search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Video"

    • யெவ்கெனி பிரிகோஷின் உள்ளிட்ட 10 பேர் உயிர் இழந்ததாக கூறப்பட்டது.
    • புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தனியார் ராணுவ படையின் தலைவராக இருந்து வருபவர் யெவ்கெனி பிரிகோஷின்.இந்த படை ரஷிய அதிபர் புதினின் துணை ராணுவ படை என்று வர்ணிக்கப்பட்டு வருகிறது.

    ரஷிய ராணுவ படைக்கு வாக்னர் படை பக்கபலமாக இருந்து வருகிறது. தற்போது நடந்து வரும் உக்ரைன் போரில் வாக்னர்படை முக்கிய பங்காற்றி வருகிறது. உக்ரைன் போரின் போது முக்கிய நகரங்களை இந்த படை வீரர்கள் தான் கைப்பற்றினார்கள். இந்த நிலையில் கடந்ந 2 மாதங்களுக்கு முன்பு வாக்னர் குழு தலைவருக்கும், ரஷிய அதிபர் புதினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. யெவ்கெனி பிரிகோஷின் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வாக்னர் படையினர் மாஸ்கோவில் ஆயுதங்களுடன் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. பின்னர் 2 நாளில் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. வாக்னர் குழுவினருக்கு மன்னிப்பு வழங்குவதாக ரஷியா அறிவித்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் யெவ்கெனி பிரிகோஷின் உள்ளிட்ட 10 பேர் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. ரஷியாவின் சதி செயலால் அவர் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த சூழ்நிலையில் விமான விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட வெண்கெனி பிரிகோஷின் காரில் சென்றபடி பேசுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் நான் தற்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறேன், நான் நலமாக இருக்கிறேன். இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன் என்று கூறுவது போல வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது. எப்போது எடுக்கப்பட்டது? என்ற விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. வீடியோவில் அவர் பேசுவது உண்மைதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அவர் உயிரோடு இருக்கிறாரா?அல்லது இறந்து விட்டாரா? என்பது மர்மமாக உள்ளது. இந்த புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



    • தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.
    • பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் கிளப் அவுஸ் என்ற டேட்டிங்கை பயன்படுத்தி வந்தார். இதன்மூலம் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் திலீப் குமார் என்பவர் பழக்கமானார்.

    இது நாளடைவில் காதலாக மாறியது. திலீப் குமாரின் வற்புறுத்தலுக்கு இணங்க அந்த பெண் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றினார். நாளடைவில் தீலிப்குமாரின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் பழகு வதை நிறுத்திக்கொண்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த திலீப்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப்குமாரை தேடி வந்தனர். வேலைக்காக துபாய் சென்றிருந்த திலீப்குமாரை இந்தியாவுக்கு வரவழைத்து அவரை கைது செய்தனர்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 8 மாதங்களில் 15-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் புகார் கொடுத்த பெண்ணிற்கு தெரிந்தவராகவோ அல்லது முன்னாள் காதலர், உறவினராகவோ இருக்கின்றனர்.

    எனவே குறிப்பாக பெண்கள் யாரையும் நம்பி தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ வீடியோக்களையும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம்.

    மேலும் ஆண் நண்பர்களோ காதலர்கள் அல்லது உங்களுக்கு பழக்கப்பட்டவர்களோ அவர்கள் கேட்பதற்கு இணங்க வீடியோ காலில் பேச வேண்டாம்.

    பெண்களை மிரட்ட பயன்படுத்தப்படுகின்ற புகைப்படங்கள் பாதிக்கப்பட்ட பெண்களாகவே எடுக்கப்பட்ட அல்லது பகிரப்பட்ட புகைப்படங்களாக தான் உள்ளது.

