search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
    X

    தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் மேல் சாவடி தெருவில் வசிப்பவர் ஏழுமலை (வயது 55). கூலித் தொழிலாளி. இவருக்கு பல நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்.

    இதனால் ஏழுமலை தொடர்ந்து சிகிச்சை பெற்றும் சரியாகயாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    தீயில் கருகி அலறிய அவரது குரலை கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறி அடித்து எழுந்து பார்த்தனர். பின்னர் ஏழுமலையின் உடலில் எரிந்த தீயை அணைத்து திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்து விட்டார்.

    இது குறித்து அவரது மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில் போளூர் சப் -இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×