search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laborer committed suicide"

    • வாங்கிய பணத்தை திருப்பி தராததால் கடன் கொடுத்தவர்கள் கேட்டுள்ளனர்.
    • இதனால் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் விஜயசாரதி (வயது48). இவரது மனைவி கவுரி.குழு அமைத்து பலரிடம் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய பணத்தை திருப்பி தராததால் கடன் கொடுத்தவர்கள் கேட்டுள்ளனர்.

    இதனால் விரக்தி அடைந்த விஜயசாரதி விஷம் குடித்து மயங்கினார். சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இவர் திருமணம் ஆகாத நிலையில் மது போதைக்கு அடிமையானார்.
    • இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கொட்டபட்டி பழைய தெரு ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் விக்னேஷ் குமார் (29). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் மது போதைக்கு அடிமையானார்.

    இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக வைக்கப்பட்டு ள்ளது.

    இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டிருந்த உறவினரை நலம் விசாரிப்பதற்காக முருகன் பெங்களூருவில் இருந்து தேனிக்கு வந்தார்.
    • மனமுடைந்த நிலையில் கா ணப்பட்ட முருகன் அவரது உறவினர்கள் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். அங்கிருந்த வேப்பமரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வருசநாடு:

    கடமலைக்குண்டு அருகே குமண ன்தொழுவை சே ர்ந்தவர் முருகன் (வயது 48). இவரது மனைவி சாரதா. இவ ர்களுக்கு 20 வயதில் மகனும், 16 வயதில் மகளும் உள்ள னர். இவ ர்கள் அனை வரும் கர்நாடக மாநிலம் பெங்க ளூருவில் தங்கி முறுக்கு தொழில் செய்து வருகின்றனர்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டிருந்த உறவினரை நலம் விசாரிப்பதற்காக முருகன் பெங்களூருவில் இருந்து தேனிக்கு வந்தார். மருத்துவமனையில் இருந்து சொந்த கிராமமான குமணன்தொழுவிற்க்கு வந்திருந்தார். அப்போது மனமுடைந்த நிலையில் கா ணப்பட்ட முருகன் அவரது உறவி னர்கள் யாரிடமும் பேசாமல் இரு ந்துள்ளார். இந்நி லையில் கும ணன்தொழு அரசு பள்ளிக்கு சென்ற முருகன் அங்கிருந்த வேப்பமரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்த மயிலாடும்பாறை போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்தத ற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மனம் உடைந்த நிலையில் இருந்தவர் ஒத்தக்கண் பாலம் வழியாக வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (வயது 59).கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.இதனால் அவர் தனது மகன் இலியாசுடன் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த அப்துல் மாலிக் ஒத்தக்கண் பாலம் வழியாக வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி, எஸ்.பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுரேஷ்குமாருக்கு கடந்த 3 வருடமாக சிறுநீரக கல் பாதிப்பு இருந்து வந்துள்ளது.
    • சம்பவத்தன்றும் சுரேஷ்குமா ருக்கு வலி ஏற்பட்டது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார்(38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி.

    சுரேஷ்குமாருக்கு கடந்த 3 வருடமாக சிறுநீரக கல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி வலி தாங்க முடியாமல் அவதி அடைந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் சுரேஷ்குமாருக்கு வலி ஏற்பட்டது. இதனால் மண்எண்ணை எடுத்து தனக்குத்தானே உடலில் தீ வைத்து கொண்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு தங்கமணி மற்றும் உறவினர்கள் ஓடி வந்து அவர் மீது தண்ணிரை ஊற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுரேஷ்குமார் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×