    எனவே பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • போலீசார் அந்த வணிக வளாகத்துக்கு சென்று ரகசியமாக நோட்டமிட்டனர்.
    • பெண்கள் கழிவறைக்குள் அடிக்கடி சென்று வந்ததையும் வணிக வளாக பாதுகாப்பு பணியாளர்கள் பார்த்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பர்தா அணிந்த ஒருவர் சந்தேகப்படும் வகையில் திரிந்து வந்ததாகவும், அந்த நபர் அங்குள்ள பெண்கள் கழிவறைக்குள் அடிக்கடி சென்று வந்ததையும் வணிக வளாக பாதுகாப்பு பணியாளர்கள் பார்த்தனர்.

    இதுதொடர்பாக போலீஸ்நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வணிக வளாகத்துக்கு சென்று ரகசியமாக நோட்டமிட்டனர். அவர்கள் பர்தா அணிந்து சென்ற நபரை சுற்றிவைத்தது பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஆண் குரலில் பேசினார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பர்தா அணிந்திருந்த அந்த நபர், ஆண் என்பதும், பர்தா அணிந்து பெண் போல் வேடமிட்டு திரிந்ததும் தெரியவந்தது. அந்த வாலிபர் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கரிவேலூர் ஒனக்குன்னு பகுதியை சேர்ந்த அபிமன்யு (வயது23) என்பதும், பி.டெக் பட்டதாரியான இவர் பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    பர்தா அணிந்து பெண் போல் வேடமிட்டு திரிந்த அவர், வணிக வளாகத்தில் இருந்த பெண்கள் கழிவறைக்குள் புகுந்து தனது செல்போனை ரகசியமாக வைத்து, கழிவறைக்கு வந்துசென்ற பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வந்திருக்கிறார்.

    இதையடுத்து ஐ.டி. ஊழியர் அபிமன்யுவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன் மற்றும் பர்தா உடை உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் தனது செல்போன் மூலம் எத்தனை பெண்களை ஆபாசமாக படம் எடுத்திருக்கிறார்? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்று தனது 19 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
    • இளம்பெண் குளிப்பதை பலமுறை வீடியோ எடுத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்று தனது 19 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வதுதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சரவணன் தனது மனைவியின் மகளான 19 வயது இளம்பெண் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தார். நேற்று தற்செயலாக செல்போனை அந்தப் பெண் பார்த்தபோது தனது மகளின் குளியல் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இளம்பெண் குளிப்பதை பலமுறை வீடியோ எடுத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து பெண்ணின் தாயார் அவினாசிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
    • அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    ஆபாச வீடியோ

    இந்த நிலையில் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் நீ ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த போது குளித்த வீடியோ என்னிடம் உள்ளது. நான் அழைக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறினார்.

    இதற்கிடையே அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மிரட்டல்

    இந்தநிலையில் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர் நான் கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால் குளிக்கும் வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது 2 முறையும் வெவ்வெறு செல்போன் எண்களில் இருந்து அந்த நபர் பேசியது தெரிய வந்தது. மேலும் தனது கணவர் சிகிச்சையில் இருந்த போது பக்கத்து படுக்கையில் இருந்த நபர் நான் குளிக்கும் போது வீடியோ எடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக அந்த பெண் கூறி உள்ளார்.

    செல்போன் எண்ணை வைத்து விசாரணை

    இதையடுத்து அந்த பெண்ணுக்கு பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த நபர் தலைமறைவானது தெரிய வந்தது.

    அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • பணம் தராவிட்டால் வாலிபரின் நண்பர்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி விடுவேன் என அந்த பெண் மிரட்டினார்.
    • இளைஞர்கள் இணைய வழி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை சேர்ந்த 34 வயது வாலிபர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். சமூக வலைதளமான பேஸ் புக்கில் தகவல்களை பரிமாறி வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு கடந்த 15 நா ட்களுக்கு முன் ஒரு இளம்பெண் பேஸ்புக்கில் அறிமுகமானார். அவர்கள் இருவரும் பேஸ்புக்கில் குறுந்தகவல் அனுப்பி நட்பை பலப்படுத்தி வந்துள்ளனர்.

    ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் முக அடையாளத்தை அறியும் வகையில் அந்த வாலிபர் பேஸ்புக்கில் வீடியோ காலில் அழைத்து பேசி இருக்கிறார். அந்த பெண்ணும் வீடியோகாலில் ஜாலியாக பேசி உள்ளார்.

    ஒருமுறை அப்பெண் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமானார். பின்னர் அந்த வாலிபரும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசி உள்ளார். இருவரும் நிர்வாண கோலத்தில் இருந்தபடி பேசிய வீடியோ காட்சியை அந்த பெண் பதிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் அந்த பெண், வாலிபரிடம் நிர்வாணமாக இருந்தபடி பேசிய வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்து ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி உள்ளார். ஆனால் அந்த பெண் மேலும் ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டினார். பணம் தராவிட்டால் வாலிபரின் நண்பர்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி விடுவேன் என அந்த பெண் மிரட்டினார்.

    தொடர்ந்து அந்த பெண் பணம் கேட்டு மிரட்டி வந்ததால் வாலிபர் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நட த்தி வருகிறார்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில்,

    கடந்த 2 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் நிர்வாண வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக சைபர் கிரைம் போலீசுக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    குறிப்பாக இளைஞர்கள் இது போன்ற இணைய வழி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள் என்றார்.

    • வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தார்.
    • போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், கஞ்சர பாலத்தை சேர்ந்தவர் கடற்படை அதிகாரி. இவரது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த பள்ளியில் உதவியாளராக இருப்பவர் சத்யா ராவ் (வயது 40). சிறுமி வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் சத்யா ராவ் வசித்து வருகிறார்.

    இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வருவதால் மாணவிக்கு பாடம் கற்றுக் கொடுக்கவும், ஓவியம் வரைய கற்றுக் கொடுக்கவும் சத்யா ரா வ் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

    மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை சத்யா ராவ் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தார்.

    வீட்டில் அவரது பெற்றோர் இருக்கும் நேரத்தில் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.

    மேலும் மாணவியின் நிர்வாண வீடியோவை தனது நண்பர்கள் 3 பேருக்கு அனுப்பி வைத்தார். அவர்களும் வீடியோவை காட்டி மாணவியை பணிய வைத்து கட்டாயமாக பலாத்காரம் செய்தனர்.

    கடந்த மாதம் 3-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பலமுறை மாணவியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    கடந்த 6-ந் தேதி மாணவி மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதனை கண்ட அவரது தாய் மாணவியிடம் விசாரித்தார். அப்போது நடந்த சம்பவம் அனைத்தையும் தனது தாயிடம் மாணவி தெரிவித்தார்.

    இதையடுத்து மாணவியின் தாய் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சத்யாராவ் மாணவியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டு சத்யாராவை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டேராடூனுக்கு செல்லும் யுகே 852 என்ற விஸ்தாரா விமானத்தில் இரு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • விமான பணி பெண்கள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.

    நடுவானில் பயணிகள் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையில் இருந்து டேராடூன் சென்ற விமானத்தில் கடந்த 25-ந்தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் பயணி ஒருவர் சக பயணியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். எவ்வளவு தைரியம் இருந்தால் எனது மகளை மிரட்டுவாய் என ஆவேசமாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    2 பயணிகளையும் விமான பணி பெண்கள் சமாதானப்படுத்தும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. 27 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனமான விஸ்தாராவின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பையில் இருந்து டேராடூனுக்கு செல்லும் யுகே 852 என்ற விஸ்தாரா விமானத்தில் இரு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விமான பணி பெண்கள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர். எஞ்சிய பயணம் அவர்களுக்கு சுமூகமாக அமைந்தது என கூறப்பட்டுள்ளது.

