search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
    X

    இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

    • இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்தனர்.
    • அருண்குமார், அழகு முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் பெண் ஒருவரை காதலித்தார். அவருக்கு திருமண ஆசை காட்டி கொடைக்கானல் அறையில் தங்கியும் மற்றும் பழங்காநத்தம் பகுதியிலும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மதுரை அனைத்து மகளிர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன், அவரது தாயார் மல்லிகா (55), மைத்துனர் சிவகுமார் (35) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    சிந்தாமணி வ.உ.சி. 2-வது தெரு சேர்ந்தவர் சுரேஷ் (வயது38). அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (25). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்ேபாது அருண்குமாருடன் சேர்ந்து அவருடைய நண்பர் அழகுமுத்துபாண்டி(21) என்பவரும் ஆபாசமாக பேசி சுரேசை தாக்கி கத்தியால் குத்தி உள்ளனர். இதுகுறித்து கீரைத்துரை போலீசில் சுரேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், அழகு முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×