search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
    X

    கோவையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • பாலசந்திரன் உடலில் தீ வைத்து கொண்டார்.

    கோவை,

    கோவை பேரூரை சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது43). கூலி தொழிலாளி. இவரது மனைவி சர்மதி (40).

    இந்த நிலையில் பாலசந்திரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பாலசந்திரன் வழக்கம் போல குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.

    அங்கு மனைவியுடன் தகராறில் ஈடுப்பட்டார். இதனால் சர்மதி கோபித்து கொண்டு அருகில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலசந்திரன் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றினார்.

    பின்னர் மனைவியின் சகோதரி வீட்டுக்கு சென்று மனைவி சர்மதியை உடனே தன்னுடன் வீட்டுக்கு வருமாறு கூறினார். அதற்கு அவர் செல்ல மறுத்து பின்னர் வருவதாக கூறினார். இதனால் கோபம் அடைந்த பாலசந்திரன் உடலில் தீ வைத்து கொண்டார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சர்மதி அக்கம் பக்கத்தினர் உடவியுடன் தீயை அணைத்து பாலசந்திரனை மீட்டார். அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×