search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து பெண் தற்கொலை
    X

    விஷம் குடித்து பெண் தற்கொலை

    • திலகா கணவரின் நினைவாக மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார்.
    • அப்போது திலகா அவரது கணவர் போட்டோவிற்கு கீழ் படுத்திருந்தார். அவரது கை மற்றும் வாய்ப்பகுதி மஞ்சளாக இருந்தது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் திலகா (51). இவரது கணவர் பெருமாள். இவர்களுக்கு விஜய் (27) என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2 வருடமாக திலகா கர்ப்பப்பை யில் கட்டி கார ணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெருமாள் இறந்து விட்டார்.

    இதனால் திலகா கணவரின் நினைவாக மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை விஜய் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் திலகா மட்டும் இருந்துள்ளார்.

    பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக விஜய் வீட்டுக்கு வந்தார். அப்போது திலகா அவரது கணவர் போட்டோவிற்கு கீழ் படுத்திருந்தார். அவரது கை மற்றும் வாய்ப்பகுதி மஞ்சளாக இருந்தது.

    அவரது அருகே சாணி பவுடர் பாக்கெட் திறந்த நிலையில் இருந்தது. இது பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் தாயை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றார்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே திலகா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×