search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "setting herself on fire"

    • ஜோதிமணி மண்ணெண்ணையை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்டார்.
    • இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி முனியப்பன் கோவில் தெரு வை சேர்ந்தவர் செங்கோ ட்டையன். இவரது மகள் ஜோதிமணி (வயது 31).

    இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளிப்பட்டி கொண்டைய ம்பாளையத்தை சேர்ந்த முத்துச்சாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் ஜோதிமணி உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக கண வரை விட்டு பிரிந்து தந்தை செங்கோட்டையன் பராம ரிப்பில் வாழ்ந்து வந்தாக கூறப்படுகிறது

    இதையடுத்து உடல்நிலை பாதித்த ஜோதிமணி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்ப வத்தன்று ஜோதிமணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.

    இதில் ஜோதிமணி உடல் முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது அண்ணன் மணிக ண்டன் அப்பாகூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.


    • உடலில் தீ எரிந்த படி கீர்த்தனா அலறி துடித்துள்ளார்.
    • சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் உள்ள பி.ஆர்.எஸ். ரோட்டை சேர்ந்தவர் கைலாசநாதன். இவருடைய மகள் கீர்த்தனா (30). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கீர்த்தனா கடந்த 10 ஆண்டுகளாக தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். மேலும் இதற்கான சிகிச்சை அளித்தும் சரி ஆகாததால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கைலாசநாதனும் அவரது மகன் சேதுராமனும் படுக்கையறையில் தூங்கியுள்ளனர்.

    கீர்த்தனா ஹாலில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் கீர்த்தனாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

    உடனடியாக கைலா சநாதனும், அவரது மகன் சேதுராமனும் எழுந்து சென்று பார்த்த போது அங்கு உடலில் தீ எரிந்தபடி கீர்த்தனா அலறி துடித்துள்ளார்.

    இதுகுறித்து கீர்த்தனாவிடம் கைலாசநாதன் கேட்டபோது, எறும்பு மருந்தை தின்றுவிட்டு பின்னர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறியுள்ளார்.

    பின்னர் உடனடியாக கீர்த்தனாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தனா இறந்து விட்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த ஞானி பாளையம் குமாரவலசு மயிலாடி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (36). தொழிலாளி. இவரது மனைவி சங்கீதம் (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சங்கீதத்தி ற்கும், யுவராஜிக்கும் அவர்க ளது மகனை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்ப ட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சங்கீதம் மனவேதனை அடைந்து சம்பவத்தன்று வீட்டின் கழிப்பறைக்குள் சென்று கதவை தாழிட்டு, மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சங்கீதத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சங்கீதத்தின் தந்தை ஈஸ்வரன் வெள்ளோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×