search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "by setting himself on fire"

    • தீ வைத்து கொள்வேன் என ஜெயபால் கூறிவந்துள்ளார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை காஞ்சிக்கோயில் ரோட்டை சேர்ந்தவர் ஜெயபால் (71). திருமணமாகவில்லை. இவரது அண்ணன் சி வராமன் (74). தங்கை குமுதா (68). தனது அண்ணன் சிவ ராமன் குடும்பத்துடன் வசி த்து வந்த ஜெயபால், அவரு டன் சேர்ந்து தள்ளுவண்டியில் போண்டா, பஜ்ஜி வியாபாரம் செய்து வந்தார்.

    திருமணமாகாத விரக்தி யில் இருந்து வந்த ஜெயபால் தினமும் மது அருந்தி வந்து ள்ளார். அதுகுறித்து தங்கை குமுதா ஏதாவது கேட்டால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொள்வேன் என ஜெயபால் கூறிவந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல கடையை திறக்க சென்றவர் திடீரென மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீவைத்து கொண்டதாக தெரிகிறது.

    அப்போது அந்த வழியாக சென்றவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாகடர் வரும் வழியிலேயே ஜெயபால் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சுரேஷ்குமாருக்கு கடந்த 3 வருடமாக சிறுநீரக கல் பாதிப்பு இருந்து வந்துள்ளது.
    • சம்பவத்தன்றும் சுரேஷ்குமா ருக்கு வலி ஏற்பட்டது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார்(38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி.

    சுரேஷ்குமாருக்கு கடந்த 3 வருடமாக சிறுநீரக கல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி வலி தாங்க முடியாமல் அவதி அடைந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் சுரேஷ்குமாருக்கு வலி ஏற்பட்டது. இதனால் மண்எண்ணை எடுத்து தனக்குத்தானே உடலில் தீ வைத்து கொண்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு தங்கமணி மற்றும் உறவினர்கள் ஓடி வந்து அவர் மீது தண்ணிரை ஊற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுரேஷ்குமார் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×