search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman commits suicide by"

    • ஜோதிமணி மண்ணெண்ணையை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்டார்.
    • இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி முனியப்பன் கோவில் தெரு வை சேர்ந்தவர் செங்கோ ட்டையன். இவரது மகள் ஜோதிமணி (வயது 31).

    இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளிப்பட்டி கொண்டைய ம்பாளையத்தை சேர்ந்த முத்துச்சாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் ஜோதிமணி உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக கண வரை விட்டு பிரிந்து தந்தை செங்கோட்டையன் பராம ரிப்பில் வாழ்ந்து வந்தாக கூறப்படுகிறது

    இதையடுத்து உடல்நிலை பாதித்த ஜோதிமணி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்ப வத்தன்று ஜோதிமணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.

    இதில் ஜோதிமணி உடல் முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது அண்ணன் மணிக ண்டன் அப்பாகூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.


    • லட்சுமி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள மாமரத்து பாளையம் பெரிய சோமூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி லட்சுமி (46). இவர்களது மகன் தீபக்.

    இந்நிலையில் லட்சுமிக்கு கடந்த 5 ஆண்டுகளாக கால், முட்டி வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று கடுமையான கால் வலியால் அவதியடைந்த லட்சுமி எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனைத்தொடர்ந்து மகன் தீபக் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் லட்சுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதனையடுத்து தீபக் சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.
    • சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிறுவலூர் புது காலனி எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி விமலா தேவி (33). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் விமலா தேவிக்கு தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு பல்வேறு இடங்களில் மருத்துவ சிகிச்சை பார்த்துள்ளனர்.

    மருத்து செலவுக்காக தங்கவேல் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் விமலாதேவி தனக்கு உடல்நிலை சரி இல்லை என்றும், இதற்காக கடன் சுமை அதிகரித்தது என்றும் மன வேதனையில் இருந்து உள்ளார்.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து விட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தங்கவேல் தனது மனைவியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்து றையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார்.

    தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விமலா தேவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
    • இதனால் வேதனை அடைந்த பாசமலர் காளிங்கராயன் வாய்க்காலில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குதித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் கே.எஸ்.நகர் பகுதியில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் ஒரு பெண்ணின் உடல் மிதந்து வந்தது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசாரணையில் அந்த பெண் குறித்து அடையாளம் தெரியவந்தது. ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ஆர்.என்.புதூரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மனைவி பாசமலர் (48) என தெரிய வந்தது.

    திருநாவுக்கரசுக்கும் பாசமலருக்கும் திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருநாவுக்கரசு கட்டிட வேலை செய்து வருகிறார். பாசமலரும் கூலி வேலை செய்து வந்தார். கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

    இதனால் வேதனை அடைந்த பாசமலர் நேற்று ஆர். என்.புதூர் அருகே காளிங்கராயன் வாய்க்காலில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குதித்தார்.

    சிறிது நேரத்தில் அவர் நீரில் மூழ்கினார். அவரது உடல் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகரில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் மிதந்து வந்த போது போலீசார்மிட்டது விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனம் உடைந்து காணப்பட்ட சிந்து திடீரென வீட்டில் மின்விசிறியால் தூக்குபோட்டு கொண்டார்.
    • இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த பெருமுகை ஏரங்காட்டூரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சேகர் (23) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த சிந்து (21) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் சிந்துவின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவர்களை ஏற்று கொண்டனர்.

    இந்நிலையில் அவர்களது குழந்தை நிச்சிகாவை, சிந்து வின் தந்தை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டு பின்னர் மாலை அழைத்து வந்தார்.

    அப்போது சேகர், சிந்துவிடம் ஏன் குழந்தையை அங்கு அனுப்புகிறாய் என கேட்டார். இதனால் அவர்களுக்கள் தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இதனையடுத்து சேகர் வெளியில் சென்றுள்ளார்.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சிந்து திடீரென வீட்டில் மின்விசிறியால் தூக்குபோட்டு கொண்டார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சிந்துவின் பெற்றோருக்கு தகவல் தெரி வித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிந்துவை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து சிந்துவை மேல் சிகிச்சைக்காக பெரு ந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சிந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சேகர்-சிந்து திரு மணம் நடந்து 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மற்றும் ஏ.எஸ்.பி. விசாரணை நடக்கிறது.

    • திலகா கணவரின் நினைவாக மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார்.
    • அப்போது திலகா அவரது கணவர் போட்டோவிற்கு கீழ் படுத்திருந்தார். அவரது கை மற்றும் வாய்ப்பகுதி மஞ்சளாக இருந்தது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் திலகா (51). இவரது கணவர் பெருமாள். இவர்களுக்கு விஜய் (27) என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2 வருடமாக திலகா கர்ப்பப்பை யில் கட்டி கார ணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெருமாள் இறந்து விட்டார்.

    இதனால் திலகா கணவரின் நினைவாக மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை விஜய் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் திலகா மட்டும் இருந்துள்ளார்.

    பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக விஜய் வீட்டுக்கு வந்தார். அப்போது திலகா அவரது கணவர் போட்டோவிற்கு கீழ் படுத்திருந்தார். அவரது கை மற்றும் வாய்ப்பகுதி மஞ்சளாக இருந்தது.

    அவரது அருகே சாணி பவுடர் பாக்கெட் திறந்த நிலையில் இருந்தது. இது பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் தாயை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றார்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே திலகா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வீட்டில் இருந்த மணிமேகலை கணவருக்கு வழங்கப்பட்ட தூக்கமாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் மயங்கி விழுந்தார்.
    • இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    கோபி அடுத்துள்ள பெரியகொடிவேரி, மதுரைவீரன் கோயில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி மணிமேகலை(33). கடந்த 4 ஆண்டுகளாக கணவர் சக்திவேலுக்கு மனநிலை பாதிப்பு இருந்து வந்துள்ளது.

    பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இதனால் மனைவி மணிமேகலை மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த மணிமேகலை கணவருக்கு வழங்கப்பட்ட தூக்கமாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் மயங்கி விழுந்தார்.

    பின்னர் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்திய–மங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிமேகலை இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×