search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    பெண் தீக்குளித்து தற்கொலை

    • ஜோதிமணி மண்ணெண்ணையை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்டார்.
    • இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி முனியப்பன் கோவில் தெரு வை சேர்ந்தவர் செங்கோ ட்டையன். இவரது மகள் ஜோதிமணி (வயது 31).

    இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளிப்பட்டி கொண்டைய ம்பாளையத்தை சேர்ந்த முத்துச்சாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் ஜோதிமணி உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக கண வரை விட்டு பிரிந்து தந்தை செங்கோட்டையன் பராம ரிப்பில் வாழ்ந்து வந்தாக கூறப்படுகிறது

    இதையடுத்து உடல்நிலை பாதித்த ஜோதிமணி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்ப வத்தன்று ஜோதிமணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.

    இதில் ஜோதிமணி உடல் முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது அண்ணன் மணிக ண்டன் அப்பாகூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×