search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "consuming poison"

    • லட்சுமி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள மாமரத்து பாளையம் பெரிய சோமூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி லட்சுமி (46). இவர்களது மகன் தீபக்.

    இந்நிலையில் லட்சுமிக்கு கடந்த 5 ஆண்டுகளாக கால், முட்டி வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று கடுமையான கால் வலியால் அவதியடைந்த லட்சுமி எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனைத்தொடர்ந்து மகன் தீபக் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் லட்சுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதனையடுத்து தீபக் சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமணம் செய்வதாக கூறி எல்லைபாதுகாப்பு படை வீரரால் கற்பழிக்கப்பட்ட பெண் பின்னர் திருமணம் செய்ய அவர் மறுத்துவிட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    முசாபர்நகர்:

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணை திருமணம் செய்வதாக கூறி எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கற்பழித்ததாகவும், பின்னர் திருமணம் செய்ய அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை போலீசில் அளித்த புகாரில் ‘எனது மகளை திருமணம் செய்வதாக கூறி எல்லைபாதுகாப்பு படை வீரர் கற்பழித்து விட்டார். அவரிடம் திருமணம் செய்ய எனது மகள் கேட்டபோது, அதற்கு அவர் எனது மகளுடன் இருந்த வீடியோ படங்களை இன்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி உள்ளார். இதனால் தான் என் மகள் தற்கொலை செய்து கொண்டார்’ என குறிப்பிட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    ×