காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்

காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சமடைந்தனர்.வசந்தின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடைக்கட்டு கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்வாணன். இவரது மகன் வசந்த்(வயது 22). இவரும், அதே தெருவை சேர்ந்த செல்வராஜின் மகள் ஆர்த்தியும்(19) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆர்த்தி பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆர்த்தியின் பெற்றோரிடம் பெண் கேட்டதாகவும், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பெண் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஆர்த்தியை வசந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேத்தியாதோப்பு தீப்பாஞ்சம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர்கள் நேற்று ஊருக்கு வந்துள்ளனர். அப்போது பெற்றோர்களுக்கு பயந்து அவர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி, இருவரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் ஆர்த்தியின் பெற்றோர் வர மறுத்து விட்டனர். இந்நிலையில் வசந்தின் பெற்றோர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தனர். இதையடுத்து போலீசார் அறிவுரைகள் கூறி காதல் திருமண ேஜாடியை வசந்தின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com