என் மலர்

    நீங்கள் தேடியது "love married"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.
    • அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    கோபி, 

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நஞ்சக்கவுண்ட ன்பாளை யத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் நவனீதன் (24) என்ஜினீயர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் கந்த சாமி. இவரது மகள் ரிஷிகா (20).

    நவனீதனின் தந்தை ஜெகநாதனும், ரிஷிகாவின் தந்தை கந்தசாமியும் நண்பர்கள். இதனால் நவனீதன்-ரிஷிகா இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறிய நவனீதன் ரிஷிகா ஆகியோர் இன்று காலை குன்ன த்தூர்-கோபிசெட்டிபாளையம் ரோட்டில் உள்ள முனியப்பன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு கோபி செட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இன்ஸ்பெக்டர் தெய்வ ராணி அவர்களிடம் விசா ரணை நடத்தி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பவித்ரா, இருவரையும் தங்களது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
    • இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளேயாவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    பெருந்துறை:

    திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவரது மனைவி கவுதமி (22). இருவரும் திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் குறித்து மணி கண்டன் தனது பெற்றோ ருக்கு தெரிவிக்கவில்லை யாம்.

    தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில், தங்களது திருமணம் குறித்து மணி கண்டனின் பெற்றோரிடம் தெரிவிக்குமாறு கெளதமி கூறியுள்ளார்.

    இதையடுத்து மணி கண்டன், முதற்கட்டமாக, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வசித்து வரும் தனது சகோதரி பவித்ராவிடம் தங்களது திருமணம் குறித்து தெரி வித்துள்ளார்.

    இதையடுத்து பவித்ரா, இருவரையும் தங்களது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

    அதன்பேரில், மணி கண்டனும் கவுதமியும், பெருந்துறையில் உள்ள பவித்ராவின் வீட்டுக்கு நேற்று வந்துள்ளனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, தங்களுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டது குறித்து பவித்ரா கேட்டதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த கவுதமி பவித்ராவின் வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்று துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார்.

    வெகு நேரமாகியும் கவுதமி வெளியில் வராத தால் குளியல் அறை கதவை உடைத்து பார்த்தனர்.

    அங்கு தூக்கில் தொங்கிய கவுதமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், கவுதமி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.

    இதுகுறித்து, கவுதமியின் சகோதரர் செல்லதுரை அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும், இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளேயாவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனம் உடைந்து காணப்பட்ட சிந்து திடீரென வீட்டில் மின்விசிறியால் தூக்குபோட்டு கொண்டார்.
    • இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த பெருமுகை ஏரங்காட்டூரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சேகர் (23) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த சிந்து (21) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் சிந்துவின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவர்களை ஏற்று கொண்டனர்.

    இந்நிலையில் அவர்களது குழந்தை நிச்சிகாவை, சிந்து வின் தந்தை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டு பின்னர் மாலை அழைத்து வந்தார்.

    அப்போது சேகர், சிந்துவிடம் ஏன் குழந்தையை அங்கு அனுப்புகிறாய் என கேட்டார். இதனால் அவர்களுக்கள் தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இதனையடுத்து சேகர் வெளியில் சென்றுள்ளார்.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சிந்து திடீரென வீட்டில் மின்விசிறியால் தூக்குபோட்டு கொண்டார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சிந்துவின் பெற்றோருக்கு தகவல் தெரி வித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிந்துவை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து சிந்துவை மேல் சிகிச்சைக்காக பெரு ந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சிந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சேகர்-சிந்து திரு மணம் நடந்து 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மற்றும் ஏ.எஸ்.பி. விசாரணை நடக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சமடைந்தனர்.
    • வசந்தின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடைக்கட்டு கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்வாணன். இவரது மகன் வசந்த்(வயது 22). இவரும், அதே தெருவை சேர்ந்த செல்வராஜின் மகள் ஆர்த்தியும்(19) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆர்த்தி பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆர்த்தியின் பெற்றோரிடம் பெண் கேட்டதாகவும், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பெண் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆர்த்தியை வசந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேத்தியாதோப்பு தீப்பாஞ்சம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர்கள் நேற்று ஊருக்கு வந்துள்ளனர். அப்போது பெற்றோர்களுக்கு பயந்து அவர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி, இருவரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் ஆர்த்தியின் பெற்றோர் வர மறுத்து விட்டனர். இந்நிலையில் வசந்தின் பெற்றோர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தனர். இதையடுத்து போலீசார் அறிவுரைகள் கூறி காதல் திருமண ேஜாடியை வசந்தின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண் பொறியாளர் கிருத்திகா, தனது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றார்.
    • ஆசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திட சம்மதம் தெரிவித்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி காசி படையாச்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சியாளர் கந்தசாமி- சுகந்தி தம்பதியரின் மூத்த மகள் கிருத்திகா. என்ஜினீயரான இவர், சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் இவரோடு பணிபுரிந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த பென்னடி - அட்மா ஊஜேடி தம்பதியரின் மகனான என்ஜினீயர் அசானே ஒச்சோயிட் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

    இதுகுறித்து பெண் பொறியாளர் கிருத்திகா, தனது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றார். ஆசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திட சம்மதம் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் இருந்து மணமகனின் உறவினர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகத்திற்கு வந்தனர். வாழப்பாடியில் தமிழர் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பெண் அழைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். சேலம் 5 ரோடு பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.

    தமிழர் பாரம்பரிய முறைப்படி அர்ச்சகர்கள் வேதம் ஓத, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக திருமணம் நடந்தது. ஆசானே ஒச்சோயிட், தனது காதலி கிருத்திகாவுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

    இந்த திருமண விழாவில், வாழப்பாடியைச் சேர்ந்த மணப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமின்றி, பிரான்ஸ் நாட்டிலிருந்து மணமகனின் உறவினர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு வந்திருந்த பிரான்ஸ் நாட்டினர், தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை, சேலை, தங்க ஆபரணங்கள், தோடு ஜிமிக்கி கம்மல் அணிந்து திருமணத்தில் பங்கேற்று அனைவரையும் வியக்க வைத்தனர்.

    நமது உணவுகளான இட்லி, தோசை, மெதுவடை, வடகறி, சாம்பார், சட்னி, இடியாப்பம், அல்வா ஆகியவற்றை, பிரான்ஸ் நாட்டினர் விரும்பி உண்டு மகிழ்ந்தனர். தமிழர்கள் உணர்ச்சிபூர்வமாக மண விழாவை எங்களை நெகிழ வைத்தது. இவர்களது விருந்து உபசரிப்பும், உணவுகளும் மிகவும் சுவையாக இருந்தது என பிரான்ஸ் நாட்டினர் தெரிவித்தனர்.

    ×