    • பழனி முருகன் கோவிலில் மட்டுமே நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது.
    • கடந்த சில நாட்களாக மூலவர் சிலையை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முக்கிய திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் செல்போனை மலைக்கோவிலில் பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அடிவாரத்திலேயே செல்போன் வைப்பறை தொடங்கப்பட்டு அதில் பக்தர்கள் தங்கள் செல்போனை கொடுத்து விட்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சில நாட்கள் மட்டுமே இது செயல்பாட்டில் இருந்தது. அதன் பிறகு பக்தர்கள் வழக்கம் போல் செல்போனுடன் மலைக்கோவிலுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.

    கோவிலில் தங்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுப்பது மட்டுமின்றி மூலவருக்கு செய்யப்படும் அபிஷேகம், ஆராதனைகளையும் வீடியோவாக எடுத்து தங்கள் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகின்றனர்.

    அதனுடன் தங்கள் குடும்பத்தினரையும் இணைத்து வீடியோ வெளியாவதால் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர். இக்கோவிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இதனால் இங்குள்ள முருகனை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆனால் கடவுள் வழிபாட்டில் அதன் புனிதத்தை உணராமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் இதனை பார்க்கும் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர். எனவே மலைக்கோவிலுக்கு செல்போன்கள் கொண்டு செல்வதை தடுக்க கோவில் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கோவில் வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தபோதும் அதனை பலர் கடைபிடிப்பதில்லை. இனிமேலாவது கோவில் நிர்வாகம் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத், மாநில அமைப்பாளர் செந்தில் தெரிவிக்கையில், பழனி முருகன் கோவிலில் மட்டுமே நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது. இச்சிலையை காண பல்லாயிரம் கி.மீ. நடை பயணமாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மூலவர் சிலையை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கும்பாபிஷேகத்துக்கு முன்பு வரை பழனி மலைக்கோவில் பகுதியில் மூலவர் சிலையை படம் பிடித்தால் செல்போன்கள் பறிக்கப்படும் என பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது அதை காண முடியவில்லை.

    மேலும் கால பூஜை வரும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் ஒரு சிலர் ஆர்வத்தால் மூலவரை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே இனிவரும் நாட்களில் இதுபோன்று மூலவர் படம் பிடித்தால் அவர்கள் செல்போன் பறிக்கப்பட வேண்டும் மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • இந்த ஆண்டில் மட்டும் 3 வாலிபர்கள் தலக்கோணா நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலியாகி உள்ளனர்.

    திருப்பதி:

    கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் சுமன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    திருப்பதி அடுத்த எரவாரி பாலம் பகுதியில் பிரபலமான தலக்கோணா நீர்வீழ்ச்சி உள்ளது. நேற்று முன்தினம் இங்கு சுமன் தனது நண்பர்களுடன் வந்தார்.

    பின்னர் தனது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் இறங்கி குளித்தனர். சுமன் பாறை மீது ஏறி நின்று நீர்வீழ்ச்சியில் குதிப்பதை வீடியோ எடுக்கும்படி தனது நண்பர்களிடம் கூறினார்.

    சக நண்பர்கள் சுமனை வீடியோ எடுத்த போது பாறையின் மேலிருந்து நீர்வீழ்ச்சியில் குதித்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக நீர்வீழ்ச்சியின் அடியில் இருந்த 2 பாறைகளுக்கு நடுவே சுமன் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் சுமன் வெளியே வராததால் பதற்றம் அடைந்தனர். அவரது நண்பர்கள் இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இரவு நேரம் ஆகிவிட்டதால் நேற்று காலை மீண்டும் சுமனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதளுக்கு பிறகு பாறைகளுக்கு இடையில் சிக்கிய சுமனை பிணமாக மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக எரவாரி பாலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுமன் பாறையின் மீது இருந்து நீர்வீழ்ச்சியில் குதிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    தலக்கோணா நீர்வீழ்ச்சியில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர்.

    நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கான எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வனத்துறையினர் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இந்த ஆண்டில் மட்டும் 3 வாலிபர்கள் தலக்கோணா நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலியாகி உள்ளனர். ஆபத்தாக உள்ள பாறைகளை நீக்கி சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளித்து விட்டு செல்லும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

    • நெருக்கமாக இருந்த படம், வீடியோவை காதலியின் கணவருக்கு அனுப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • மேலும் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

    மதுரை

    புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மதுரை கூடல்புதூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தார். திருமண ஆசை காட்டி அந்த பெண்ணுடன் பலமுறை கார்த்திகேயன் உல்லாசமாக இருந்துள்ளார்.

    அப்போது காதலிக்கு தெரியாமல் நெருக்கமாக இருக்கும்போது செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்தநிலையில் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. அதன் பின்பும் உல்லாசமாக இருக்க அந்த பெண்ணை கார்த்திகேயன் அழைத்துள்ளார்.

    ஆனால் அதற்கு அவரது காதலி மறுத்துவிட்டார். இதனால் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை காட்டி மிரட்டி காதலியை உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்துள்ளார்.

    இருப்பினும் அந்த பெண் சம்மதிக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணின் கணவருக்கும் அனுப்பியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

    • போலீஸ் அதிகாரிகளும் வழக்கை திசை திருப்பி பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.
    • ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர்

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி கீர்த்தி. இவர் படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் எதிரில் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் கடை மேல்வாடகை எடுத்து பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார்.

    கடை சம்மந்தமாக ராணுவ வீரர் பிரபாகரின் மனைவி கீர்த்தி என்பவருக்கும் ராமுவுக்கும் பிரச்சனை இருந்தாக கூறப்படுகிறது.

    இதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த கீர்த்தி மற்றும் ராமு ஆகியோர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றனர்.

    இதனைத் தொடர்ந்து கீர்த்தியின் கணவர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டார். அதில் நான் ராணுவத்தில் பணிபுரிகிறேன். கோவில் கடை சம்பந்தமாக ராமு என்பவர் அடியாட்களுடன் வந்து கடையை சூறையாடி என் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

    சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மண்டியிட்டு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவை வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்தனர். அதில் ராணுவ வீரர் மனைவியை யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

    சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.

    ராமு தரப்பினரை சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் செல்வராஜ் ஆகிய 2 பேரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இது குறித்து மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் ராணுவ வீரர் பிரபாகரன் படவேட்டில் உள்ள வினோத் என்பவருக்கு தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோவில் ராணுவ வீரர் கூறியிருப்பதாவது:-

    ஜீவா அடி ஆட்களை ஏன் அழைத்து வரவில்லை. நான் இந்த வீடியோவை வெளியிட்டதை 6 கோடி நபர்கள் பார்த்துள்ளனர்.

    இந்த வீடியோவை சில முக்கிய அரசியல் கட்சியினருக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கும். மேலும் யாராவது உங்களிடம் கேட்டால் மிகைப்படுத்தி கூறுங்கள் என தெரிவித்துள்ளார்.

    இந்த ஆடியோ வெளியானதால் ராணுவ வீரரின் வழக்கு திசை திரும்பியது. அதற்கு ஏற்ப போலீஸ் அதிகாரிகளும் வழக்கை திசை திருப்பி பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.

    ராணுவ வீரர் மனைவி கீர்த்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் பிரபாகரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடுக்கம்பாறை வந்ததார். அங்கு மனைவி கீர்த்தியை மாலை 5 மணி அளவில் டிர்சார்ஜ் செய்து அவரது கணவர் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது உடன் பெண் போலீசார் பாதுகாப்புக்காக அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.

    கண்ணமங்கலம் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது, தங்களை விசாரணைக்கு போலீசார் அழைத்து செல்வார்களோ? என பயந்து பிரபாகரன் பைக்கை திருப்பி கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர்.

    சதி திட்டம் தீட்டியதாக ராணுவ வீரர் பிரபாகரன், அவரது மனைவி கீர்த்தி மற்றும் செல்போனில் பேசிய அவரது நண்பர் வினோத் ஆகியோர் மீது சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் செல்போனில் பேசி சதி திட்டம் தீட்டிய வினோத் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர். 

    ×