என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீக்குளித்து தற்கொலை"

    • பெங்களூருவில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.
    • குன்று மீது தீக்காயங்களுடன் திருமூர்த்தி பிணமாக கிடந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 26). பி.டெக் முடித்துவிட்டு பெங்களூருவில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தன்னுடன் வேலை பார்த்த மைசூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அந்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் திருமூர்த்தி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை காப்பாற்றி விட்டனர். பின்னர் சில மாதங்களுக்கு பிறகு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போதும் அவரை காப்பாற்றிவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று சேலத்தில் உள்ள தனது சகோதரிக்கு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டைவிட்டு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் மணியக்காரன்கொட்டாய் என்ற இடத்தில் உள்ள குன்று மீது தீக்காயங்களுடன் திருமூர்த்தி பிணமாக கிடந்தார். அருகே அவரது இருசக்கர வாகனம் இருந்தது.

    இதுகுறித்து பாலக்கோடு போலீசில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து திருமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் திருமூர்த்தி தானே உடலில் தீவைத்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. 2 முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட அவர் 3-வது முயற்சியில் உயிரிழந்தார்.

    • தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு
    • மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உள்ள நாகக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 50). இவர் சொந்தமாக இரும்புக்கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கு கரோலின் மலர் என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். 2-வது மகள் பி.டி.எஸ். படித்து வருகிறார். சுமார் 6 மாத காலமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    நேற்று இரவு அவர் வீட்டின் முன் பகுதியில் இருந்து பெட்ரோல் எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவியும் அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அவர்கள் சுரேஷ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை சுரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி கரோலின் மலர் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேஷ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • கனகதாரணி தனது கணவரை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
    • கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள எம்.ராயர்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி கனகதாரணி (வயது 34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கனகதாரணி தனது கணவரை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் கனகதாரணியை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் உடல் கருகி இறந்தார்.

    இந்த தகவல் கிடைத்தும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தற்கொைல செய்து கொண்ட கனகதாரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • காப்பாற்ற முயன்ற மகளும் கருகினார்
    • விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில் பரிதாபம்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சி.ஆர்.பி.எப் வீரர் ஏழுமலை.ஆவடியில் பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி வனஜா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

    ஏழுமலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் ஏழுமலை 15 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.வீட்டில் தனது மூத்த மகளான சண்முகப்பிரியா மட்டும் இருந்த நிலையில், ஏழுமலை அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.அப்போது திடீரென மதுபோதையில், ஏழுமலை தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீயை பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதனைக் கண்ட அவரது மகள் சண்முகப்பிரியா உடனடியாக தனது தந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார்.அப்போது இருவரும் தீயில் சிக்கிய நிலையில், அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் நுழைந்து தீயில் எரிந்து கொண்டிருந்த தந்தை ஏழுமலை மற்றும் மகள் சண்முகப்பிரியாவை மீட்டனர்.தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் உதவியோடு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஏழுமலை உடல் முழுவதும் கருகிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சண்முகப்பிரியா தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் மேல் சாவடி தெருவில் வசிப்பவர் ஏழுமலை (வயது 55). கூலித் தொழிலாளி. இவருக்கு பல நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்.

    இதனால் ஏழுமலை தொடர்ந்து சிகிச்சை பெற்றும் சரியாகயாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    தீயில் கருகி அலறிய அவரது குரலை கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறி அடித்து எழுந்து பார்த்தனர். பின்னர் ஏழுமலையின் உடலில் எரிந்த தீயை அணைத்து திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்து விட்டார்.

    இது குறித்து அவரது மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில் போளூர் சப் -இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • உடல்நிலை சரியில்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாவில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஜோபு (வயது 60). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் மனம் உடைந்த ஜோபு, வீட்டில் யாரும் இல்லாத போது தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியிலும், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் அனு மதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • பாலசந்திரன் உடலில் தீ வைத்து கொண்டார்.

    கோவை,

    கோவை பேரூரை சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது43). கூலி தொழிலாளி. இவரது மனைவி சர்மதி (40).

    இந்த நிலையில் பாலசந்திரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பாலசந்திரன் வழக்கம் போல குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.

    அங்கு மனைவியுடன் தகராறில் ஈடுப்பட்டார். இதனால் சர்மதி கோபித்து கொண்டு அருகில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலசந்திரன் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றினார்.

