

டி.என்.பாளையம்:
கோபி அடுத்துள்ள பெரியகொடிவேரி, மதுரைவீரன் கோயில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி மணிமேகலை(33). கடந்த 4 ஆண்டுகளாக கணவர் சக்திவேலுக்கு மனநிலை பாதிப்பு இருந்து வந்துள்ளது.
பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இதனால் மனைவி மணிமேகலை மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த மணிமேகலை கணவருக்கு வழங்கப்பட்ட தூக்கமாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் மயங்கி விழுந்தார்.
பின்னர் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்திய–மங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிமேகலை இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.