என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commits suicide by"

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகுமாருக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்.
    • மன வேதனை அடைந்து வந்தார். இந்த நிலையில் சசிகுமார் வீட்டில் மின்விசிறியால் தூக்குபோட்டு கொண்டார்.

    அரச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் போலீஸ் நிலை யத்தில் மாலதி என்பவர் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சசிகுமார் (வயது 42). இவர்கள் போலீஸ் குடியிருப்பு பகுதியில் குடியிருந்து வரு கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகுமாருக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்.

    ஆனால் அவருக்கு தோள்பட்டையில் அடிபட்ட காரணத்தால் தொடர்ந்து கை வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கை வலி தாங்க முடியாமல் சசிகுமார் மன வேதனை அடைந்து வந்தார்.

    இந்த நிலையில் சசிகுமார் வீட்டில் மின்விசிறியால் தூக்கு போட்டு கொண்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சசிகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மரு த்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் உள்ள அறையில் மனோஜ் குமார் மிஸ்ரா தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம், தென்காபாதார் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ் குமார் மிஸ்ரா (42).

    கடந்த 3 வருடமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் மேட்டுப்புதூர் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருடன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிலரும் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று மனோஜ் குமார் மிஸ்ராவுடன் தங்கி இருந்த நபர் வெளியே சென்று மீண்டும் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார்.

    ஆனால் கதவு திறக்கவில்லை. கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது . இது குறித்து அந்த நபர் வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் மனோஜ் குமார் மிஸ்ரா தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.

    அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மனோஜ் குமார் மிஸ்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • 55 வயது மதிக்க த்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது
    • அந்த நபர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது

    ஈரோடு,

    ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட புகளூர்- கொடு முடி ரெயில் நிலையங்களு க்கிடையே நொய்யல் ரெயிவே பாலத்தில் சம்பவ த்தன்று 55 வயது மதிக்க த்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    அந்த முதியவரிடம் இருந்த பேப்பரில் மனைவி பெயர் சித்ரா, மகன்கள் பூபதி, பாலமுருகன் மகள்கள் மோனிகா, யாஷிகா என பெயர் எழுதி இருந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் அந்த நபர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
    • அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் மணி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்

    ஈரோடு,

    ஈரோடு வில்லரசம்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மணி (53). இவரது மனைவி கவிதா. மணி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு காசி பாளையம் கிளையில் கடந்த 22 வருடமாக கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மணி வீட்டில் அடிக்கடி பீடி குடித்து வந்ததாக கூறப்படு கிறது. இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மணி கோபித்து கொண்டு மனைவி யுடன் சில நாட்கள் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மணி வேலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவி யிடம் சாப்பாடு கேட்ட போது நீங்கள் வெளியில் சாப்பிட்டு வந்து விடுவீர்கள் என நினைத்து வீட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டோம் என்று கூறியுள்ளார்.

    இதனால் கோபித்து கொண்டு வீட்டின் மேல் மாடிக்கு மணி தூங்க சென்று விட்டார். காலை கவிதா மாடிக்கு சென்று பார்த்தபோது கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மணி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் மணி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    • ரவிக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (38). கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணி முடிந்து ரவிக்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது ரவிக்குமார் மது அருந்தி உள்ளார். ஊரில் உள்ளவர்களுக்கு போன் செய்து கொண்டு அப்படியே தூங்க அங்குள்ள அறைக்கு சென்று விட்டார்.

    இதனையடுத்து ரவிக்குமார் உறவினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அறையில் செல்போன் உடைந்து கிடந்து உள்ளது.

    மேலும் ரவிக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரது உடலை கீழே இறக்கி வைத்தனர்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ரவிக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவிக்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.

    புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டில் தனியாக இருந்த முகமது ராஜா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் மஸ்தான். இவரது மகன் முகமது ராஜா (18). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டு தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    விபத்து ஏற்பட்டதில் இருந்து அவருக்கு அடிக்கடி தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த முகமது ராஜா திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முகமது ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி சல்பாஸ் மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
    • இது குறித்து ேகாபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (62). இவரது மனைவி வெங்கட்டம்மாள். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி செத்து போய்விடலாம் என புலம்பி கொண்டே இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி வெங்கட்டம்மாள் அவருக்கு ஆறுதல் கூறிவந்துள்ளார்.

    சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்த கிருஷ்ணமூர்த்தி சல்பாஸ் மாத்திரை (விஷ மாத்திரை) தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ேகாபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று நந்தகுமார் திடீரென விஷம் குடித்துள்ளார்.
    • இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் சர்க்கார் குள்ளம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (32). இவருக்கும் சத்தியமங்கலத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.

    இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. நந்தகுமார் கோவையில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார்.

    பின்னர் கடந்த 18-ந் தேதி சத்தியமங்கலம் அடுத்த புத்தாண்டியூர் அய்யன் சாலையில் உள்ள பால்காரர் தோட்டத்தில் நந்தகுமார் தனது மனைவி சங்கீதாவுடன் குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நந்தகுமார் திடீரென விஷம் குடித்துள்ளார். இதுகுறித்து மனைவியிடம் நந்தகுமார் கூறியுள்ளார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா அக்கம் பக்கத்தினர் உதவி உடன் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து கணவரை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நந்தகுமாரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நந்தகுமார் இறந்தார்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுவுக்கு அடிமையானதாலும், நோய் பாதிப்பு காரணமாகவும் பூபதி மனமுடைந்து காணப்பட்டார்.
    • இதன் காரணமாக பூபதி சம்பவத்தன்று இரவு சாணிப்பவுடரை கரைத்து குடித்துவிட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது கணவர் ரவி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவர்களுக்கு ரேகா (25) என்ற மகளும், பூபதி (22) என்ற மகனும் உள்ளனர்.

    11-ம் வகுப்பு வரை படித்துள்ள பூபதி செண்ட்ரிங் வேலை செய்து வந்தார். மது பழக்கத்துக்கு அடிமையான பூபதிக்கு இதய நோய் பாதிப்பும் இருந்து வந்துள்ளது.

    இதனால் அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் மதுவுக்கு அடிமையானதாலும், நோய் பாதிப்பு காரணமாகவும் பூபதி மனமுடைந்து காணப்பட்டார். அதன் காரணமாக பூபதி சம்பவத்தன்று இரவு சாணிப்பவுடரை (விஷம்) கரைத்து குடித்துவிட்டார்.

    இதனால் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பூபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நாகராஜ் தனது மனைவி விஜயலட்சுமிக்கு போன் செய்து விஷ மாத்திரைகள் சாப்பிட்டு விட்டேன் என கூறியுள்ளார்.
    • காஞ்சிக்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெத்தாம்பாளையம் அருகே உள்ள கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (49). இவரது மனைவி விஜயலட்சுமி (42). நாகராஜ் சொந்தமாக சாயப்பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நாகராஜ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

    இதனால் நாகராஜ் தனது வீட்டுக்கு செல்லாமல் அதேபகுதியில் உள்ள அவரது அம்மா வீட்டில் தங்கி அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் நாகராஜ் தனது மனைவி விஜயலட்சுமிக்கு போன் செய்து எனக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. அதனால் விஷ மாத்திரைகள் சாப்பிட்டு விட்டேன் என கூறியுள்ளார்.

    உடனடியாக விஜயலட்சுமி தனது தம்பியின் உதவியுடன் நாகராஜை மீட்டு கவுந்தப்பாடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

    இதையடுத்து நாகராஜை மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே நாகராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து காஞ்சிக்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் நாகேந்திரகுமார் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டு இருந்தார்.
    • இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்துள்ள செளரா பகுதியைச் சேர்ந்த வர் நாகேந்திர குமார்(21). இவரது மனைவி பூஜா. பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் புரா கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் உள்ளார்.

    நாகேந்திர குமார் ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று நாகேந்திர குமார் மனைவி பூஜாவிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவரும் இடையே போனில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நாகேந்திர குமார் உடன் வேலை பார்க்கும் கோவிந்தன் என்பவர் நாகேந்திரகுமார் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டி உள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் நாகேந்திர குமார் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டு இருந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகேந்திரகுமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    • இதையடுத்து அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு, கருக்கன்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (55). இவரது மனைவி புஷ்பா (40). இவர்கள் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.

    செல்வனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார்.

    உடனடியாக அவரை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த போது கடந்த மாதம் 25-ந் தேதி எலி பேஸ்ட்டை (விஷம்) தின்று விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து செல்வன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×