

வருசநாடு:
கடமலைக்குண்டு அருகே குமண ன்தொழுவை சே ர்ந்தவர் முருகன் (வயது 48). இவரது மனைவி சாரதா. இவ ர்களுக்கு 20 வயதில் மகனும், 16 வயதில் மகளும் உள்ள னர். இவ ர்கள் அனை வரும் கர்நாடக மாநிலம் பெங்க ளூருவில் தங்கி முறுக்கு தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டிருந்த உறவினரை நலம் விசாரிப்பதற்காக முருகன் பெங்களூருவில் இருந்து தேனிக்கு வந்தார். மருத்துவமனையில் இருந்து சொந்த கிராமமான குமணன்தொழுவிற்க்கு வந்திருந்தார். அப்போது மனமுடைந்த நிலையில் கா ணப்பட்ட முருகன் அவரது உறவி னர்கள் யாரிடமும் பேசாமல் இரு ந்துள்ளார். இந்நி லையில் கும ணன்தொழு அரசு பள்ளிக்கு சென்ற முருகன் அங்கிருந்த வேப்பமரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த மயிலாடும்பாறை போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்தத ற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.