    பின்னர் மனைவியின் சகோதரி வீட்டுக்கு சென்று மனைவி சர்மதியை உடனே தன்னுடன் வீட்டுக்கு வருமாறு கூறினார். அதற்கு அவர் செல்ல மறுத்து பின்னர் வருவதாக கூறினார். இதனால் கோபம் அடைந்த பாலசந்திரன் உடலில் தீ வைத்து கொண்டார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சர்மதி அக்கம் பக்கத்தினர் உடவியுடன் தீயை அணைத்து பாலசந்திரனை மீட்டார். அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்
    • உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டு நல்லான்பிள்ளை பெற்றான் தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசெல்வ ஆண்டவர். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரம்யா (வயது 26), இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரம்யாவிற்கு கடு மையான காய்ச்சல் ஏற்பட்டதில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரம்யா மண்எண்ணெய் எடுத்து தனது உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். வலி தாங்காமல் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகசென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய் தார். திருமணம் ஆகி 6 வருடங்களே ஆன நிலையில் ரம்யா இறந்துள்ளதால் அது குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரித்துரைக்கப்பட்டுள்ளது.

    • சுரேஷ்குமாருக்கு கடந்த 3 வருடமாக சிறுநீரக கல் பாதிப்பு இருந்து வந்துள்ளது.
    • சம்பவத்தன்றும் சுரேஷ்குமா ருக்கு வலி ஏற்பட்டது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார்(38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி.

    சுரேஷ்குமாருக்கு கடந்த 3 வருடமாக சிறுநீரக கல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி வலி தாங்க முடியாமல் அவதி அடைந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் சுரேஷ்குமாருக்கு வலி ஏற்பட்டது. இதனால் மண்எண்ணை எடுத்து தனக்குத்தானே உடலில் தீ வைத்து கொண்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு தங்கமணி மற்றும் உறவினர்கள் ஓடி வந்து அவர் மீது தண்ணிரை ஊற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுரேஷ்குமார் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தின்னரை எடுத்து உடம்பில் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார்.
    • இது குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு பெரிய சேமூர், வேல் நகரை சேர்ந்தவர் கோபி ராஜா. இவரது மனைவி மோனிஷா (23). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் கோபிராஜா குடி போதைக்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இவ்வாறு சண்டை வரும் போதெல்லாம் மோனிஷா கணவருடன் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். இதேபோல் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மோனிஷா கணவருடன் சண்டை போட்டு கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதன் பின்னர் கோபி ராஜாவின் தாய், தந்தை சமாதானம் பேசி மீண்டும் மோனிஷாவை கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கோபிராஜா மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோனிஷா இப்படியே குடித்துக்கொண்டு இருந்தால் வீட்டு வாடகை, வண்டி தவணை எப்படி கட்ட முடியும் என்று கணவரிடம் கேட்டுள்ளார்.

    இப்படியே செய்து கொண்டிருந்தால் நான் செத்து விடுவேன் என்று கூறி மோனிஷா வேகமாக வீட்டின் பின்புறம் சென்றார்.

    அங்கு இருந்த தின்னரை எடுத்து உடம்பில் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபிராஜா தீயை அணைத்து மனைவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மோனிஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 7 ஆண்டுக்குள் ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • அவரது 2 விரல்கள் துண்டிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
    • உடலில் தீ பற்ற பற்ற வலி தாங்க முடியாமல் அவர் அலறி உள்ளார்

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் அதே பகுதியில் சொந்தமாக மாவு மில் நடத்தி வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளாக பால்ராஜ் நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவரது 2 விரல்கள் துண்டிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால் பால்ராஜ், சில தினங்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

    நேற்று இரவு வீட்டில் எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது பால்ராஜ், தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடலில் தீ பற்ற பற்ற வலி தாங்க முடியாமல் அவர் அலறி உள்ளார். அதனை கேட்டு குடும்பத்தினர் ஓடிவந்தனர்.

    தீயில் உடல் கருகிய பால்ராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பால்ராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து களியக்கா விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மில் உரிமையாளர் தீ குளித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த ஞானி பாளையம் குமாரவலசு மயிலாடி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (36). தொழிலாளி. இவரது மனைவி சங்கீதம் (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சங்கீதத்தி ற்கும், யுவராஜிக்கும் அவர்க ளது மகனை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்ப ட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சங்கீதம் மனவேதனை அடைந்து சம்பவத்தன்று வீட்டின் கழிப்பறைக்குள் சென்று கதவை தாழிட்டு, மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சங்கீதத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சங்கீதத்தின் தந்தை ஈஸ்வரன் வெள்ளோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×