத்தில் வசித்த ஒரு வயதான தம்பதிகள் அவர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அந்த பெண்ணுக்கு ஒரு சேலையை கொடுத்து அணிவித்தனர்.

    பின்னர் அவரது காயங்களுக்கு மருந்து தடவினார்கள். அதன்பிறகு அந்த பெண்ணும், அவரது நண்பரும் மருத்துவமனைக்கு செல்லவும் உதவினார்கள். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் கடந்த 19-ந்தேதி நடந்து உள்ளது.

    இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் 3 வாலிபர்களையும் தேடிவருகிறார்கள்.

    • காதலனுடன் இளம்பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள எலுமிச்சங்காய்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ரெபேக்காள். இவர்களுக்கு சாந்தி(வயது21) என்ற மகளும், ஐசக் என்ற மகனும் உள்ளனர். சாந்தி பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    சம்பவத்தன்று செல்வராஜ், அவரது மனைவி மற்றும் ஐசக் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். ரெபேக்காள் வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, சாந்தி வீட்டில் இல்லை. அக்கம், பக்கத்தில் விசாரித்தும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. அப்போது ஐசக்கின் செல்போனுக்கு ஒரு நபர் போனில் அழைத்தார். அவர் சாந்தியை தான் காதலிப்பதாகவும், அவரை அழைத்துக்கொண்டு பாலக்காடு செல்வதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அதன் பின்னர் அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வருகின்றனர். 

    • புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.
    • தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை-கடலூர் சாலையில் அதிகாலையில் வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் பைக்கில் நெருங்கியவாறு உட்கார்ந்து சென்றனர். பைக்கில் சென்ற அவர்கள் மற்ற வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றனர்.

    பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தபடியும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறும் வாலிபர் பைக் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது மணவெளி ரோடு சந்திப்பில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பைக்கில் வாலிபரும், இளம்பெண்ணும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறு ஜாலியாக வருவதை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வாலிபர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவர் அவரது தோழி என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.

    அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தார். போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அவர் அவ்வழியே வந்த வாகனங்கள் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.

    இதையடுத்து போலீசார் வாலிபரையும், அவரது தோழியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.

    இதில் காயமடைந்த வாலிபரை போலீசார் அழைத்து சென்று அரியாங்குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்தனர்.
    • அருண்குமார், அழகு முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் பெண் ஒருவரை காதலித்தார். அவருக்கு திருமண ஆசை காட்டி கொடைக்கானல் அறையில் தங்கியும் மற்றும் பழங்காநத்தம் பகுதியிலும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மதுரை அனைத்து மகளிர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன், அவரது தாயார் மல்லிகா (55), மைத்துனர் சிவகுமார் (35) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    சிந்தாமணி வ.உ.சி. 2-வது தெரு சேர்ந்தவர் சுரேஷ் (வயது38). அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (25). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்ேபாது அருண்குமாருடன் சேர்ந்து அவருடைய நண்பர் அழகுமுத்துபாண்டி(21) என்பவரும் ஆபாசமாக பேசி சுரேசை தாக்கி கத்தியால் குத்தி உள்ளனர். இதுகுறித்து கீரைத்துரை போலீசில் சுரேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், அழகு முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • பலமுறை காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் பேசவில்லை.
    • அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் பூலுவப்பட்டி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் பஷீர். இவரது மகன் ஷாஜகான் (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயதான இளம்பெண்ணுக்கும் ஷாஜகானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்த பெண், ஷாஜகானுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார். பலமுறை காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் பேசவில்லை.

    காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்த ஷாஜகான், காதலியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காதலை கைவிட்டால் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இது குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஷாஜகானை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • வாலிபர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு வருகிற 20-ந் தேதி திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். நர்சிங் பட்டதாரி.

    இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது. வாலிபர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களது மகளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்தனர்.

    அதன்படி மாப்பிள்ளை பார்த்த இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு வருகிற 20-ந் தேதி திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் பொள்ளாச்சிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர், தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    வெளியே சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இளம் பெண்ணின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தனர். மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து மீட்டுத்தருமாறு புகாரில் கூறி இருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • வீட்டில் தனியாக இருந்த முத்துலட்சுமி பூச்சி கொல்லி மருந்து குடித்து விட்டார்.
    • சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அயலூர் பகுதியை சேர்ந்தவர் வேலு சாமி. இவர் கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு நடந்த விபத்தில் இறந்து விட்டார்.

    இவரது மனைவி முத்து லட்சுமி (வயது 29). இவர்க ளுக்கு 2 மகள்கள் உள்ளனர். முத்துலட்சுமி கணவன் இறந்தது முதல் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று வீட்டில் தனியாக இருந்த முத்துலட்சுமி பூச்சி கொல்லி மருந்து (விஷம்) குடித்து விட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமணம் ஆகாத இளம் பெண்ணை காதலித்து, திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
    • பெண்ணின் பெற்றோா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    காங்கயம் :

    வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (வயது 38). திருமணமான இவா், தனியாா் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.

    இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காங்கயம் பகுதியைச் சோ்ந்த 23 வயது திருமணம் ஆகாத இளம் பெண்ணை காதலித்து, திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, இளம் பெண்ணை ஏமாற்றிய நபரை புதன்கிழமை கைது செய்தனா்.

    • முத்துவீரனுக்கும், ஷில்பாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • மனமுடைந்த ஷில்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்துவீரன். இவரது மனைவி ஷில்பா (வயது 23). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ஷில்பா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று ஷில்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த ஞானி பாளையம் குமாரவலசு மயிலாடி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (36). தொழிலாளி. இவரது மனைவி சங்கீதம் (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சங்கீதத்தி ற்கும், யுவராஜிக்கும் அவர்க ளது மகனை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்ப ட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சங்கீதம் மனவேதனை அடைந்து சம்பவத்தன்று வீட்டின் கழிப்பறைக்குள் சென்று கதவை தாழிட்டு, மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சங்கீதத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சங்கீதத்தின் தந்தை ஈஸ்வரன் வெள்ளோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்
    • கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பா ளையம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி வெண்ணிலா (24). இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளது.

    இந்த நிலையில் சந்தோஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த சந்தோஷ் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று அவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதற்கிடையே வெளியே சென்ற குழந்தைகள் வீட்டிற்கு வந்த போது வெண்ணிலா கழுத்தின் துணிகள் சுற்றிய நிலையில் பிணமாக இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் கதறி அழுதனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது குடிபோதையில் இருந்த சந்தோஷ் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும். தான்தான் மின்விசிறியில் இருந்து உடலை கீழே இறக்கி வைத்ததாகவும் கூறினார். போலீசார் வெண்ணிலாவின் உடலை சோதனை செய்து பார்த்தபோது தற்கொலை செய்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.

    எனவே சந்தோஷ் தான் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடுகிறார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் 15 வேலம்பாளையம் பகுதியில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×