search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
    X

    வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

    • எலி பேஸ்ட் மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டதாக கூறினார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வேண்டி பாளையம் கந்தசாமி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவரது இரண்டாவது மகன் ஆனந்தராஜ் (27), இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    குடிப்பழக்கம் இருந்துள்ளது. எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் சுற்றி திரிந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் ஆனந்த ராஜ் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார். அதைக்கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் சில நாட்களாக ஆனந்தகுமார் சோகத்துடன் இருந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு மது போதையில் வந்த ஆனந்தராஜ் பிரியாணி மற்றும் சிக்கன் கொண்டு வந்து சாப்பிட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து உள்ளார்.

    இது குறித்து அவரது பெற்றோர் கேட்டபோது, தனக்கு உயிருடன் இருக்க பிடிக்கவில்லை. எனவே எலி பேஸ்ட் மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டதாக கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவரது பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மகனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×