search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young girl commits suicide"

    • ஐஸ்வர்யாவின் தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தங்கை இறந்ததால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது23). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் ஐஸ்வர்யாவின் தங்கை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கை இறந்ததில் இருந்து ஐஸ்வர்யா மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    மேலும் அவர் இறந்த துக்கம் தாங்காமல் வேதனைப்பட்டார். சம்பவத்தன்று ஐஸ்வர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

    • நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை.
    • நந்தினி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    கோபி,

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி நந்தினி (வயது 26). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை எனவும் இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் நந்தினி மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நந்தினி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதை கண்ட அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி நந்தினி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கனகதாரணி தனது கணவரை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
    • கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள எம்.ராயர்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி கனகதாரணி (வயது 34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கனகதாரணி தனது கணவரை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் கனகதாரணியை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் உடல் கருகி இறந்தார்.

    இந்த தகவல் கிடைத்தும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தற்கொைல செய்து கொண்ட கனகதாரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சீதாலட்சுமி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    நீலகிரி மாவட்டம் குண்டாலடியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகள் சீதாலட்சுமி (வயது 22).

    இவர் பீளமேடு ராமலிங்க அடிகளார் நகரில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 4-ந் தேதி இவர் நிறுவனத்தில் நடந்த ஆயுத பூஜைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார்.

    வீட்டில் இருந்த போது செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் சீதா லட்சுமி நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் அறைக்கு சென்ற அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சீதாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
    • சீதா லட்சுமி உணவு சமைக்காமல் செல்போனை பயன்படுத்தி கொண்டு இருந்தார்.

    கோவை :

    கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியாம் பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சீதா லட்சுமி (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். ஆனால் குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று சிவக்குமார் வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றார். அப்ேபாது சீதா லட்சுமி உணவு சமைக்காமல் செல்போனை பயன்படுத்தி கொண்டு இருந்தார். இது குறித்து சிவக்குமார் கேட்ட போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது மனைவியிடம் கோபித்துக்கொண்டு வெளியே சென்றார்.

    கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த சீதா லட்சுமி வாழ்க்கையில் விரக்தி அடைந்த தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் வீட்டிற்கு திரும்பிய சிவக்குமார் மனைவி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் தற்கொலை செய்து கொண்ட சீதா லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 1½ வருடத்தில் சீதா லட்சுமி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    ×