search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சி.ஆர்.பி.எப். வீரர்
    X

    தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சி.ஆர்.பி.எப். வீரர்

    • காப்பாற்ற முயன்ற மகளும் கருகினார்
    • விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில் பரிதாபம்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சி.ஆர்.பி.எப் வீரர் ஏழுமலை.ஆவடியில் பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி வனஜா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

    ஏழுமலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் ஏழுமலை 15 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.வீட்டில் தனது மூத்த மகளான சண்முகப்பிரியா மட்டும் இருந்த நிலையில், ஏழுமலை அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.அப்போது திடீரென மதுபோதையில், ஏழுமலை தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீயை பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதனைக் கண்ட அவரது மகள் சண்முகப்பிரியா உடனடியாக தனது தந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார்.அப்போது இருவரும் தீயில் சிக்கிய நிலையில், அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் நுழைந்து தீயில் எரிந்து கொண்டிருந்த தந்தை ஏழுமலை மற்றும் மகள் சண்முகப்பிரியாவை மீட்டனர்.தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் உதவியோடு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஏழுமலை உடல் முழுவதும் கருகிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சண்முகப்பிரியா தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×